Just In
- 31 min ago அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- 37 min ago ஆணுக்கு இணையா பந்தயத்துக்கு வரிசைக்கட்டி நின்ற பெண் பைக் ரேஸர்கள்!! போட்டி தீயாய் இருந்துச்சு... முழு வீடியோ!
- 2 hrs ago மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- 3 hrs ago ரெனால்ட் டஸ்டர் கார் பற்றி இந்த அப்டேட்காக தான் இந்தியாவே வெயிட்டிங்! இப்பவே ரெடியாக வேண்டியது தான்!
Don't Miss!
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- News "மகளிர் உரிமை தொகை வரல.." அமைச்சரை பேச விடாமல் நிறுத்திய பெண்.. மேடையில் அடுத்து நடந்த பரபர சம்பவம்
- Movies என்னது தனுஷ் இயக்கத்தில் நடிக்கிறாரா ஜிவி பிரகாஷ்?.. அட இது செம விஷயமா இருக்கே
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா?
வாகன ஓட்டி ஒருவர் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசு அமலுக்கு கொண்டு வந்துள்ள புதிய மோட்டார் வாகன சட்டம் இந்தியாவில் தற்போது விவாத பொருளாக மாறியுள்ளது. கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில், புதிய மோட்டார் வாகன சட்டத்தை கடந்த செப்டம்பர் 1ம் தேதி மத்திய அரசு செயல்படுத்தியது. இதில், போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகைகள் மிக கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன.
இந்தியாவில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கையை குறைக்கும் ஒரு முயற்சி என மத்திய அரசு இதனை கூறியுள்ளது. அபராத தொகைகள் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதால், இனி வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை முறையாக கடைபிடிப்பார்கள் எனவும், இதன் மூலமாக இந்தியாவில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை குறையும் எனவும் மத்திய அரசு நம்புகிறது.
இதற்கு ஒரு சிலர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஆனால் அபராத தொகைகளை மிகவும் கடுமையாக உயர்த்தியிருப்பதால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுவார்கள் என ஒரு சில மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இவ்வாறு ஆதரவு, எதிர்ப்பு என இரு வகையான விமர்சனங்களுக்கு மத்தியில் புதிய அபராத தொகைகளை வாகன ஓட்டிகளிடம் போலீசார் தீவிரமாக செயல்படுத்தி வருகின்றனர்.
இதன் காரணமாக வாகன ஓட்டிகளுக்கும், போலீசாருக்கும் இடையே சில இடங்களில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு, அபராத தொகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வாகன ஓட்டி ஒருவர் பைக்கை நடுரோட்டில் தீ வைத்து கொளுத்தினார். இந்த சூழலில் வாகன ஓட்டி ஒருவர் தீ வைத்து கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் பூர்னியா பகுதியில் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சத்யம் சின்ஹா என்பவர் அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். ஆனால் அவர் ஹெல்மெட் அணியவில்லை. எனவே போலீசார் அவரை நிறுத்தி அபராதம் விதித்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சத்யம் சின்ஹா தன் மீது திடீரென பெட்ரோலை ஊற்றி கொண்டார். பின்னர் தீக்குச்சி மூலமாக தீ பற்ற வைத்து தற்கொலைக்கு முயன்றார். ஆனால் அவர் தீ பற்ற வைப்பதற்கு முன்னதாக போலீசார் அவரை உடனடியாக தடுத்து நிறுத்தினர். இதன் காரணமாக பெரும் விபரீதம் தவிர்க்கப்பட்டது.
இதுகுறித்து பூர்னியா போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ராஜேஸ் குமார் கூறுகையில், ''சத்யம் சின்ஹா தன் மீது பெட்ரோலை ஊற்றி கொண்டார். தீ பற்ற வைக்க முயன்ற நேரத்தில் அவர் காப்பாற்றப்பட்டார். அவர் ஹெல்மெட் அணியவில்லை. எனவே அதற்கு ஏற்ப போலீசார் அபராதம் விதித்தனர்'' என்றார். சத்யம் சின்ஹா அபராத தொகையை தர மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.
அதே சமயம் ஹெல்மெட் அணிய மறந்து விட்டதாகவும், தனக்கு அபராதம் விதிக்க வேண்டாம் என போலீசாரிடம் கேட்டு கொண்டதாகவும் சத்யம் சின்ஹா கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ''என்னிடம் பணம் இல்லை. தொடர்ந்து நான் பல முறை கேட்டு கொண்ட பிறகும், போலீசார் எனது வார்த்தைகளை கேட்கவில்லை.
எனக்கு 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து விட்டனர். இதன் காரணமாகவே நான் தற்கொலைக்கு முயன்றேன்'' என்றார். புதிய மோட்டார் வாகன சட்டத்தின் கீழ்தான் சத்யம் சின்ஹாவிற்கு போலீசார் அபராதம் விதித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்று வரும் இத்தகைய சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
-
பேடிஎம் ஆப் மூலம் இனி ஃபாஸ்ட் டேக் கார்டுகளை ரீசார்ஜ் செய்யலாம்! வந்துவிட்டது புதிய வழி
-
இது ஏப்ரல் ஃபூல் கிடையாது.. டாடா அல்ட்ராஸ் ரேஸர் கார் ஏப்ரல்ல அறிமுகமாக போகுது! இறங்கி அடிக்க தயாராகும் டாடா!
-
நடிகர் தனுஷை வைத்து படம் எடுத்தவர் இன்று விலையுயர்ந்த காரில்!! ஷோரூமுக்கு குடும்பத்துடன் போய்ட்டாரு!