Just In
- 36 min ago வெறும் 1 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற மஹிந்திரா கார்! இந்த காருக்கா இப்படி ஒரு நிலைமை?
- 59 min ago பிரம்மாண்டத்துக்கு மறுபெயர் இதுதான்!! ஏர் இந்தியாவில் இனி இப்படியொரு பிளைட்டில் போக முடியாது!
- 2 hrs ago ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
- 4 hrs ago ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
Don't Miss!
- News மோடி ஆட்சிக்கு வந்தால் அனைத்து ரயில் பயணிகளுக்கும் கன்பார்ம் டிக்கெட்- ரயில்வே அமைச்சர்
- Technology Aadhaar Update Cost: இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி, போட்டோ மாற்ற கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
- Sports LSG v CSK-சிஎஸ்கேக்கு பாதகமாக விழுந்த டாஸ்..பிளேயிங் லெவனில் அதிரடி மாற்றம்..பேட்டிங்கிலும் சர்பரைஸ்
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Movies Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி!
- Lifestyle உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இவர்களை காட்டி கொடுத்தால் பரிசு... போலீசாரின் அதிரடி அறிவிப்புக்கு காரணம் இதுதான்...
போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை காட்டி கொடுப்பவர்களுக்கு பரிசு வழங்கும் திட்டத்தை போலீசார் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவில் சாலை விபத்துக்களின் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 3 லட்சம் பேர் பரிதாபமாக உயிரிழந்து வருவதாக, உலக சுகாதார நிறுவனம் (WHO-World Health Organization) சமீபத்தில் அறிக்கை வெளியிட்டது. இதுதவிர பல லட்சக்கணக்கான பேர் படுகாயம் அடைந்து வருகின்றனர்.
செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவது, குடிபோதையில் வாகனம் ஓட்டுவது, ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களை இயக்குவது என போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதே பெரும்பாலான சாலை விபத்துக்களுக்கு மிக முக்கியமான காரணமாக உள்ளது.
எனவே சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்பதற்காக, போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி, போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனால் போலீசார் ஆங்காங்கே வாகன தணிக்கை பணிகளை துரிதப்படுத்தியுள்ளனர். இதில், ஒரு சில போலீசார் வசூல் வேட்டையில் ஈடுபடுகின்றனர் என்பது தனிக்கதை. இருந்தாலும் போலீசார் இல்லாத இடங்களில் பெரும்பாலான வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிப்பதே கிடையாது.
இதன் காரணமாகவும் சாலை விபத்துக்கள் மற்றும் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. தற்போது இந்த பிரச்னைக்கு போலீசார் நூதன முறையில் முடிவு கட்டியுள்ளனர்.
அதாவது சாலையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளின் புகைப்படம், வீடியோ போன்றவற்றை யார் வேண்டுமானாலும் எடுத்து போலீசாருக்கு அனுப்பலாம். இத்தகைய புகைப்படம் மற்றும் வீடியோக்களை அனுப்பும் நபர்களுக்கு புள்ளிகள் கிடைக்கும்.
அதாவது இரு சக்கர வாகனங்களில் மூன்று பேர் பயணிப்பதை புகைப்படம் எடுத்து அனுப்பினால், 10 புள்ளிகள் கிடைக்கும். கார்களில் சீட் பெல்ட் அணியாமலும், இரு சக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமலும் பயணிப்பதை புகைப்படம் எடுத்து அனுப்பினால் தலா 7 புள்ளிகள் கிடைக்கும்.
இவ்வாறு 100 புள்ளிகள் சேர்க்கும் நபருக்கு ஆயிரம் ரூபாய் பரிசாக கிடைக்கும். ஆனால் ஒரு சில விதி மீறல்களுக்கு வீடியோ மட்டுமே ஆதாரமாக எடுத்து கொள்ளப்படும். அதாவது சிகப்பு விளக்கை மதிக்காமல் சிக்னலை யாரேனும் கடந்தால் அதனை வீடியோவாக மட்டுமே அனுப்ப இயலும்.
கோவா மாநில போலீசார்தான் இந்த அதிரடி திட்டத்தை அமலுக்கு கொண்டு வந்துள்ளனர். இதற்கென பிரத்யேகமாக வாட்ஸ் அப் எண் மற்றும் இ-மெயில் முகவரியை அம்மாநில போலீசார் வெளியிட்டுள்ளனர். புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இந்த முகவரிக்கு அனுப்பலாம்.
அல்லது கோவா போக்குவரத்து போலீசாரின் பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றலாம். கோவா மாநில போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு தற்போது நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. முன்னதாக டெல்லி மாநில போலீசாரும் இதே போன்றதொரு திட்டத்தை செயல்படுத்தினர்.
அதற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டம் மூலம் சாலை விபத்துக்கள் மற்றும் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறையும் என போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
-
ஓலா டவுசரை கழட்ட திட்டம் போடும் பஜாஜ்! இவ்வளவு கம்மி விலைக்கு சேத்தக் இவி வரப்போகுதா?
-
10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
-
டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!