Just In
- 1 hr ago உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- 3 hrs ago சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- 5 hrs ago எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- 8 hrs ago சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
Don't Miss!
- News மஞ்சள் கலர் கல்யாண பத்திரிகை.. நாட்டை "ராவணன்" ஆண்டால் என்ன? பொண்ணு பேர் பார்த்தீங்களா? சபாஷ் நெல்லை
- Lifestyle எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Movies அஜித்துடன் விஜய் சேர்ந்து நடிக்க இதை செய்ய வேண்டும்.. எஸ்.ஏ.சந்திரசேகர் போட்ட கண்டிஷன்
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இவர்கள்தான் யூஸ்டு கார்களை அதிகமாக வாங்குகின்றனர்... புதிய ஆய்வு என்ன சொல்லுது தெரியுமா?
பயன்படுத்தப்பட்ட கார்களை அதிகமாக வாங்குவது யார்? என்பது தொடர்பாக புதிய ஆய்வு வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பேருந்து, ஆட்டோ மற்றும் டாக்ஸி போன்ற பொது போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்வதற்கு மக்கள் தயங்குகின்றனர். அதற்கு பதிலாக சொந்த கார்களில் பயணம் செய்வதைதான் பாதுகாப்பானதாக கருதுகின்றனர். எனவே இந்தியாவில் தற்போது கார்களின் விற்பனை படிப்படியாக உயர்ந்து வருகிறது.
குறிப்பாக இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களில் பயன்படுத்தப்பட்ட கார்களின் விற்பனை பல மடங்கு உயர்ந்து வருவதை காண முடிகிறது. கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பொருளாதார நெருக்கடிகள் காரணமாகவும், புதிய கார்கள் விலை அதிகம் என்பதாலும், விலை குறைவான பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்குவதில் பலர் ஆர்வம் காட்டுகின்றனர்.
இந்த சூழலில் கொரோனா அச்சம் காரணமாக இந்தியாவில் கார்களுக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், முதல் முறை கார் வாங்குபவர்களில் பெரும்பாலானோர், புதிய கார்களுக்கு பதிலாக, பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்குவதையே விரும்புவதாக, தற்போது வெளியாகியுள்ள ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யூஸ்டு கார் லீசிங் செக்மெண்ட்டை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான பம்பம்பம் (PumPumPum) இந்த ஆய்வை நடத்தியுள்ளது. டெல்லி, மும்பை, பெங்களூர் மற்றும் சென்னை உள்பட மெட்ரோ மற்றும் மெட்ரோ அல்லாத நகரங்களை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்குபவர்களில் பெரும்பாலானோர், முதல் முறையாக கார் வாங்குபவர்கள் என்பதை இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது. அவர்களின் சதவீதம் 55. அதே சமயம் பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்குபவர்களில் 41 சதவீதம் பேரின் குடும்பத்தில் ஏற்கனவே கார்கள் இருக்கின்றன. ஆனால் கார்களை மாற்றுவதற்காக, பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்குபவர்களின் எண்ணிக்கை வெறும் 4 சதவீதம்தான்.
பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்குவதற்கு மலிவான விலையே முக்கியமான காரணம் என ஆய்வில் பங்கேற்ற பலரும் கூறியுள்ளனர். அதே சமயம் பயன்படுத்தப்பட்ட கார்களை மக்கள் வாங்குவதற்கு இன்னும் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. இதில், கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த கார் கிடைப்பது மற்றும் கார் ஓட்டி பழகுவது ஆகியவை முக்கியமான காரணங்களாக உள்ளன.
அதே சமயம் குடும்பத்தில் உள்ள மற்றவர்களின் தேவைக்காக, இரண்டாவதாக ஒரு பயன்படுத்தப்பட்ட காரை ஒரு சிலர் வாங்குகின்றனர். பிராந்திய அடிப்படையில் பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்குபவர்களை அதிகம் கொண்டிருப்பது வட இந்தியாதான் (36 சதவீதம்). இதற்கு அடுத்த இடங்களில் மேற்கு (27 சதவீதம்), தெற்கு (26 சதவீதம்) மற்றும் கிழக்கு (11 சதவீதம்) உள்ளன.
கொரோனா அச்சம் காரணமாக வரும் மாதங்களில் பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்குபவர்களின் எண்ணிக்கை இன்னும் பெரும் அளவில் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொது போக்குவரத்தை பயன்படுத்துவதற்கான தயக்கம் மற்றும் புதிய கார்களின் அதிகப்படியான விலை ஆகியவை இதற்கு மிக முக்கியமான காரணங்களாக இருக்கலாம்.
Note: Images used are for representational purpose only.