Just In
- 15 min ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- 34 min ago எவ்வளவு பெரிய கிரிக்கெட்டர், குழந்தை போல் ராயல் என்ஃபீல்டு பைக்கில் ரைடு!! ஓட்டி பார்த்த பின் அவர் சொன்னது...
- 2 hrs ago உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- 2 hrs ago தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
Don't Miss!
- News சென்னையில் பிரபல ‛பப்’ மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து.. மெட்ரோ பணிகள் காரணமா! பகீர் தகவல்
- Sports ரியான் பராக் இல்லடா.. இது பேட்ட பராக்.. கடைசி 5 ஓவரில் 77 ரன்கள்.. டெல்லிக்கு ஷாக் கொடுத்த ராஜஸ்தான்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
கொரோனா பரவுவதை தடுக்க அதிரடி... சூப்பர் டெக்னாலஜியை கையில் எடுத்து மாஸ் காட்டும் போக்குவரத்து துறை
கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக, சூப்பரான டெக்னாலஜி ஒன்றை போக்குவரத்து துறை கையில் எடுத்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் (கோவிட்-19) பரவுவதை தடுக்கும் நோக்கில், கடந்த மார்ச் 24ம் தேதி முதல் முழு பொது முடக்கத்தை மத்திய அரசு அமலுக்கு கொண்டு வந்தது. இதன் காரணமாக அன்றைய தினத்தில் இருந்து பஸ், ரயில், விமானம், ஆட்டோ, டாக்ஸி என அனைத்து வகையான பொது போக்குவரத்து வாகனங்களின் சேவைகளுக்கும் அதிரடியாக தடை விதிக்கப்பட்டது.
தனியார் கார் மற்றும் டூவீலர் போன்ற வாகனங்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும், கடுமையான கட்டுப்பாடுகள் அமலில் இருந்தன. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வாகனங்களை இயக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த உத்தரவை மீறி இயக்கப்பட்ட பல லட்சக்கணக்கான வாகனங்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
எனினும் தற்போது நிலைமை மாறி விட்டது. கொரோனா வேகம் எடுத்து வரும் நிலையிலும், பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு விட்டன. இதன் ஒரு பகுதியாக பொது போக்குவரத்து வாகனங்களை இயக்குவதற்கும் மீண்டும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தற்போது பஸ், ஆட்டோ, டாக்ஸி உள்ளிட்ட வாகனங்கள் இயங்குகின்றன.
ஆனால் பொது போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்வதற்கு மக்கள் அச்சப்படுகின்றனர். கொரோனா தொற்று ஏற்பட்டு விடுமோ? என்ற அச்சத்தில், பொது போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்வதற்கு பதிலாக சொந்த கார் மற்றும் பைக் உள்ளிட்ட வாகனங்களில் பயணம் செய்வதைதான் மக்கள் பாதுகாப்பானதாக கருதுகின்றனர்.
எனினும் வேறு வழியில்லை என்னும் நிலையில், பொது போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்தாக வேண்டிய கட்டாயம் ஏராளமானோருக்கு இருக்கவே செய்கிறது. அவர்களுக்காக பொது போக்குவரத்து வாகனங்களின் பாதுகாப்பை அதிகரிக்க தேவையான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக ஆட்டோ, டாக்ஸி ஆகிய வாகனங்களில் பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்தப்படுகின்றன. டிரைவர் மற்றும் மற்ற பயணிகளிடம் இருந்து இந்த பிளாஸ்டிக் கவர்கள் ஒருவரை தனிமைப்படுத்துகின்றன. இந்த சூழலில், கொரோனா வைரஸிடம் இருந்து பாதுகாத்து கொள்ளும் விதமாக உத்தர பிரதேச மாநிலத்தில் அதிரடி தொழில்நுட்பம் ஒன்று பயன்படுத்தப்படவுள்ளது.
லக்னோ நகரில் உள்ள பஸ் டெப்போக்களின் ஏசி காத்திருப்பு அறைகளில் கோவிட்கோட் தொழில்நுட்பத்தை (Covidcoat Technology) பயன்படுத்துவதற்கு, உத்தர பிரதேச மாநில சாலை போக்குவரத்து கழகம் (Uttar Pradesh State Road Transport Corporation - UPSRTC) தற்போது அனுமதி வழங்கியிருக்கிறது.
அதாவது மேற்பரப்புகளில் நுண்ணுயிர் கொல்லிகள் மூலம் கோட்டிங் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 3 மாதங்களுக்கு இலவசமாக சோதனை அடிப்படையில் இது செயல்படுத்தப்படும். இத்திட்டம் பயனுள்ளதாக இருப்பது கண்டறியப்பட்டால், மற்ற பஸ் டெப்போக்களிலும் பயன்படுத்தப்படும் என உயர் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்த தொழில்நுட்பம் எவ்வாறு செயல்படும்? என்ற விளக்கத்தை, தனியார் நிறுவனம் ஒன்று அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளது. இரும்பு, பிளாஸ்டிக், ஜவுளி, பர்னிச்சர் மற்றும் லேப்டாப்கள் ஆகியவற்றின் மேற்பரப்புகளில், நுண்ணுயிர் கொல்லிகள் மூலம் கோட்டிங் செய்வது, தொற்றுக்கு எதிராக பயனுள்ளதாக இருக்கும் என மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கழகம் ஒப்பு கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Note: Images used are for representational purpose only.
-
சீன நிறுவனம் காரையே புளிப்பு மிட்டாய் கணக்கா உற்பத்தி பண்ணிட்டு இருக்கா.. நம்பவே முடியல 7 மில்லியனை தொட்ருச்சு
-
குடிநீரில் கழுவினால் அபராதம்! பெங்களூர் கார் ஓனர்கள் கையில் எடுத்த புதிய ட்ரிக்! இது நமக்கு தெரியாம போச்சே!
-
பைக்கின் விலை பல இலட்சம்... ஆனா ஒருத்தர் மட்டும்தான் போக முடியும்!! பிரபல பாடகர் ஆசையோடு வாங்கிய பைக்!