Just In
- 1 hr ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 2 hrs ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 3 hrs ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 3 hrs ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
Don't Miss!
- News தொட்டில் அமைத்து அந்திரத்தில் தூங்கிய ரயில் பயணி.. ஏசி கோச் முதல் டாய்லெட் வரை.. ஆக்கிரமித்த பயணிகள்
- Technology Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Lifestyle உங்க பற்கள் வலிமையாகவும், கிருமிகள் இல்லாததாகவும் இருக்கணுமா? இதில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- Movies Gnanavel Raja: தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி.. என்ன காரணம்?
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை!! பல சோதனைகளுக்கு பிறகு, ஓட்டுனர் உரிமத்தை பெற்ற முதல் குறை-உயர மாற்று திறனாளி
இந்தியாவிலேயே முதல்முறையாக ஹைதராபாத்தில் உயரம் குறைவானவருக்கு ஓட்டுனர் உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.
ஹைதராபாத்தை சேர்ந்தவர் கட்டிப்பள்ளி ஷிவ்பால் (வயது 42). உயரம் குறைவான மாற்று திறனாளியான இவர் இந்தியாவிலேயே உயரம் குறைவானவர்களில் முதல் ஆளாக ஓட்டுனர் உரிமத்தை பெற்றுள்ளார். மூன்று அடியில் உயரம் கொண்டவராக இருப்பினும் கட்டிப்பள்ளி ஷிவ்பால் தனக்கு வரும் தடைகள் அனைத்தையும் உடைந்தெறிந்து வருகிறார்.
2004இல் பட்டப்படிப்பை முடித்த இவர் கரீம் நகர் மாவட்டத்தில் முதல் மாற்று திறனாளியாக பட்டப்படிப்பை முடித்தவராக விளங்குகிறார். தற்போது இவர் இந்தியாவிலேயே முதல் ஆளாக கார் ஓட்டுனர் உரிமத்தையும் பெற்றுள்ளார். இதுகுறித்து கட்டிப்பள்ளி ஷிவ்பால் அளித்த பேட்டியில், "என் உயரத்தை காரணம் காட்டி மக்கள் என்னை கிண்டல் செய்தார்கள்.
இன்று நான் தி லிம்கா சாதனை புத்தகம் மற்றும் பலவற்றிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளேன். டிரைவிங் பயிற்சிக்காக பல குட்டையானவர்கள் என்னை தொடர்பு கொள்கிறார்கள்" என்றவர், அடுத்த ஆண்டில் இருந்து ஓட்டுனர் பயிற்சி மையத்தினை திறக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். 2000இல் ஹைதராபாத்திற்கு வந்த ஷிவ்பால், தற்சமயம் இந்த நகரத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.
தனது குடும்பம் குறித்து இவர் பேசுகையில், குடும்பத்தில் நான் மூத்த சகோதரன். இத்தகைய குறைப்பாட்டில் பாதிக்கப்பட்டுள்ளவன் நான் மட்டுமே" என்றார். படங்களில் மட்டுமல்லாமல், சில விளம்பரங்களிலும் நடித்துள்ளதாக கூறும் கட்டிப்பள்ளி ஷிவ்பால், ஆனால் அதன்பின் சினிமாவில் தனக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கவில்லை என சிரித்தப்படி கூறுகிறார்.
மேலும் பேசிய ஷிவ்பால், "ஊனமுற்ற எனக்கு வேலை வழங்க யாரும் தயாராக இல்லை. பிறகு நண்பர் ஒருவர் மூலம் தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்து, கடந்த 20 ஆண்டுகளாக இங்கு பணிபுரிந்து வருகிறேன். பயணிக்க, நான் வாகானங்களை முன்பதிவு செய்யும்போதெல்லாம், அவர்களில் சிலர் சவாரியை ரத்து செய்வர். நான் என் மனைவியுடன் வெளியே செல்லும்போது, மக்கள் மோசமான கருத்துகளை கூறினர்.
அப்போதுதான் சொந்தமாக கார் வைத்து ஓட்ட வேண்டும் என்று முடிவு செய்தேன்" என்றார். புதியதாக கார் ஒன்றை வாங்கிய பிறகு, டிரைவிங் கற்றுக்கொள்வதில் ஆர்வத்துடன் ஷிவ்பால் இணையத்தில் உலாவும், அமெரிக்காவில் ஒரு நபர் பதிவேற்றிய வீடியோவை கண்டார். காரின் இருக்கை மற்றும் பிற உபகரணங்களை அவரது உயரத்திற்கு உயரத்துவதற்கு தேவையான மாற்றங்களை அது அவருக்கு விளக்கியுள்ளது.
இந்த கார் மாடிஃபிகேஷன்கள் அனைத்தும் முடிந்த பிறகு, ஷிவ்பால் தனது நண்பரிடம் இருந்து கார் டிரைவிங்கை கற்று கொண்டுள்ளார். இத்துடன் இவருக்கு இருந்த சவால்கள் நின்றுவிடவில்லை. ஓட்டுனர் உரிமத்தை பெறுவதில் சிக்கலாக, போக்குவரத்து துறை அலுவலகம் வரையில் வந்தது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்ட பிறகு இவர் 3 மாதங்கள் கற்றல் உரிமத்தை பெற்றுள்ளார்.
பின்னர் அதிகாரி ஒருவரின் நேரடி கண்காணிப்பில் ஒரு சோதனை ஓட்டம் நடத்தப்பட்ட பின்னரே ஓட்டுனர் உரிமத்தை பெற்றதாக ஷிவ்பால் தெரிவித்துள்ளார். ஓட்டுனர் உரிமத்தை பெற்ற பிறகு அளித்த பேட்டியில், அனைவருக்கும் சில தவறுகள் உள்ளன. ஆனால் உங்களுக்குள் மறைந்திருக்கும் திறமைகளை கண்டுப்பிடித்து அவற்றை அடைவதே முக்கியம் என கட்டிப்பள்ளி ஷிவ்பால் கூறியுள்ளார்.
இவ்வாறு ஓட்டுனர் உரிமம் விஷயத்தில் இந்திய போக்குவரத்து துறை சற்று தீவிரமாக தான் உள்ளது. அதேநேரம் பழைய வாகனங்களுக்கு எதிரான நடவடிக்கைகளிலும் போக்குவரத்து துறை தீவிரம் காட்டி வருகிறது. ஏனெனில் இந்தியாவில் காற்று மாசுபாடு அதிகரித்து கொண்டே செல்வதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், அவற்றில் முக்கியமானதாக பழைய வாகனங்களின் பயன்பாடு பார்க்கப்படுகிறது.
-
20கிலோ அரிசி மூட்டையை 4ஏத்திகிட்டு நீங்களும் அமர்ந்து போகலாம்! டெலிவரி சேவைக்கான சூப்பரான இ-சைக்கிள் அறிமுகம்!
-
வெறும் 1 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற மஹிந்திரா கார்! இந்த காருக்கா இப்படி ஒரு நிலைமை?
-
பிரம்மாண்டத்துக்கு மறுபெயர் இதுதான்!! ஏர் இந்தியாவில் இனி இப்படியொரு பிளைட்டில் போக முடியாது!