Just In
- 4 min ago கேரளாவுக்கு சென்றால் இந்த சொர்க்கத்தை மட்டும் அனுபவிக்காம வந்துடாதீங்க!! வெறும் ரூ.20இல் கிடைக்குது!
- 24 min ago அரண்மனைக்கு இணையான வசதி கொண்ட வாகனம்.. இதை மஹிந்திரா தயாரிக்க போகுதா! இப்பவே சந்தோஷம் தாங்கலை!
- 2 hrs ago கேரளாவில் தவெக தலைவர் விஜய்யை பார்க்க இவ்வளவு கூட்டமா? கேரளாவுல நின்னா வெற்றி கன்ஃபார்ம்!
- 4 hrs ago கொஞ்ச நேரத்துல உயிர் போய்ட்டு வந்துச்சு!! தப்பிக்க, பைக்கில் இதையெல்லாம் டிரை செய்து பாருங்க!
Don't Miss!
- Movies டாஸ்மாக்ல குடிச்சாலும் சரி.. ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்ல குடிச்சாலும் சரி.. தினந்தோறும் நாகராஜ் பளிச்!
- News ஏப்ரல் மாத ராசி பலன் 2024: சூரியன்.. சுக்கிரன் உச்சம்.. கோடிகளை குவிக்கும் 4 ராசிக்காரர்கள்
- Lifestyle இந்த 4 ராசி பெண்களுக்கு அவர்களின் பெண் நண்பர்களை விட ஆண் நண்பர்களைத்தான் பிடிக்குமாம்... உங்க ராசி என்ன?
- Finance டிசிஎஸ் ஊழியர்களுக்கான சம்பளம் உயர்வு.. வந்தது முக்கிய அறிவிப்பு..!!
- Technology ரீஃபண்ட் கொடுத்தது ஞாபகம் இருக்குல.. விற்பனைக்கு வந்தது OnePlus 12R-ன் ஸ்பெஷல் எடிஷன்.. நம்பி வாங்கலாமா?
- Sports இனி வீட்டுல தான் உட்காரணும்.. ஐபிஎல் டீமை நம்பி ஏமாந்த ஸ்ரேயாஸ் ஐயர்.. சோலியை முடித்த பிசிசிஐ
- Education கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ள எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
கோவில் ஊர்வலத்தில் புகுந்த ஆம்புலன்ஸ் - ஊர்மக்கள் செய்த காரியம் என்ன தெரியுமா - வைரல் வீடியோ!
கேரளாவில் கோயில் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அதிவேகமாக ஆம்புலன்ஸ் புகுந்ததது குறித்த வீடியோக் காட்சி ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.
இந்தியச் சாலைகளில் மட்டும் தான் ஆம்புலன்ஸுக்கு வழிவிடாமல் செல்வது, ஆம்புலன்ஸ் பின்னாடியேச் சென்று சிக்னலைக் கடப்பது உள்ளிட்ட பல்வேறு அவலக் காட்சிகளைக் காண முடியும். ஆம்புலன்ஸில் இருப்பது ஒரு உயிர் என்றும் பார்க்காமல் இதுபோன்ற இழிவான செயல்களில் பலர் ஈடுபடுவது உண்டு. ஏன் நம்மில் பலரும் இந்த கேவலமானச் செயலைச் செய்வதுண்டு.
ஏற்கனவே இந்தியச் சாலையில் பெருகி வரும் வாகனங்களால், அலுவலக நேரங்களில் செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் பெரும் இன்னல்களைச் சந்தித்து வருகின்றன. அதேசமயம், ஆன்புலன்ஸுகளுக்கு பெரும் சிக்கலாக சிக்னல்கள் இருக்கின்றன. நீண்ட நேரம் சிக்னலில் காத்திருக்கும் சூழலினாலே பலர் அபாய நிலையை எட்டுவிடிகின்றனர்.
இதுபோன்ற இன்னல்களைத் தவிர்க்க, மேலை நாடுகளில் அவசர காலங்களில் வாகனங்கள் செல்வதற்கென தனிப்பாதைகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்தியாவில் அதுபோன்ற பாதைகள் இல்லாமல் இருப்பது வேதனையளிக்கிறது. டிஜிட்டல் மயமாதலை ஊக்குவிக்கும் இந்தியா, இதுபோன்று உயிர்காக்கும் நடவடிக்கைளை மேற்கொள்ளாமல் இருப்பது அலட்சியத்தின் மறு உருவாமக பார்க்கப்படுகிறது.
