Just In
- 23 min ago அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- 29 min ago ஆணுக்கு இணையா பந்தயத்துக்கு வரிசைக்கட்டி நின்ற பெண் பைக் ரேஸர்கள்!! போட்டி தீயாய் இருந்துச்சு... முழு வீடியோ!
- 2 hrs ago மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- 3 hrs ago ரெனால்ட் டஸ்டர் கார் பற்றி இந்த அப்டேட்காக தான் இந்தியாவே வெயிட்டிங்! இப்பவே ரெடியாக வேண்டியது தான்!
Don't Miss!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- News "மகளிர் உரிமை தொகை வரல.." அமைச்சரை பேச விடாமல் நிறுத்திய பெண்.. மேடையில் அடுத்து நடந்த பரபர சம்பவம்
- Sports ரோகித்.. ரோகித் என கத்திய ரசிகர்கள்.. ஓங்கி ஒரு அடி விட்ட ஹர்திக் பாண்டியா - வீடியோ
- Movies என்னது தனுஷ் இயக்கத்தில் நடிக்கிறாரா ஜிவி பிரகாஷ்?.. அட இது செம விஷயமா இருக்கே
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
எடப்பாடியின் கையொப்பத்திற்காக நீண்ட நாளாக காத்திருக்கும் கோப்பு... இது போதும் தமிழர்களை குஷிப்படுத்த
முக்கிய ஆவணம் ஒன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கையொப்பத்திற்காக நீண்ட நாட்களாக காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.
தமிழக வாகன ஓட்டிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை அளிக்கின்ற வகையிலான ஓர் ஆவணம் முதலமைச்சர் எடப்பாடியின் கையொப்பத்திற்காக நீண்ட நாட்களாக காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்மையில், மத்திய அரசு இந்தியாவை போக்குவரத்து விதிமீறல்களே இல்லாத நாடாக மாற்றும் வகையில் புதிய மோட்டார் வாகன சட்டத்தை அறிமுகம் செய்தது.
செப்டம்பர் 1ம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்த இந்த சட்டத்தில் பல்வேறு சீர் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில், மிக முக்கியமானதாக பல மடங்கு உயர்த்தப்பட்ட அபராதங்கள் உள்ளன. இவை, முன்பெப்போதும் இல்லாத அளவில் உச்சபட்ச அளவில் உச்சத்தைத் தொட்டிருப்பதால் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
ஆனால், இந்த புதிய மோட்டார் சட்டத்திற்கு இன்னும் தமிழகத்தில் பச்சைக் கொடி காட்டப்படவில்லை. மாறாக, இந்த சட்டத்தில் கூடுதலாக ஒரு மாற்றங்களைச் செய்து அமலுக்குக் கொண்டு வரவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. முக்கியமாக உச்சபட்ச அளவில் காணப்படும் அபராதங்களை குறைக்கும் வகையிலான மாற்றங்கள் அதில் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது.
அந்தவகையில், பல மாற்றங்கள் செய்யப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டத்திற்கான ஆவணம் முதலமைச்சரின் ஒப்புதலுக்காக அவரின் அலுவலகத்தில் நிலுவையில் உள்ளது.
புதிய மோட்டார் வாகன சட்டத்தில், சிறுவர்களை வாகனத்தை இயக்க அனுமதிக்கும் பெற்றோர்களுக்கு தண்டனை அளிக்கும் விதமாக மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை ரூ. 25,000 அபராதம் மற்றும் அதிவேகமாக வாகனத்தை இயக்குபவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் என பல்வேறு விதிமீறல்களுக்கான அபராதங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
இவற்றை 10-20 சதவீதம் வரை தமிழக அரசு குறைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தமிழக அரசின் இந்த நடவடிக்கை, மத்திய அரசு புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்தியதற்காக காரணம் முழுமையாக நிறைவேறாது என போக்குவரத்து ஆர்வலர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த வாரம் புதிய போக்குவரத்து ஆணையராக பொறுப்பேற்ற டி.எஸ். ஜவஹர், போக்குவரத்து அபராதம், வாகன எஃப்சி சான்று மற்றும் வேக கட்டுப்பாட்டு கருவிகளைப் பொருத்துதல் உள்ளிட்டவற்றை உள்ளாட்சி தேர்தல்களுக்கு முன்னரே நடைமுறைக்குக் கொண்டுவருவதற்கான தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றார்.
ஆகையால், தமிழக அரசு விரைவில் புதிய மோட்டார் வாகன சட்டத்தின் உச்சபட்ட அபராதத்தை குறைப்பதற்கான அறிவிப்பை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேசமயம், ஹெல்மெட் இல்லாமல் பயணிப்பவர்களிடம் இருந்து ரூ. 100 முதல் 500 ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்பட்டு இதேவேலையில் போலீஸார் சிலர் குறிப்பிட்ட தொகையை லஞ்சமாக வாங்குவதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது.
எனவே, புதிய சட்டத்தின்படி ரூ.10 ஆயிரம் என்ற அபராத திட்டம் அமலுக்கு வருமேயானால் தமிழகத்தில் எத்தகைய சூழல் நிலவும் என்பது அனைவருக்கும் புரியாத புதிராகவே இருக்கின்றது.
-
குடிநீரில் கழுவினால் அபராதம்! பெங்களூர் கார் ஓனர்கள் கையில் எடுத்த புதிய ட்ரிக்! இது நமக்கு தெரியாம போச்சே!
-
இந்தியாவை ஆட்சி செய்தது போதும்.. ஜப்பான் பக்கம் ஒதுங்குவோம்.. தமிழகத்துல இருந்து ஜப்பான் போகும் புல்லட் 350
-
டியோ கொஞ்சம் ஓரமா போறியா! ஹீரோ பிளஷ்ஷர் பிளஸ் எக்ஸ்டெக் ஸ்போர்ட்ஸ் அறிமுகம்! விலை இவ்ளோ கம்மியா!