Just In
- 44 min ago ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
- 2 hrs ago ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- 3 hrs ago இவ்ளோ அழகா பிக்-அப் டிரக்கா! குடும்பத்தோட மட்டுமல்ல வீட்டையே காலி பண்ணி கொண்டு போலாம்!
- 3 hrs ago கியா களமிறக்கும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! பெட்டி கடைல கடலை மிட்டாய் விக்கற மாதிரி விக்க போகுது!
Don't Miss!
- Movies கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!
- News "யாரும் ஒழுங்கா வேலை பார்க்கல.." அதிமுக நிர்வாகிகளிடம் கடிந்து கொண்டாரா எடப்பாடி? வெளியான பரபர தகவல்
- Technology வீட்டுக்கு 1 வாங்குவீங்க.. 8GB மெமரி.. 50W சினிமாட்டிக் சவுண்ட்.. இரண்டு 4K டிவிகளை அறிமுகம் செய்த VU..
- Finance அட்சய திருதியை-க்கு தங்க நகை வாங்கப் போறீங்களா.. இந்த தவறை மட்டும் செஞ்சிடாதீங்க!
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
150சிசி-க்கும் குறைவான பைக், ஸ்கூட்டர்களுக்கு தடை விதிக்க அரசு திட்டம்...? வருகிறது புதிய ஆபத்து...!
இந்திய அரசு, 150சிசி-க்கும் குறைவான பைக் மற்றும் ஸ்கூட்டர்களுக்கு தடை விதிக்க இருப்பதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இதுகுறித்த முழுமையான தகவலை இந்த பதிவில் காணலாம்.
அண்மைக் காலங்களாக இந்தியாவில் உள்ள பெரும் நகரங்கள் சந்தித்து வரும் முக்கிய பிரச்னைகளில் ஒன்றாக சுற்றுப்புழச் சூழல் மாசு இருந்து வருகின்றது. இதனால், பொதுமக்கள் பல்வேறு பிரச்னைகளைச் சந்திக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆகையால், இதுபோன்ற இன்னல்களைக் கணிசமாக குறைக்கும் விதமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
அதனடிப்படையில், 150சிசி-க்கும் குறைவான இருசக்கர வாகனங்களின் உற்பத்திக்கு தடைசெய்ய இருப்பதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில இணைதயளம் வெளியிட்டுள்ளது. அந்தவகையில், எலக்ட்ரிக் அல்லாத மூன்று சக்கர வாகனங்களை வருகின்ற 2023ஆம் ஆண்டு முதலும், எலக்ட்ரிக் அல்லாத மற்றும் 150 சிசிக்கும் குறைவான திறனைப் பெற்ற பைக் மற்றும் ஸ்கூட்டர்களின் விற்பனையை வருகின்ற 2025ம் ஆண்டு முதல் இந்திய அரசு தடைசெய்ய உள்ளது.
இந்த இரண்டு விதமான வாகனங்கள்தான் தற்போது இந்தியாவில், 2.1 கோடிக்கும் அதிகமான அளவில் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆகையால், இவையே பல்வேறு முக்கியச் சாலைகளில் ஆதிக்கத்தைச் செலுத்தி வருகின்றன. இதனால், இவற்றின் பயன்பாட்டைக் குறைத்துவிட்டாலே போக்குவரத்து நெரிசல், மாசடைதல் உள்ளிட்ட பெரும்பாலான பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும் என்ற நோக்கில், இந்த புதிய திட்டம் குறித்த ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
ஆனால், இந்த புதிய விதி ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் 150 சிசிக்கும் குறைவான வாகனங்களுக்குப் பொருந்ததாது. அதேபோன்று, இறுதி நாளுக்கு முன்னதாக வாகனங்களை வாங்குபவருக்கும் இந்த புதிய விதி பாதிப்பினை ஏற்படுத்தாது. ஆனால், இந்த காலகெடுவிற்கு பின்னர் மேற்குறிப்பிட்ட வாகனங்களின் விற்பனை மட்டும் முழுமையாக தடுக்கப்படும் என கூறப்படுகிறது.
இந்த புதிய விதி அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வருமேயானால், 2025ம் ஆண்டிற்கு பிறகு பெட்ரோலால் இயங்கும் வாகனங்களின் பயன்பாடு தவிர்க்கப்பட்டு, பேட்டரியால் இயங்கும் பைக், ஸ்கூட்டர், ஆட்டோக்கள் மட்டுமே அதிகம் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, சுற்றுப்புறச் சூழல் மாசினை தவிர்க்கும் விதமாக, பிஎஸ்-6 தரத்திற்கு குறைவான வாகனங்களை உற்பத்தி செய்யவோ, விற்கவோக் கூடாது என்ற விதியை இந்திய அரசு வருகின்ற 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து அமல்படுத்த உள்ளது.
இந்நிலையில், மீண்டும் ஓர் அதிரடி நடவடிக்கையாக 150 சிசி பைக், ஸ்கூட்டர் மற்றும் எலக்ட்ரிக் அல்லாத ஆட்டோக்களுக்கு எதிராக இந்திய அரசு மேற்கொள்ள இருக்கின்றது. இதேபோன்று, நகரப்பேருந்து, பள்ளி மற்றும் கல்லூரிகளில் இயக்கப்படும் எரிபொருள் பேருந்துகளுக்கும் தடை விதிக்கவும் இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால், இவற்றின் பயன்பாட்டிலும் எலக்டிரிக் வாகனங்களின் பயன்பாடு திணிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கையில் வாகன உற்பத்தியாளர்களுக்கு எந்தவொரு சலுகையும் வழங்கப்படாது என்ற முடிவில், கராராக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம், பேட்டரியை தயாரிக்கும் உற்பத்தியாளர்களுக்கு மட்டும் சலுகை வழங்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
-
செஞ்சது என்னமோ சின்ன உதவிதான்.. ஆனா அந்த சமையல்கார அம்மா குடும்பத்துக்கு அது ரொம்ப பெருசு! செம ஸ்டோரி!!
-
கலாநிதி மாறன் மகள் காவ்யா வைத்திருக்கும் இந்த காரோட விலை 12கோடியா! ஒற்றை குடும்பத்திடம் மட்டும் இவ்ளோ கார்களா!
-
இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!