Just In
- 2 hrs ago இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- 2 hrs ago தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
- 3 hrs ago மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
- 7 hrs ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
Don't Miss!
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
எடப்பாடியின் கையொப்பத்திற்காக நீண்ட நாளாக காத்திருக்கும் கோப்பு... இது போதும் தமிழர்களை குஷிப்படுத்த
முக்கிய ஆவணம் ஒன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கையொப்பத்திற்காக நீண்ட நாட்களாக காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.
தமிழக வாகன ஓட்டிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை அளிக்கின்ற வகையிலான ஓர் ஆவணம் முதலமைச்சர் எடப்பாடியின் கையொப்பத்திற்காக நீண்ட நாட்களாக காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்மையில், மத்திய அரசு இந்தியாவை போக்குவரத்து விதிமீறல்களே இல்லாத நாடாக மாற்றும் வகையில் புதிய மோட்டார் வாகன சட்டத்தை அறிமுகம் செய்தது.
செப்டம்பர் 1ம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்த இந்த சட்டத்தில் பல்வேறு சீர் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில், மிக முக்கியமானதாக பல மடங்கு உயர்த்தப்பட்ட அபராதங்கள் உள்ளன. இவை, முன்பெப்போதும் இல்லாத அளவில் உச்சபட்ச அளவில் உச்சத்தைத் தொட்டிருப்பதால் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
ஆனால், இந்த புதிய மோட்டார் சட்டத்திற்கு இன்னும் தமிழகத்தில் பச்சைக் கொடி காட்டப்படவில்லை. மாறாக, இந்த சட்டத்தில் கூடுதலாக ஒரு மாற்றங்களைச் செய்து அமலுக்குக் கொண்டு வரவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. முக்கியமாக உச்சபட்ச அளவில் காணப்படும் அபராதங்களை குறைக்கும் வகையிலான மாற்றங்கள் அதில் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது.
அந்தவகையில், பல மாற்றங்கள் செய்யப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டத்திற்கான ஆவணம் முதலமைச்சரின் ஒப்புதலுக்காக அவரின் அலுவலகத்தில் நிலுவையில் உள்ளது.
புதிய மோட்டார் வாகன சட்டத்தில், சிறுவர்களை வாகனத்தை இயக்க அனுமதிக்கும் பெற்றோர்களுக்கு தண்டனை அளிக்கும் விதமாக மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை ரூ. 25,000 அபராதம் மற்றும் அதிவேகமாக வாகனத்தை இயக்குபவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் என பல்வேறு விதிமீறல்களுக்கான அபராதங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
இவற்றை 10-20 சதவீதம் வரை தமிழக அரசு குறைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தமிழக அரசின் இந்த நடவடிக்கை, மத்திய அரசு புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்தியதற்காக காரணம் முழுமையாக நிறைவேறாது என போக்குவரத்து ஆர்வலர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த வாரம் புதிய போக்குவரத்து ஆணையராக பொறுப்பேற்ற டி.எஸ். ஜவஹர், போக்குவரத்து அபராதம், வாகன எஃப்சி சான்று மற்றும் வேக கட்டுப்பாட்டு கருவிகளைப் பொருத்துதல் உள்ளிட்டவற்றை உள்ளாட்சி தேர்தல்களுக்கு முன்னரே நடைமுறைக்குக் கொண்டுவருவதற்கான தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றார்.
ஆகையால், தமிழக அரசு விரைவில் புதிய மோட்டார் வாகன சட்டத்தின் உச்சபட்ட அபராதத்தை குறைப்பதற்கான அறிவிப்பை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேசமயம், ஹெல்மெட் இல்லாமல் பயணிப்பவர்களிடம் இருந்து ரூ. 100 முதல் 500 ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்பட்டு இதேவேலையில் போலீஸார் சிலர் குறிப்பிட்ட தொகையை லஞ்சமாக வாங்குவதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது.
எனவே, புதிய சட்டத்தின்படி ரூ.10 ஆயிரம் என்ற அபராத திட்டம் அமலுக்கு வருமேயானால் தமிழகத்தில் எத்தகைய சூழல் நிலவும் என்பது அனைவருக்கும் புரியாத புதிராகவே இருக்கின்றது.
-
சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
-
குடும்பத்தோட போறதுக்கு சூப்பர் கார்! ஆஃபரும் அள்ளி குடுக்குறாங்க! ஆனால் சேல்ஸ் சுத்தமா இல்லை ஏன் தெரியுமா
-
தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு