Just In
- 1 hr ago எல்லாரும் ஃப்ளோரிடாவுக்கு கிளம்ப போறாங்க.. ரோல்ஸ் ராய்ஸ் காரை இலவசமா தர போறாங்களாம்!! ஒரே ஒரு நிபந்தனைதான்!
- 6 hrs ago ஜாக்பாட்... 4,000 எலெக்ட்ரிக் கார்களுக்கு ஆர்டர் கொடுத்த பிரபல நிறுவனம்... வரிசையா களத்துல எறக்க போறாங்க...
- 7 hrs ago இத்தாலி நாட்டை சேர்ந்த டூ-வீலர் உற்பத்தி நிறுவனத்தின் பெரும் பங்கை வாங்கிய கேடிஎம்-இன் தாய் நிறுவனம்..
- 7 hrs ago ஒன்னு இல்ல, ரெண்டு இல்ல... கிட்டத்தட்ட 20 ஆயிரம் கார்கள்!! மாருதி சுஸுகிக்கு எல்லா மாசமும் ஜாக்பாட் அடிக்குது!
Don't Miss!
- Finance சிங்கிளாக வாழும் பெண்களே.. இதை பாலோ பண்ணுங்க..!!
- News பிரியாணியால் வம்பில் மாட்டிய பிரேமலதா.. திடீரென பறந்த புகார்.. விஜயகாந்த் நினைவிடத்தில் என்ன நடந்தது
- Lifestyle Today Rasi Palan 19 March 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனையில் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது...
- Sports சிஎஸ்கே அணியின் படுமோசமான கேப்டன்கள் பட்டியல்.. தோனி கேப்டனா இருக்க காரணமே இதுதான்
- Movies Cook with Comali 5 promo: இது புது கூட்டணி.. கலக்கல் காம்பினேஷனில் குக் வித் கோமாளி 5.. விரைவில்!
- Technology புது SIM கார்டு ரூல்ஸ்.. இனி 7 நாட்களுக்கு ஒன்னுமே செய்ய முடியாது.. கஸ்டமர்கள் படப்போகும் பாடு.. எப்போது அமல்?
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
- Education தரமான கல்வியைத் தர உறுதி பூண்டுள்ள பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம்...!!
இவர்கள்தான் யூஸ்டு கார்களை அதிகமாக வாங்குகின்றனர்... புதிய ஆய்வு என்ன சொல்லுது தெரியுமா?
பயன்படுத்தப்பட்ட கார்களை அதிகமாக வாங்குவது யார்? என்பது தொடர்பாக புதிய ஆய்வு வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பேருந்து, ஆட்டோ மற்றும் டாக்ஸி போன்ற பொது போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்வதற்கு மக்கள் தயங்குகின்றனர். அதற்கு பதிலாக சொந்த கார்களில் பயணம் செய்வதைதான் பாதுகாப்பானதாக கருதுகின்றனர். எனவே இந்தியாவில் தற்போது கார்களின் விற்பனை படிப்படியாக உயர்ந்து வருகிறது.
குறிப்பாக இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களில் பயன்படுத்தப்பட்ட கார்களின் விற்பனை பல மடங்கு உயர்ந்து வருவதை காண முடிகிறது. கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பொருளாதார நெருக்கடிகள் காரணமாகவும், புதிய கார்கள் விலை அதிகம் என்பதாலும், விலை குறைவான பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்குவதில் பலர் ஆர்வம் காட்டுகின்றனர்.
இந்த சூழலில் கொரோனா அச்சம் காரணமாக இந்தியாவில் கார்களுக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், முதல் முறை கார் வாங்குபவர்களில் பெரும்பாலானோர், புதிய கார்களுக்கு பதிலாக, பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்குவதையே விரும்புவதாக, தற்போது வெளியாகியுள்ள ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யூஸ்டு கார் லீசிங் செக்மெண்ட்டை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான பம்பம்பம் (PumPumPum) இந்த ஆய்வை நடத்தியுள்ளது. டெல்லி, மும்பை, பெங்களூர் மற்றும் சென்னை உள்பட மெட்ரோ மற்றும் மெட்ரோ அல்லாத நகரங்களை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்குபவர்களில் பெரும்பாலானோர், முதல் முறையாக கார் வாங்குபவர்கள் என்பதை இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது. அவர்களின் சதவீதம் 55. அதே சமயம் பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்குபவர்களில் 41 சதவீதம் பேரின் குடும்பத்தில் ஏற்கனவே கார்கள் இருக்கின்றன. ஆனால் கார்களை மாற்றுவதற்காக, பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்குபவர்களின் எண்ணிக்கை வெறும் 4 சதவீதம்தான்.
பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்குவதற்கு மலிவான விலையே முக்கியமான காரணம் என ஆய்வில் பங்கேற்ற பலரும் கூறியுள்ளனர். அதே சமயம் பயன்படுத்தப்பட்ட கார்களை மக்கள் வாங்குவதற்கு இன்னும் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. இதில், கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த கார் கிடைப்பது மற்றும் கார் ஓட்டி பழகுவது ஆகியவை முக்கியமான காரணங்களாக உள்ளன.
அதே சமயம் குடும்பத்தில் உள்ள மற்றவர்களின் தேவைக்காக, இரண்டாவதாக ஒரு பயன்படுத்தப்பட்ட காரை ஒரு சிலர் வாங்குகின்றனர். பிராந்திய அடிப்படையில் பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்குபவர்களை அதிகம் கொண்டிருப்பது வட இந்தியாதான் (36 சதவீதம்). இதற்கு அடுத்த இடங்களில் மேற்கு (27 சதவீதம்), தெற்கு (26 சதவீதம்) மற்றும் கிழக்கு (11 சதவீதம்) உள்ளன.
கொரோனா அச்சம் காரணமாக வரும் மாதங்களில் பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்குபவர்களின் எண்ணிக்கை இன்னும் பெரும் அளவில் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொது போக்குவரத்தை பயன்படுத்துவதற்கான தயக்கம் மற்றும் புதிய கார்களின் அதிகப்படியான விலை ஆகியவை இதற்கு மிக முக்கியமான காரணங்களாக இருக்கலாம்.
Note: Images used are for representational purpose only.
-
இனி தடுக்கி விழுந்தா கூட இவங்க ஷோரும்லதான் விழுகணும்! மாருதி, டாடாக்கு போட்டியா கடை திறக்க போறது அவங்களா!
-
அடிபட்டு வரவங்ககிட்ட இனி லட்சகணக்குல பில் போட முடியாது! தனியார் மருத்துவமனைகளுக்கு ஆப்பு வச்ச மோடி அரசு!
-
அமெரிக்காவில் ஒட்டுமொத்த இந்தியாவைவும் பெருமைப்பட வைத்த இளைஞர்!! நடுரோட்டில் இதை செய்யாமல் இருந்து இருக்கலாம்!