Just In
- 26 min ago மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
- 42 min ago இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!
- 1 hr ago பைக்க விட அதிக மைலேஜ் தரும் ஹூண்டாய் கார்.. பொய் சொல்லல.. ஸ்ட்ராங்கான ஆதாரத்தோடதான் சொல்றாங்க!
- 2 hrs ago வெறும் 136 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க! நல்ல காரா இருந்தாலும் மக்கள் வெறுக்க காரணம் இது தான்!
Don't Miss!
- News இந்த ஆண்டு UPSC தேர்வானவர்களில் 34.65% பெண்கள், 5.02% முஸ்லிம்கள்.. முழு டேட்டா இதோ!
- Finance தங்கம் விலை பொசுக்கு குறைஞ்சிடுச்சு! கேட்கவே இனிமையா இருக்கு.. சென்னை, கோவை, மதுரையில் என்ன விலை?
- Lifestyle ஜோதிடத்தில் திசை என்றால் என்ன? உங்களுக்கு என்ன திசை நடக்கிறது? அதனால் கிடைக்கும் பலன்கள்..!
- Sports கே எல் ராகுல் செய்த செயல்.. எச்சரித்த தோனி.. ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு கிடைத்த தண்டனை
- Technology திடீர் பணம் தேவையா.. தனிநபர் கடன் வழங்கும் Google Pay.. எவ்வளவு கிடைக்கும்? எப்படி வாங்குவது?
- Movies கவினுடன் கிளாஷ் விடும் சந்தானம்.. யாரு கிங்குன்னு மே 10ம் தேதி தெரியும் என கலாய்க்கும் ரசிகர்கள்!
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
தேர்தல் முடிஞ்ச உடனே மறுபடியும் வேலையை காட்ட ஆரம்பிச்சுட்டாங்க... கரண்ட் ஷாக் அடித்த நிலையில் மக்கள்...
5 மாநிலங்களுக்கான தேர்தல் முடிந்த நிலையில், மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தும் நிகழ்வு மீண்டும் அரங்கேற தொடங்கியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவில் சுமார் 9 வார காலமாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாமல் இருந்தது. ஆனால் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் முடிந்து முடிவுகள் வெளியான நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் தற்போது மீண்டும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த தொடங்கியுள்ளன.
இந்தியாவில் கடந்த பிப்ரவரி 23ம் தேதி எரிபொருள் விலை உயர்த்தப்பட்டிருந்தது. அதன்பின் 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தலை மனதில் வைத்து பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவதை எண்ணெய் நிறுவனங்கள் தவிர்த்து வந்தன. தேர்தல் முடிந்து முடிவுகள் வெளியான நிலையில், பெட்ரோல், டீசல் விலை நேற்று (மே 4) முதல் முறையாக உயர்த்தப்பட்டது.
இதை தொடர்ந்து இன்றும் (மே 5) பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். நேற்றைய விலை உயர்வை விட இன்றைய விலை உயர்வு பெரிதாக உள்ளது. இன்று ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 19 பைசாவும், ஒரு லிட்டர் டீசலின் விலை 21 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 15 பைசாவும், ஒரு லிட்டர் டீசலின் விலை 18 பைசாவும் உயர்த்தப்பட்டிருந்தது. தமிழக தலைநகர் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 92.71 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 86.10 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தேர்தல் முடிந்து விட்டதால், இனி வரும் நாட்களில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில் சுமார் 9 வார காலமாக பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாத காரணத்தால் ஏற்பட்ட வருவாய் இழப்பை இனி வரும் நாட்களில் விலையை உயர்த்துவதன் மூலமாக எண்ணெய் நிறுவனங்கள் ஈடுகட்ட முயற்சி செய்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இதனால் தினசரி வாகனங்களை பயன்படுத்துவோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஆனால் தேர்தல் சமயத்தில் விலையை உயர்த்தாமல் இருப்பது, தேர்தல் முடிந்த உடன் விலையை உயர்த்துவது என்ற பாணியை எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடிப்பது இது முதல் முறை கிடையாது. இந்தியாவில் கடந்த காலங்களில் நடைபெற்ற பல்வேறு தேர்தல்களின்போதும் எண்ணெய் நிறுவனங்கள் இதே பாணியை கையாண்டுள்ளன.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு பிரச்னை தேர்தலில் எதிரொலிக்கலாம் என்பதால் இந்த பாணியை எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் மட்டுமல்லாது, நடுத்தர வர்க்க மக்கள் அனைவரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து விடும் என்பதுதான் இதற்கு காரணம்.
எனவே பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும் வகையில் அதனை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இது மக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. இந்த கோரிக்கையை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயலாற்றுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
100 சதவீதம் வாக்குப்பதிவு கேட்கும் அரசு இதையெல்லாம் கவனிக்க மாட்டாங்களா? விமானங்களின் டிக்கெட் விலை உயர்வு!
-
நீச்சல் உடையில் வந்து பஸ் பயணிகளை கிறங்கடித்த பெண்... ஓட்டு போட்ற வயசு வந்தவங்க மட்டும் வீடியோவை பாருங்க...
-
ரூ1.5 லட்சம் தள்ளுபடி விலையில் குடும்பத்துடன் பயணிக்கும் எக்ஸ்யூவி 700 காரை வாங்கலாம்! வெயிட்டிங் டைமும் கம்மி