Just In
- 10 min ago இந்த காரை எத்தன பேரு தங்களுக்கு பிடிச்சவங்களுக்கு பரிசா கொடுக்க போறாங்களோ! அஸ்டன் மார்ட்டின் வேன்டேஜ் அறிமுகம்
- 1 hr ago வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
- 4 hrs ago ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- 5 hrs ago ஓலா, ஏத்தர் எல்லாம் ஓரமா போ! ஆம்பியர் நிறுவனத்தின் புதிய இவி 30ம் தேதி வருது!
Don't Miss!
- Finance இனி ரீசார்ஜ் செலவு மிச்சம்தான் போங்க.. வாட்ஸ்அப்-இன் புதிய அப்டேட்.. செம!
- Lifestyle 300 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட முகலாயர்கள் அவங்க ஆட்சியில் இந்தியாவின் எந்தெந்த விஷயங்களை மாற்றினார்கள் தெரியுமா?
- News பாதி உங்களுக்கு..மீதி எங்களுக்கு? அணைந்த அடுப்பை பற்ற வைத்த காங். தலை? டபுள் சிக்ஸ் அடித்த பாஜக!
- Technology ரூ.56,999 க்கு அறிமுகமான OnePlus போனை ரூ.19,149 க்கு விற்கும் Amazon.. ஆல் ஏரியாவிலும் ஆர்டர் பறக்குது!
- Movies ரஜினிகாந்த்தின் கூலி.. லோகேஷ் கனகராஜுக்கு இவ்வளவு சம்பளமா?.. அய்யோ எங்கேயோ போய்ட்டாரே
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பாஸ்ட்டேக் கட்டாயம்: ஜனவரி 15ம் தேதி வரை வாகன உரிமையாளர்களுக்கு சிறிய தளர்வு... என்ன தெரியுமா?
பாஸ்ட்டேக் விஷயத்தில், வரும் ஜனவரி 15ம் தேதி வரை வாகன உரிமையாளர்களுக்கு சிறிய தளர்வு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
டோல்கேட்களில் கட்டணம் செலுத்த, அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்ட்டேக் கட்டாயம் எனவும், டிசம்பர் 1 முதல் இந்த உத்தரவு அமலுக்கு கொண்டு வரப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்ட்டேக் கட்டாயம் என்ற உத்தரவு கடந்த டிசம்பர் 1ம் தேதியன்று அமலுக்கு வரவில்லை.
அதற்கு பதிலாக டிசம்பர் 15ம் தேதி முதல் பாஸ்ட்டேக் கட்டாயம் என்ற உத்தரவு அமலுக்கு வரும் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டது. இதன்படி பாஸ்ட்டேக்கிற்கு மாறுவதில் வாகன உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் சனிக்கிழமையான நேற்றுடன் (டிசம்பர் 14) முடிவுக்கு வந்தது.
அதே சமயம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தபடி இன்று (டிசம்பர் 15) முதல் அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்ட்டேக் கட்டாயமாகியுள்ளது. பாஸ்ட்டேக் திட்டம் மூலம் வாகனங்களின் தடையற்ற இயக்கம் உறுதி செய்யப்படும். டோல்கேட்களில் கட்டணம் செலுத்துவதற்காக நீங்கள் நீண்ட வரிசையில் காத்து கொண்டிருக்க தேவையில்லை.
இதன் மூலமாக உங்கள் நேரம் மிச்சமாகும். மேலும் உங்கள் வாகனத்தின் எரிபொருளும் சேமிக்கப்படும். இது சுற்றுச்சூழலுக்கும் நன்மை பயக்கும் என்பது கூடுதல் சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது. மேலும் கட்டணம் செலுத்தியதற்காக வாகன உரிமையாளர்களுக்கு ரசீது வழங்க தேவையில்லை என்பதால், காகித பயன்பாட்டையும் பாஸ்ட்டேக் திட்டம் குறைக்கும்.
