Just In
- 28 min ago ஹெல்மெட் போடாமல் பைக்கில் போன விஜய் சேதுபதி! ஓட்டு போட வந்த இடத்தில் மானமே போச்சு!
- 1 hr ago நடிகர் தனுஷ் ஓட்டு போட வந்த காரின் விலை என்ன தெரியுமா? இவ்வளவு காஸ்ட்லியான காரா இது?
- 2 hrs ago இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- 2 hrs ago தமிழ்நாட்டிற்கு அடித்த ஜாக்பாட்! யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் டாடா நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு!
Don't Miss!
- News 4 மணி வரை உக்கிரமா இருப்பேன்! சுட்டெரிக்கும் வெயில்..வயதானவர்களுக்கு வார்னிங்! எப்போது வாக்களிப்பது?
- Finance பேடிஎம் UPI ஐடிகள், புதிய வங்கிகளுக்கு மாற்றம்.. RBI அதிரடி அறிவிப்பு!
- Movies பலாப்பழம் ஏன் இருட்டா இருக்கு.. வாக்குச்சாவடியில் மன்சூர் அலிகான் வாக்குவாதம்!
- Technology இப்படியொரு புரொஜெக்டர் யாரும் பார்த்ததில்லை.. 32GB மெமரி.. 1080P ரெசல்யூஷன்.. எந்த மாடல்? என்ன விலை?
- Lifestyle தினமும் 10 பவுன் தங்கத்தை தூசியாக உமிழும் அதிசய எரிமலை... இந்த எரிமலையா இல்ல தங்கச்சுரங்கமானே தெரிலயே...!
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
வெளியானது அதிரடி உத்தரவு... இந்திய கார்கள் இனி பாதுகாப்பில் வேற லெவலுக்கு போகப்போகுது... எப்படினு தெரியுமா?
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கார்களின் பாதுகாப்பை அதிகரிக்கும் விதமாக அதிரடி உத்தரவு ஒன்று வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து கார்களிலும், இனிமேல் முன் பகுதி பயணியின் இருக்கைக்கும் ஏர்பேக் கண்டிப்பாக வழங்க வேண்டும் என்பதை அரசு தற்போது கட்டாயமாக்கியுள்ளது. கார்களின் பாதுகாப்பை மேலும் அதிகரிக்கும் விதமாக இந்த அதிரடி உத்தரவு தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில் ஓட்டுனர் இருக்கைக்கு மட்டும் ஏர்பேக் வழங்குவது கட்டாயமாக இருந்து வருகிறது. அதாவது இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து கார்களும் குறைந்தபட்சம் ஓட்டுனர் இருக்கைக்கு ஒரு ஏர்பேக்கையாவது கொண்டிருக்க வேண்டும். அனைத்து கார்களிலும் ஓட்டுனர் இருக்கைக்கு ஏர்பேக் கட்டாயம் என்ற உத்தரவு கடந்த 2019ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி முதல் அமலில் இருந்து வருகிறது.
ஆனால் தற்போது வெளியாகியுள்ள புதிய உத்தரவின் மூலம், இனி இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து கார்களும் குறைந்தபட்சம் முன் பகுதியில் 2 ஏர்பேக்குகளை கொண்டிருக்கும். வாகன உற்பத்தி நிறுவனங்கள் விரும்பினால் எத்தனை ஏர்பேக்குகளை வேண்டுமானலும் வழங்கலாம். ஆனால் குறைந்தபட்சம் முன் பகுதியில் 2 ஏர்பேக்குகள் இருப்பது கட்டாயம்.
முன் பகுதியில் ஓட்டுனர் இருக்கைக்கு மட்டும் ஒரு ஏர்பேக் என்பது போதுமானதாக இல்லை. விபத்து நடைபெறும் சமயங்களில் ஓட்டுனருக்கு படுகாயம் ஏற்படுவதையோ அல்லது உயிரிழப்பு ஏற்படுவதையோ இது தவிர்த்து விடும்தான். ஆனால் ஏர் பேக் இல்லாததால், முன் இருக்கையில் உள்ள கோ-பாசஞ்சருக்கு படுகாயமோ அல்லது உயிரிழப்போ ஏற்படலாம்.
எனவேதான் தற்போது முன் இருக்கை பயணிக்கும் ஏர்பேக் வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய உத்தரவு வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அதாவது புதிதாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் கார் என்றால், ஏப்ரல் 1ம் தேதி முதல் முன் பகுதியில் இரண்டு ஏர்பேக்குகளை கொண்டிருப்பது கட்டாயம்.
அதே சமயம் இந்திய சந்தையில் ஏற்கனவே விற்பனையில் உள்ள கார் என்றால், வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் முன் பகுதியில் இரண்டு ஏர்பேக்குகளை கண்டிப்பாக கொண்டிருக்க வேண்டும். ஏற்கனவே விற்பனையில் உள்ள கார்களில் கூடுதலாக ஒரு ஏர்பேக்கை வழங்க வேண்டும் என்றால், சில மாற்றங்களை செய்ய வேண்டியிருக்கும்.
எனவேதான் ஆகஸ்ட் 1ம் தேதி வரை என சற்று கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த புதிய உத்தரவு காரணமாக எண்ட்ரி-லெவல் கார்களின் விலை 5 ஆயிரம் ரூபாய் முதல் 8 ஆயிரம் ரூபாய் வரை உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கே எண்ட்ரி-லெவல் கார்கள் என குறிப்பிட காரணம், விலை குறைவான அந்த கார்களில் தற்போது ஒரு ஏர்பேக் மட்டுமே வழங்கப்படுகிறது என்பதுதான்.
எனவே பெரும்பாலும் அந்த கார்களில்தான் வாகன உற்பத்தி நிறுவனங்கள் கூடுதலாக ஒரு ஏர்பேக்கை வழங்க வேண்டியிருக்கும். சற்று விலை அதிகமான கார்களில் ஏற்கனவே முன் பகுதியில் குறைந்தபட்சம் இரண்டு ஏர்பேக்குகளை வாகன உற்பத்தி நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. எனவே அந்த கார்களின் விலை உயர்வதற்கான வாய்ப்புகள் இல்லை.
-
தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு
-
கோவையில் இருந்து கேரளாவுக்கு இந்த ரயில்ல போங்க.. எக்ஸ்பீரியன்ஸ் இன்னும் செம்மையா இருக்கும்! அப்படி என்ன ரயில்?
-
மஹிந்திராவோட இந்த புதிய காரை எல்லாரும் லட்டு மாதிரி அள்ளிட்டு போக போறாங்க.. புதிய டீசர் என்ன சொல்லுது?..