Just In
- 11 min ago கியா களமிறக்கும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! பெட்டி கடைல கடலை மிட்டாய் விக்கற மாதிரி விக்க போகுது!
- 2 hrs ago இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- 2 hrs ago இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
- 3 hrs ago எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!
Don't Miss!
- Technology நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட் மாஸ்டர் டா.. ChatGPT-க்கு செக் வச்ச Google.. இனி மொபைல் யூசர்கள் Gemini பக்கம்!
- News மயிலாடுதுறையில் ஆச்சரியம்.. அந்த "வைக்கோல் மூட்டை".. ஆஹா, வைத்தீஸ்வரன் கோயில் தையல் நாயகி.. பரவசம்
- Lifestyle உங்கள் கால் நகங்களை அழகாக மாற்ற அற்புதமான டிப்ஸ்..
- Movies Pandian stores 2: குமரனை சம்பவம் செய்ய ஒன்றுசேரும் சகோதரர்கள்.. தடுக்க பரிதவிக்கும் பழனிவேல்!
- Finance இனி பீட்சா முதல் பெப்சி வரை இவர்கள் கையில் தான்..!! வாரிசு கைக்கு மாறும் ஆர் ஜே கார்ப்பரேஷன்..!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இந்தியாவில் களமிறங்கும் சீனாவின் எலக்ட்ரிக் ரிக்ஷா... எப்படியுள்ளது பார்த்தீர்களா...
இந்திய பேட்டரி தயாரிப்பு நிறுவனமான எக்ஸிடே இண்டஸ்ட்ரீஸ் நியோ எலக்ட்ரிக் ரிக்ஷா என்கிற மூன்று சக்கர வாகனத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இதன் முதற்கட்டமாக மேற்கு வங்காளம், உத்தரபிரதேசம் உள்பட வடக்கிழக்கு மாநிலங்களில் இந்த ரிக்ஷாவை விற்பனைக்கு கொண்டுவரவுள்ளது.
வடக்கிழக்கு மாநிலங்களில் முதலில் விற்பனையை தொடங்குவதற்கு முக்கிய காரணம், அம்மாநிலங்களை ஒட்டியுள்ள சீனாவில் தான் இத்தகைய எலக்ட்ரிக் ரிக்ஷாக்களின் தொழிற்சாலைகளை எக்ஸிடே நிறுவனம் நிறுவியுள்ளது. மேலும் இந்த ரிக்ஷாக்களின் தொழிற்சாலைகளை இன்னும் சில நாட்களில் இந்தியாவில் தொடங்கவும் இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
தற்சமயம் சீனாவில் தயாரிக்கப்படும் இந்த ரிக்ஷாக்களுக்கு 15-20 சதவீத தயாரிப்பு பொருட்கள் இந்தியாவில் இருந்து தான் கொண்டு செல்லப்படுகின்றன. இந்த இந்திய அறிமுகம் குறித்து எக்ஸிடே இண்டஸ்ட்ரீஸின் எம்டி மற்றும் சிஇஓ கௌதம் சாட்டர்ஜி கூறுகையில், கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் எலக்ட்ரிக் ரிக்ஷாக்களின் விற்பனை ஆச்சர்யப்படத்தக்க வகையில் முன்னேற்றம் கண்டுள்ளது.
நாங்கள் இத்தகைய எலக்ட்ரிக் ரிக்ஷாக்களை தயாரிக்க துவங்கியதில் இருந்தே அடர்த்தியான ஈயம்-அமிலம் கலவையால் தான் பேட்டரியை தான் அதில் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் தற்போது இந்த பேட்டரியுடன் நவீன தொழிற்நுட்பத்தை சேர்த்து பயன்படுத்த தீர்மானித்துள்ளோம். இதனால் பேட்டரியின் சார்ஜ் காலத்தை அதிகரிக்கலாம் என கூறினார்.
இந்தியாவில் இந்த நியோ எலக்ட்ரிக் ரிக்ஷாக்களை தயாரிக்கும் தொழிற்சாலை விரைவில் கொல்கத்தாவிற்கு அருகேயுள்ள டன்குனி ப்ளான்ட்டில் துவங்கவுள்ளது. இந்த தொழிற்சாலையின் மூலம் ஒரு வருடத்திற்கு சுமார் 15,000 யூனிட் எலக்ட்ரிக் ரிக்ஷாக்களை தயாரிக்க முடியுமாம்.