டோல்கேட்களில் ரொக்கமாக கட்டணம் செலுத்தி செல்வதால், சில சமயங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அத்துடன் கட்டணம் செலுத்துவது தொடர்பாக வாகன ஓட்டிகளுக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே அவ்வப்போது தகராறு ஏற்படுகிறது. இதனால் மற்ற வாகன ஓட்டிகளும் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியதாகி விடுகிறது.
ஆனால் பாஸ்ட்டேக் மூலமாக இந்த பிரச்னைகள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த அதிரடி முடிவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனால் டோல்கேட்களை அகற்றும்படி வலியுறுத்தி வருபவர்கள் மத்தியில், அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்ட்டேக் கட்டாயம் என்ற உத்தரவு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
எனினும் எதிர்ப்புகளை பொருட்படுத்தாமல் அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்ட்டேக் கட்டாயமாகியுள்ளது. இது டிஜிட்டல் பணி பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கப்பதாகவும் அமையும். அதே நேரத்தில் பாஸ்ட்டேக் இல்லாத வாகனங்களுக்கு டோல்கேட்களில் இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
எனவே உங்கள் வாகனத்திற்கு பாஸ்ட்டேக் இல்லாவிட்டால் சிக்கல்தான். நீங்கள் இன்னமும் பாஸ்ட்டேக்கை பெறவில்லை எனும் பட்சத்தில், உடனடியாக அதனை வாங்கி கொள்வது நல்லது. ஏனெனில் அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்ட்டேக் கட்டாயம் என்ற உத்தரவை மிக கடுமையாக அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
சிறிய தளர்வு: ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி இன்று (டிசம்பர் 15) முதல் பாஸ்ட்டேக் கட்டாயம்தான் என்றாலும், வாகன உரிமையாளர்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. 25 சதவீத டோல் லேன்களில் தொடர்ந்து ரொக்கமாக கட்டணம் ஏற்கப்படும் என்பதுதான் அந்த செய்தி. ஆனால் அதுவும் வரும் ஜனவரி 15ம் தேதி வரை மட்டும்தான்.
ஒவ்வொரு டோல்கேட்டிலும் குறைந்தபட்சம் 75 சதவீத லேன்கள் பாஸ்ட்டேக் லேன்களாக இருக்க வேண்டும் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதே சமயம் 25 சதவீத லேன்கள் மட்டும் ஹைப்ரிட் லேன்களாக இருக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஒரு மாத காலத்திற்கு இவை ஹைப்ரிட் லேன்களாகவே இருக்கும்.
அதாவது வரும் ஜனவரி 15ம் தேதி வரை இந்த லேன்களில் ரொக்கமாக கட்டணம் ஏற்கப்படும். எனவே பாஸ்ட்டேக் வாங்குவதற்கு வாகன ஓட்டிகளுக்கு இன்னும் சற்று கால அவகாசம் உள்ளது. எனினும் நீங்கள் தற்போது வரை பாஸ்ட்டேக் வாங்கவில்லை எனில், காலதாமதம் செய்யாமல் உடனடியாக அதனை வாங்கி விடுவதுதான் உங்களுக்கு அனைத்து வழிகளிலும் நன்மை பயப்பதாக இருக்கும்.
-
40அடி நீள சொகுசு படகை வாங்கினாரா நடிகர் மாதவன்! ஒட்டுமொத்த இந்தியாவையும் ஆச்சரியத்துல மூழ்க வச்சுட்டாரு!
-
2019ல் வேணும்னே கடலில் மூழ்கடிக்கப்பட்ட விமானம்.. இப்ப அதோட நிலைமை என்ன? ஏன் அதை கடலில் தள்ளி விட்டாங்க?
-
புதுசா வாங்கி காசை வேஸ்ட் பண்ணாதீங்க! பைக் ஓட்டி படிக்க செகன்ட் ஹேண்டில் வாங்க பெஸ்ட் பைக்குகள் இது தான்!