Just In
- 3 hrs ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- 3 hrs ago மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
- 4 hrs ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
- 5 hrs ago 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
இவர்கள்தான் யூஸ்டு கார்களை அதிகமாக வாங்குகின்றனர்... புதிய ஆய்வு என்ன சொல்லுது தெரியுமா?
பயன்படுத்தப்பட்ட கார்களை அதிகமாக வாங்குவது யார்? என்பது தொடர்பாக புதிய ஆய்வு வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பேருந்து, ஆட்டோ மற்றும் டாக்ஸி போன்ற பொது போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்வதற்கு மக்கள் தயங்குகின்றனர். அதற்கு பதிலாக சொந்த கார்களில் பயணம் செய்வதைதான் பாதுகாப்பானதாக கருதுகின்றனர். எனவே இந்தியாவில் தற்போது கார்களின் விற்பனை படிப்படியாக உயர்ந்து வருகிறது.
குறிப்பாக இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களில் பயன்படுத்தப்பட்ட கார்களின் விற்பனை பல மடங்கு உயர்ந்து வருவதை காண முடிகிறது. கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பொருளாதார நெருக்கடிகள் காரணமாகவும், புதிய கார்கள் விலை அதிகம் என்பதாலும், விலை குறைவான பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்குவதில் பலர் ஆர்வம் காட்டுகின்றனர்.
இந்த சூழலில் கொரோனா அச்சம் காரணமாக இந்தியாவில் கார்களுக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், முதல் முறை கார் வாங்குபவர்களில் பெரும்பாலானோர், புதிய கார்களுக்கு பதிலாக, பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்குவதையே விரும்புவதாக, தற்போது வெளியாகியுள்ள ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யூஸ்டு கார் லீசிங் செக்மெண்ட்டை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான பம்பம்பம் (PumPumPum) இந்த ஆய்வை நடத்தியுள்ளது. டெல்லி, மும்பை, பெங்களூர் மற்றும் சென்னை உள்பட மெட்ரோ மற்றும் மெட்ரோ அல்லாத நகரங்களை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்குபவர்களில் பெரும்பாலானோர், முதல் முறையாக கார் வாங்குபவர்கள் என்பதை இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது. அவர்களின் சதவீதம் 55. அதே சமயம் பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்குபவர்களில் 41 சதவீதம் பேரின் குடும்பத்தில் ஏற்கனவே கார்கள் இருக்கின்றன. ஆனால் கார்களை மாற்றுவதற்காக, பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்குபவர்களின் எண்ணிக்கை வெறும் 4 சதவீதம்தான்.
பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்குவதற்கு மலிவான விலையே முக்கியமான காரணம் என ஆய்வில் பங்கேற்ற பலரும் கூறியுள்ளனர். அதே சமயம் பயன்படுத்தப்பட்ட கார்களை மக்கள் வாங்குவதற்கு இன்னும் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. இதில், கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த கார் கிடைப்பது மற்றும் கார் ஓட்டி பழகுவது ஆகியவை முக்கியமான காரணங்களாக உள்ளன.
அதே சமயம் குடும்பத்தில் உள்ள மற்றவர்களின் தேவைக்காக, இரண்டாவதாக ஒரு பயன்படுத்தப்பட்ட காரை ஒரு சிலர் வாங்குகின்றனர். பிராந்திய அடிப்படையில் பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்குபவர்களை அதிகம் கொண்டிருப்பது வட இந்தியாதான் (36 சதவீதம்). இதற்கு அடுத்த இடங்களில் மேற்கு (27 சதவீதம்), தெற்கு (26 சதவீதம்) மற்றும் கிழக்கு (11 சதவீதம்) உள்ளன.
கொரோனா அச்சம் காரணமாக வரும் மாதங்களில் பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்குபவர்களின் எண்ணிக்கை இன்னும் பெரும் அளவில் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொது போக்குவரத்தை பயன்படுத்துவதற்கான தயக்கம் மற்றும் புதிய கார்களின் அதிகப்படியான விலை ஆகியவை இதற்கு மிக முக்கியமான காரணங்களாக இருக்கலாம்.
Note: Images used are for representational purpose only.
-
இந்த காரை எத்தன பேரு தங்களுக்கு பிடிச்சவங்களுக்கு பரிசா கொடுக்க போறாங்களோ! அஸ்டன் மார்ட்டின் வேன்டேஜ் அறிமுகம்
-
வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
-
இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?