இவ்வாறு, ஆம்புலன்ஸுகளுக்கு அவலமான சூழல் நிலவி வரும்நிலையில், கேரள மாநிலத்தில் ஓர் நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. இதுகுறித்த வீடியோ தற்போது முகப்புத்தக பக்கத்தில் வைரலாகி வருகிறது.
வீடியோவில், உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கும் நோயாளிக்காக, ஆம்புலன்ஸ் ஒன்று அதிவேகமாக குறுகலான பாதையில் பறந்து சென்றுக்கொண்டிருக்கிறது. அதேசமயம், அந்த பாதையில் கோயில் ஒன்றின் திருவிழாவும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. திருவிழாவை முன்னிட்டு ராட்சத அளவிலான தேர்கள் அந்த பாதையில் வடம் இழுக்கப்பட்டு வருகின்றன.
அவ்வாறு, ஒன்றன் பின் ஒன்றாக தேர் வர, அதனை பெரும்திரளான மக்கள் கூட்டம் வடம்பிடித்து இழுத்து செல்கிறது. அப்போது, அந்த சாலையில் ஆம்புலன்ஸ் நுழைகிறது. சாலை மிகவும் குறுகலாக இருந்த காரணத்தாலும், மக்கள் கூட்டம் அதிகமாக இருந்த காரணத்தாலும், சீறிப்பாய்ந்து வந்த ஆம்புலன்ஸ், சற்று வேகத்தைக் குறைத்து செல்லக்கூடிய சூழல் ஏற்படுகிறது.
இதைத்தொடர்ந்து, தேரினை இழுத்து வந்த பக்தர்கள் தேரினை சற்று ஓரமாக இழுத்து, சாலையில் ஓரத்தில் இருந்த மரக்கிளைகளை நகர்த்தி ஆம்புலன்ஸுக்கு வழிவிட்டனர். இவ்வாறு, பதினைந்துக்கும் மேற்பட்ட தேர்களை அந்த ஆம்புலன்ஸ் கடக்கிறது.
ஆனால், எந்த இடத்திலும் 5 விநாடிகளுக்கும் மேலாக அந்த ஆம்புலன்ஸ் நிற்கவில்லை. இதற்கு, அந்த ஆம்புலன்ஸ் டிரைவரின் சாமார்த்தியம் ஒரு புறம் இருந்தாலும், அங்கு கூடியிருந்த பக்தர்களின் பங்கும் முக்கிய பங்களிக்கிறது.
தேரை இழுத்துச் சென்ற பக்தர்கள் ஒவ்வொருவரும் ஆம்புலன்ஸ் தடையின்றி செல்வதற்கு ஏற்ப வழியை உடனடியாக ஏற்படுத்திக் கொடுத்தனர். இதனால், அந்த ஆம்புலன்ஸ் வாகனம் நிற்காமல் சரசரவென பறந்து சென்றது. இந்த காட்சிகள் அனைத்தும் ஆம்புலன்ஸின் டேஸ்போர்டில் பொருத்தப்ட்டிருந்த கேமிராவில் பதிவாகி இருந்தது.
தற்போது இந்த வீடியோக் காட்சிகள்தான், முகப்புத்தகம் உள்ளிட்ட இணையதள பக்கங்களில் வைரலாகி வருகிறது. இதில், ஆம்புலன்ஸை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் மற்றும் தேரை இழுத்துச் சென்ற பக்தர்கள் அனைவருக்கும் நெட்டிசன்கள் உள்பட பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
-
ரயில் கிளம்பும் போது டக்குன்னு ஒரு ஆட்டம் கொடுக்குமே அது ஏன் தெரியுமா?
-
ஒன்னு கூடிட்டாங்க! நிஸான்-ஹோண்டா இணைவிற்கு இதுதான் காரணமா! ஜப்பான் பசங்க 2பேரும் ஒன்னு கூடி என்ன பண்ண போறாங்க!
-
இனி தடுக்கி விழுந்தா கூட இவங்க ஷோரும்லதான் விழுகணும்! மாருதி, டாடாக்கு போட்டியா கடை திறக்க போறது அவங்களா!