Just In
- 1 hr ago எல்லாரும் ஃப்ளோரிடாவுக்கு கிளம்ப போறாங்க.. ரோல்ஸ் ராய்ஸ் காரை இலவசமா தர போறாங்களாம்!! ஒரே ஒரு நிபந்தனைதான்!
- 7 hrs ago ஜாக்பாட்... 4,000 எலெக்ட்ரிக் கார்களுக்கு ஆர்டர் கொடுத்த பிரபல நிறுவனம்... வரிசையா களத்துல எறக்க போறாங்க...
- 7 hrs ago இத்தாலி நாட்டை சேர்ந்த டூ-வீலர் உற்பத்தி நிறுவனத்தின் பெரும் பங்கை வாங்கிய கேடிஎம்-இன் தாய் நிறுவனம்..
- 8 hrs ago ஒன்னு இல்ல, ரெண்டு இல்ல... கிட்டத்தட்ட 20 ஆயிரம் கார்கள்!! மாருதி சுஸுகிக்கு எல்லா மாசமும் ஜாக்பாட் அடிக்குது!
Don't Miss!
- Finance சிங்கிளாக வாழும் பெண்களே.. இதை பாலோ பண்ணுங்க..!!
- News பிரியாணியால் வம்பில் மாட்டிய பிரேமலதா.. திடீரென பறந்த புகார்.. விஜயகாந்த் நினைவிடத்தில் என்ன நடந்தது
- Lifestyle Today Rasi Palan 19 March 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனையில் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது...
- Sports சிஎஸ்கே அணியின் படுமோசமான கேப்டன்கள் பட்டியல்.. தோனி கேப்டனா இருக்க காரணமே இதுதான்
- Movies Cook with Comali 5 promo: இது புது கூட்டணி.. கலக்கல் காம்பினேஷனில் குக் வித் கோமாளி 5.. விரைவில்!
- Technology புது SIM கார்டு ரூல்ஸ்.. இனி 7 நாட்களுக்கு ஒன்னுமே செய்ய முடியாது.. கஸ்டமர்கள் படப்போகும் பாடு.. எப்போது அமல்?
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
- Education தரமான கல்வியைத் தர உறுதி பூண்டுள்ள பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம்...!!
எடப்பாடியின் கையொப்பத்திற்காக நீண்ட நாளாக காத்திருக்கும் கோப்பு... இது போதும் தமிழர்களை குஷிப்படுத்த
முக்கிய ஆவணம் ஒன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கையொப்பத்திற்காக நீண்ட நாட்களாக காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.
தமிழக வாகன ஓட்டிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை அளிக்கின்ற வகையிலான ஓர் ஆவணம் முதலமைச்சர் எடப்பாடியின் கையொப்பத்திற்காக நீண்ட நாட்களாக காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்மையில், மத்திய அரசு இந்தியாவை போக்குவரத்து விதிமீறல்களே இல்லாத நாடாக மாற்றும் வகையில் புதிய மோட்டார் வாகன சட்டத்தை அறிமுகம் செய்தது.
செப்டம்பர் 1ம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்த இந்த சட்டத்தில் பல்வேறு சீர் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில், மிக முக்கியமானதாக பல மடங்கு உயர்த்தப்பட்ட அபராதங்கள் உள்ளன. இவை, முன்பெப்போதும் இல்லாத அளவில் உச்சபட்ச அளவில் உச்சத்தைத் தொட்டிருப்பதால் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
ஆனால், இந்த புதிய மோட்டார் சட்டத்திற்கு இன்னும் தமிழகத்தில் பச்சைக் கொடி காட்டப்படவில்லை. மாறாக, இந்த சட்டத்தில் கூடுதலாக ஒரு மாற்றங்களைச் செய்து அமலுக்குக் கொண்டு வரவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. முக்கியமாக உச்சபட்ச அளவில் காணப்படும் அபராதங்களை குறைக்கும் வகையிலான மாற்றங்கள் அதில் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது.
அந்தவகையில், பல மாற்றங்கள் செய்யப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டத்திற்கான ஆவணம் முதலமைச்சரின் ஒப்புதலுக்காக அவரின் அலுவலகத்தில் நிலுவையில் உள்ளது.
புதிய மோட்டார் வாகன சட்டத்தில், சிறுவர்களை வாகனத்தை இயக்க அனுமதிக்கும் பெற்றோர்களுக்கு தண்டனை அளிக்கும் விதமாக மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை ரூ. 25,000 அபராதம் மற்றும் அதிவேகமாக வாகனத்தை இயக்குபவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் என பல்வேறு விதிமீறல்களுக்கான அபராதங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
இவற்றை 10-20 சதவீதம் வரை தமிழக அரசு குறைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தமிழக அரசின் இந்த நடவடிக்கை, மத்திய அரசு புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்தியதற்காக காரணம் முழுமையாக நிறைவேறாது என போக்குவரத்து ஆர்வலர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த வாரம் புதிய போக்குவரத்து ஆணையராக பொறுப்பேற்ற டி.எஸ். ஜவஹர், போக்குவரத்து அபராதம், வாகன எஃப்சி சான்று மற்றும் வேக கட்டுப்பாட்டு கருவிகளைப் பொருத்துதல் உள்ளிட்டவற்றை உள்ளாட்சி தேர்தல்களுக்கு முன்னரே நடைமுறைக்குக் கொண்டுவருவதற்கான தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றார்.
ஆகையால், தமிழக அரசு விரைவில் புதிய மோட்டார் வாகன சட்டத்தின் உச்சபட்ட அபராதத்தை குறைப்பதற்கான அறிவிப்பை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேசமயம், ஹெல்மெட் இல்லாமல் பயணிப்பவர்களிடம் இருந்து ரூ. 100 முதல் 500 ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்பட்டு இதேவேலையில் போலீஸார் சிலர் குறிப்பிட்ட தொகையை லஞ்சமாக வாங்குவதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது.
எனவே, புதிய சட்டத்தின்படி ரூ.10 ஆயிரம் என்ற அபராத திட்டம் அமலுக்கு வருமேயானால் தமிழகத்தில் எத்தகைய சூழல் நிலவும் என்பது அனைவருக்கும் புரியாத புதிராகவே இருக்கின்றது.
-
ஒன்னு கூடிட்டாங்க! நிஸான்-ஹோண்டா இணைவிற்கு இதுதான் காரணமா! ஜப்பான் பசங்க 2பேரும் ஒன்னு கூடி என்ன பண்ண போறாங்க!
-
மாலையில் சென்னையில் டீ குடித்துவிட்டு வந்தே பாரத் ரயிலில் ஏறினால் இரவு டின்னர் சாப்பிட பெங்களூரு போயிடலாம்!
-
அடிபட்டு வரவங்ககிட்ட இனி லட்சகணக்குல பில் போட முடியாது! தனியார் மருத்துவமனைகளுக்கு ஆப்பு வச்ச மோடி அரசு!