Just In
- 34 min ago காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- 2 hrs ago இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- 3 hrs ago வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- 3 hrs ago பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
Don't Miss!
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- News PAN எண் பழசு.. ரூ. 11 கோடியை உடனே கட்டுங்க.. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்!
- Movies விஜய் அட்டாக் பண்ணி அஜித் பண்ண சொன்ன பாட்டுதான் அது.. இசையமைப்பாளர் பரத்வாஜ் ஓபன் பேட்டி!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
இந்தியாவில் களமிறங்கும் சீனாவின் எலக்ட்ரிக் ரிக்ஷா... எப்படியுள்ளது பார்த்தீர்களா...
இந்திய பேட்டரி தயாரிப்பு நிறுவனமான எக்ஸிடே இண்டஸ்ட்ரீஸ் நியோ எலக்ட்ரிக் ரிக்ஷா என்கிற மூன்று சக்கர வாகனத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இதன் முதற்கட்டமாக மேற்கு வங்காளம், உத்தரபிரதேசம் உள்பட வடக்கிழக்கு மாநிலங்களில் இந்த ரிக்ஷாவை விற்பனைக்கு கொண்டுவரவுள்ளது.
வடக்கிழக்கு மாநிலங்களில் முதலில் விற்பனையை தொடங்குவதற்கு முக்கிய காரணம், அம்மாநிலங்களை ஒட்டியுள்ள சீனாவில் தான் இத்தகைய எலக்ட்ரிக் ரிக்ஷாக்களின் தொழிற்சாலைகளை எக்ஸிடே நிறுவனம் நிறுவியுள்ளது. மேலும் இந்த ரிக்ஷாக்களின் தொழிற்சாலைகளை இன்னும் சில நாட்களில் இந்தியாவில் தொடங்கவும் இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
தற்சமயம் சீனாவில் தயாரிக்கப்படும் இந்த ரிக்ஷாக்களுக்கு 15-20 சதவீத தயாரிப்பு பொருட்கள் இந்தியாவில் இருந்து தான் கொண்டு செல்லப்படுகின்றன. இந்த இந்திய அறிமுகம் குறித்து எக்ஸிடே இண்டஸ்ட்ரீஸின் எம்டி மற்றும் சிஇஓ கௌதம் சாட்டர்ஜி கூறுகையில், கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் எலக்ட்ரிக் ரிக்ஷாக்களின் விற்பனை ஆச்சர்யப்படத்தக்க வகையில் முன்னேற்றம் கண்டுள்ளது.
நாங்கள் இத்தகைய எலக்ட்ரிக் ரிக்ஷாக்களை தயாரிக்க துவங்கியதில் இருந்தே அடர்த்தியான ஈயம்-அமிலம் கலவையால் தான் பேட்டரியை தான் அதில் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் தற்போது இந்த பேட்டரியுடன் நவீன தொழிற்நுட்பத்தை சேர்த்து பயன்படுத்த தீர்மானித்துள்ளோம். இதனால் பேட்டரியின் சார்ஜ் காலத்தை அதிகரிக்கலாம் என கூறினார்.
இந்தியாவில் இந்த நியோ எலக்ட்ரிக் ரிக்ஷாக்களை தயாரிக்கும் தொழிற்சாலை விரைவில் கொல்கத்தாவிற்கு அருகேயுள்ள டன்குனி ப்ளான்ட்டில் துவங்கவுள்ளது. இந்த தொழிற்சாலையின் மூலம் ஒரு வருடத்திற்கு சுமார் 15,000 யூனிட் எலக்ட்ரிக் ரிக்ஷாக்களை தயாரிக்க முடியுமாம்.
இந்த தொழிற்சாலையில் தயாரிக்கப்படவுள்ள ரிக்ஷாக்களின் பேட்டரி குறித்த தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை. நமக்கு தெரிந்த வகையில், இந்த பேட்டரி லித்தியம்-இரும்பு கலவையில் தான் தயாரிக்கப்படும். எக்ஸிடே நிறுவனம் இந்த எலக்ட்ரிக் ரிக்ஷாக்களுக்கு சுலப மாத தவணையின் மூலம் எளிய வகையில் ரிக்ஷாக்களுக்கு உரிமையாளர் ஆகும் திட்டத்தையும் அறிமுகப்படுத்தவுள்ளது.
இத்தகைய ரிக்ஷாக்களில் பின்புறத்தில் நடக்கும் விஷயங்களை பார்பதற்கு கேமிராவையும் பாதுகாப்பிற்காக வழங்கப்பட்டுள்ளது. இதற்கு கூடுதலாக கண்ணாடி இருந்தாலும் எல்சிடி திரையுடன் கூடிய கேமிராவையும் கூடுதல் அம்சமாக எக்ஸிடே நிறுவனம் வழங்கியுள்ளது.
இந்த சிறப்பம்சத்துடன் எல்சிடி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், எஃப்எம் ரேடியோ டிரான்ஸ்மிட்டர், மொபைல் போனை சார்ஜ் செய்வதற்காக யூஎஸ்பி போன்ற தொழிற்நுட்பங்களும் வழங்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு விஷயங்களாக, உயர்தர இரும்பால் உருவாக்கப்பட்ட ரிக்ஷாவின் முன்புறம், வலுமையான ஏபிஎஸ் ரூஃப் அமைப்பு போன்றவை உள்ளன.
எக்ஸிடே இண்டஸ்ட்ரீஸின் இயக்குனர் அருண் மிட்டால் இதுபற்றி கூறுகையில், எங்களது எலக்ட்ரிக் ரிக்ஷா தயாரிக்கும் கம்பெனியில் உள்ள இ-ரிக்ஷா ஆப்ரேட்டர்ஸ் பல ஆண்டுகளாக எங்களுடன் பணியாற்றி வருகின்றனர். அவர்களின் அறிவுரையின்படியே இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையில் இந்த இ-ரிக்ஷாக்கள் தயாரிக்கப்படவுள்ளன.
இந்த ரிக்ஷாக்களில் உள்ள பின்புறத்தை பார்க்கும் வகையிலான கேமிரா, எல்சிடி இன்ஸ்ட்ருமெண்ட் அமைப்பு மற்றும் பாதுகாப்பிற்காக கொடுக்கப்பட்டுள்ள ஏபிஎஸ் ரூஃப், ரிக்ஷாவின் முன்புற பகுதியை தயாரிக்க பயன்படும் உயர்தர இரும்பு போன்றவை முழுக்க முழுக்க எக்ஸிடே நியோ நிறுவனத்தால் தான் தயாரிக்கப்படுகிறது என கூறினார்.
மூன்று சக்கர வாகன ரிக்ஷாவில் இத்தனை அம்சங்களை முதன்முதலாக பொருத்தியுள்ள நிறுவனம் எக்ஸிடே நிறுவனம் தான். இந்தியா சிறுக சிறுக பெட்ரோல் இயக்கத்தில் இருந்து சுற்றுசூழலுக்கு ஏற்ற வகையில் பசுமை வாகனத்திற்கு மாறி வருகிறது. எக்ஸிடே நிறுவனத்தை போல் மேலும் பல நிறுவனங்களும் தங்களது எலக்ட்ரிக் வாகனங்கள் மூலம் இவி ஆட்டோமொபைல் மார்கெட்டிற்கு மாறி வருகின்றன என்பது நல்ல விஷயமே.
-
ரோட்ல இந்த நிறுவனத்தோட வண்டி நின்னா எல்லாரும் ஒரு நிமிஷம் நின்னு பாப்பாங்க! ஜேசிபி செய்த புதிய சாதனை!
-
6ம் மாசத்துக்கு அப்புறம் எப்பே வேணும்னாலும் இந்த காரை இந்தியாவில் எதிர்பார்க்கலாம்! சிட்ரோன் பசால்டு வெளியீடு!
-
மெழுகு சிலை மாதிரி இருக்காங்க... இவங்க அந்த படத்துல நடிச்சவங்களா... வீடியோவை கண் இமைக்காமல் பார்க்கும் இளசுகள்