இந்த தொழிற்சாலையில் தயாரிக்கப்படவுள்ள ரிக்ஷாக்களின் பேட்டரி குறித்த தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை. நமக்கு தெரிந்த வகையில், இந்த பேட்டரி லித்தியம்-இரும்பு கலவையில் தான் தயாரிக்கப்படும். எக்ஸிடே நிறுவனம் இந்த எலக்ட்ரிக் ரிக்ஷாக்களுக்கு சுலப மாத தவணையின் மூலம் எளிய வகையில் ரிக்ஷாக்களுக்கு உரிமையாளர் ஆகும் திட்டத்தையும் அறிமுகப்படுத்தவுள்ளது.
இத்தகைய ரிக்ஷாக்களில் பின்புறத்தில் நடக்கும் விஷயங்களை பார்பதற்கு கேமிராவையும் பாதுகாப்பிற்காக வழங்கப்பட்டுள்ளது. இதற்கு கூடுதலாக கண்ணாடி இருந்தாலும் எல்சிடி திரையுடன் கூடிய கேமிராவையும் கூடுதல் அம்சமாக எக்ஸிடே நிறுவனம் வழங்கியுள்ளது.
இந்த சிறப்பம்சத்துடன் எல்சிடி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், எஃப்எம் ரேடியோ டிரான்ஸ்மிட்டர், மொபைல் போனை சார்ஜ் செய்வதற்காக யூஎஸ்பி போன்ற தொழிற்நுட்பங்களும் வழங்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு விஷயங்களாக, உயர்தர இரும்பால் உருவாக்கப்பட்ட ரிக்ஷாவின் முன்புறம், வலுமையான ஏபிஎஸ் ரூஃப் அமைப்பு போன்றவை உள்ளன.
எக்ஸிடே இண்டஸ்ட்ரீஸின் இயக்குனர் அருண் மிட்டால் இதுபற்றி கூறுகையில், எங்களது எலக்ட்ரிக் ரிக்ஷா தயாரிக்கும் கம்பெனியில் உள்ள இ-ரிக்ஷா ஆப்ரேட்டர்ஸ் பல ஆண்டுகளாக எங்களுடன் பணியாற்றி வருகின்றனர். அவர்களின் அறிவுரையின்படியே இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையில் இந்த இ-ரிக்ஷாக்கள் தயாரிக்கப்படவுள்ளன.
இந்த ரிக்ஷாக்களில் உள்ள பின்புறத்தை பார்க்கும் வகையிலான கேமிரா, எல்சிடி இன்ஸ்ட்ருமெண்ட் அமைப்பு மற்றும் பாதுகாப்பிற்காக கொடுக்கப்பட்டுள்ள ஏபிஎஸ் ரூஃப், ரிக்ஷாவின் முன்புற பகுதியை தயாரிக்க பயன்படும் உயர்தர இரும்பு போன்றவை முழுக்க முழுக்க எக்ஸிடே நியோ நிறுவனத்தால் தான் தயாரிக்கப்படுகிறது என கூறினார்.
மூன்று சக்கர வாகன ரிக்ஷாவில் இத்தனை அம்சங்களை முதன்முதலாக பொருத்தியுள்ள நிறுவனம் எக்ஸிடே நிறுவனம் தான். இந்தியா சிறுக சிறுக பெட்ரோல் இயக்கத்தில் இருந்து சுற்றுசூழலுக்கு ஏற்ற வகையில் பசுமை வாகனத்திற்கு மாறி வருகிறது. எக்ஸிடே நிறுவனத்தை போல் மேலும் பல நிறுவனங்களும் தங்களது எலக்ட்ரிக் வாகனங்கள் மூலம் இவி ஆட்டோமொபைல் மார்கெட்டிற்கு மாறி வருகின்றன என்பது நல்ல விஷயமே.
-
10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
-
மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
-
பைக்க விட அதிக மைலேஜ் தரும் ஹூண்டாய் கார்.. பொய் சொல்லல.. ஸ்ட்ராங்கான ஆதாரத்தோடதான் சொல்றாங்க!