Just In
- 22 min ago எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- 3 hrs ago சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- 5 hrs ago படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- 5 hrs ago தஞ்சாவூரில் பிறந்து பாலிவுட்டை கலக்கி கொண்டிருக்கும் டைரக்டர்!! புதுசா வாங்கியிருக்கும் காஸ்ட்லீ கார்!
Don't Miss!
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கொல மாஸ்... இதுவரை யாராலும் செய்ய முடியாததை செய்து காட்டிய மத்திய அரசு... தரமான சம்பவம்...
இதுவரை யாராலும் செய்ய முடியாததை மத்திய அரசு செய்து காட்டியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவில் சாலை விபத்துக்கள் மிக அதிக அளவில் நடைபெற்று வருகின்றன. இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு மட்டும் சாலை விபத்துக்களால் சுமார் 1.50 லட்சம் பேர் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர். எனவே சாலை விபத்துக்களையும், சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையையும் குறைக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதால்தான், இந்தியாவில் சாலை விபத்துக்கள் மிகவும் அதிகமாக நடைபெற்று வருகின்றன. குடிபோதையில் அதிவேகமாகவும், தாறுமாறாகவும் வாகனம் ஓட்டுவது, தலை கவசம் அணியாமல் டூவீலர்களில் பயணம் செய்வது என போக்குவரத்து விதிமுறைகளை வாகன ஓட்டிகள் சர்வ சாதாரணமாக மீறுகின்றனர்.
எனவே வாகன ஓட்டிகள் அனைவரும் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக அபராத தொகைகளை மத்திய அரசு மிக கடுமையாக உயர்த்தியுள்ளது. இந்தியாவில் கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி முதல் புதிய மோட்டார் வாகன சட்டத்தை மத்திய அரசு அதிரடியாக அமலுக்கு கொண்டு வந்தது.
இதில், போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராத தொகைகள் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளன. இதன் எதிரொலியாக இந்தியாவில் சமீப காலமாக சாலை விபத்துக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் வாகன ஓட்டிகள் விதிமுறைகளை மீறுவதை மட்டும் விபத்துக்களுக்கு காரணமாக கூறி விட முடியாது.
மோசமான சாலைகளும் விபத்துக்களுக்கு காரணமாக இருக்கின்றன. இந்தியா என்றாலே சாலைகள் மிகவும் மோசமாக இருக்கும் என்ற எண்ணம் பலரின் மனதிலும் ஆழமாக பதிந்து விட்டது. இதில், உண்மை இருக்கவே செய்கிது. இந்தியாவில் பெரும்பாலான சாலைகள் குண்டும், குழியுமான நிலையில் மிகவும் மோசமாகதான் இருக்கின்றன.
ஊழல் மற்றும் முறைகேடு போன்ற காரணங்களால் இந்தியாவின் பெரும்பாலான இடங்களில் தரம் இல்லாத சாலைகள்தான் அமைக்கப்படுகின்றன. ஆனால் தற்போது அந்த நிலை கொஞ்சம் கொஞ்சம் மாறி வருகிறது. நரேந்திர மோடி பிரதமர் பொறுப்பை ஏற்றது முதல் சாலை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.
குறிப்பாக தேசிய நெடுஞ்சாலை பணிகளை விரைவாக முடிப்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. தரமான சாலைகள் விபத்துக்களை தவிர்க்க உதவுவதுடன், நாட்டின் பொருளதார வளர்ச்சியிலும் முக்கிய பங்காற்றுகின்றன. எனவேதான் சாலை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் மத்திய அரசு தீவிரம் காட்டுகிறது.
இதன் எதிரொலியாக புதிய சாதனை ஒன்றை மத்திய அரசு நிகழ்த்தியுள்ளது. மத்திய அரசு கடந்த ஆண்டு சுமார் 4 ஆயிரம் கிலோ மீட்டருக்கு தேசிய நெடுஞ்சாலைகளை கட்டமைத்துள்ளது. இதற்கு முன்பாக ஒரே ஆண்டில் இவ்வளவு கிலோ மீட்டர் தேசிய நெடுஞ்சாலைகள் கட்டமைக்கப்பட்டதில் என்பதால், இது ஒரு சாதனையாக பார்க்கப்படுகிறது.
2019-20ம் நிதியாண்டில், 3,979 கிலோ மீட்டர் தொலைவிற்கு தேசிய நெடுஞ்சாலைகளை அமைத்திருப்பதாக இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்பாக ஒரே நிதியாண்டில், இவ்வளவு அதிகமான தொலைவிற்கு தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டதில்லை. கடந்த சில வருடங்களாகவே இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலை கட்டுமான பணிகள் துரிதமாக நடக்கின்றன.
முன்னதாக கடந்த 2018-19ம் நிதியாண்டில், 3,380 கிலோ மீட்டர்கள் தொலைவிற்கு தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் தற்போது சாலைகளின் தரம் மேம்பட்டு வருவதை நம்மால் கண் கூடாக பார்க்க முடிகிறது. இதே நிலை தொடர்ந்தால், இந்தியாவில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை குறைவதோடு, பொருளாதாரமும் மேம்படும்.
Note: Images used are for representational purpose only.
-
இங்கே வெயில் பொளக்குது... துபாயில் செம மழை!! வறண்டு கிடக்கும் இண்டர்நேஷ்னல் ஏர்போர்ட்டை இப்போது பாருங்க!
-
ஹோண்டா தயாரித்த மின்சார காரா இது! பெரிய பெரிய சூப்பர் கார் பிராண்டுகளே இதோட ஸ்டைலுக்கு முன்னாடி மண்டியிடனும்!
-
கொடுக்கல், வாங்கலில் பிரச்னை.. காருக்கு தீ வைத்த கோவகார கும்பல்! கோடி ரூபா மதிப்புள்ள கார் பைசாவுக்கு தேரல!