Just In
- 1 hr ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- 2 hrs ago மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
- 2 hrs ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
- 3 hrs ago 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
வாகனம் வைத்திருக்க இப்படியும் கெடுபிடி போடுறாங்க.. விதிமீறிய 100 வாகனங்கள் கொத்தாக பறிமுதல்..
பார்க்கிங் செய்வதற்கான இட வசதி உள்ளது என்பதற்கான ஆதாரங்களை சமர்ப்பித்தால் மட்டுமே புதிய வாகனங்களை வாங்க முடியும் என்ற கடுமையான சட்டம் அமலாகவுள்ளது.
பார்க்கிங் செய்வதற்கான இட வசதி உள்ளது என்பதற்கான ஆதாரங்களை சமர்ப்பித்தால் மட்டுமே புதிய வாகனங்களை வாங்க முடியும் என்ற கடுமையான சட்டம் அமலாகவுள்ள சூழலில், அனுமதியற்ற இடங்களில் பார்க்கிங் செய்யப்பட்டிருந்த 100 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவில் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. 2017-18ம் நிதியாண்டில் மட்டும் நம் நாட்டில், 32,87,965 உள்நாட்டு பயணிகள் வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. இதற்கு முன்பாக ஒரே நிதியாண்டில் இவ்வளவு அதிக வாகனங்கள் விற்பனையானது இல்லை.
குறிப்பாக சென்னை, பெங்களூரு, மும்பை, டெல்லி, கொல்கத்தா போன்ற பெரு நகரங்களில், வாகனங்களின் எண்ணிக்கை முன் எப்போதையும் விட கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. ஆனால் அதற்கு ஏற்ப சாலைகள் விரிவாக்கம் செய்யப்படுகின்றனவா? புதிய சாலைகள் அமைக்கப்படுகின்றனவா? என்பது கேள்விக்குறியே.
பெரு நகரங்களில் போதிய இட வசதி இல்லாததன் காரணமாக, சாலை ஓரங்களிலேயே சிலர் தங்கள் வாகனங்களை பார்க்கிங் செய்கின்றனர். அவ்வாறு பார்க்கிங் செய்யப்படும் வாகனங்கள் சாலையை அடைத்து விடுவதால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இந்த பிரச்னைக்கு முடிவு கட்டுவதற்காக, அதிகாரிகளுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. இதன்படி பார்க்கிங் செய்வதற்கான போதிய இட வசதி இருந்தால் மட்டுமே, புதிய வாகனங்களை ரிஜிஸ்டர் செய்ய முடியும் என்ற சட்டத்தை கொண்டு வர மத்திய அரசு விரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால் இந்த விஷயத்தில் கர்நாடக அரசு நாலு கால் பாய்ச்சலில் சென்று கொண்டிருக்கிறது. ஆம், நாளுக்கு நாள் வேகமாக முன்னேற்றம் கண்டு வரும் அம்மாநில தலைநகர் பெங்களூருவில், போக்குவரத்து நெரிசல் பிரச்னை பூதாகரமாக உருவெடுத்துள்ளது.
வாகனங்களை பார்க்கிங் செய்வதற்கான போதிய இட வசதி உள்ளது என்பதற்கான ஆதாரங்களை சமர்ப்பித்தால் மட்டுமே, பெங்களூரு பெரு நகர எல்லையில், புதிய வாகனங்களை சட்டப்பூர்வமாக ரிஜிஸ்டர் செய்ய முடியும். இந்த புதிய சட்டம் 2019ம் ஆண்டு முதல் அங்கு அமலுக்கு வருவது உறுதியாகியுள்ளது.
எனவே பெங்களூரு பெரு நகர எல்லையில், பார்க்கிங் செய்வதற்கான போதிய இட வசதி தங்களிடம் உள்ளது என்பதற்கான உரிய ஆதாரங்களை சமர்ப்பிப்பவர்கள் மட்டுமே புதிய வாகனங்களை வாங்க முடியும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது.
வருங்காலத்தில் இந்தியா முழுமைக்கும் பொருந்தக்கூடிய வகையில் இந்த சட்டம் அமல் செய்யப்படலாம் என பரவலாக எதிர்பார்க்கப்படும் சூழலில், அனுமதியற்ற இடங்களில் பார்க்கிங் செய்யப்பட்டிருந்த 100 வாகனங்களை பறிமுதல் செய்து அதிரடி காட்டியுள்ளது சண்டிகர் முனிசிபல் கார்ப்பரேஷன் (CMC).
வரையறை செய்யப்படாத இடங்களில் வாகனங்களை பார்க்கிங் செய்வதால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து, சண்டிகர் முனிசிபல் கார்ப்பரேஷன் அதிகாரிகளுக்கு தொடர்ச்சியாக புகார்கள் வந்து கொண்டே இருந்தன. எனவே அதிகாரிகள், பல்வேறு குழுக்களாக பிரிந்து, தீவிர ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கீகரிக்கப்படாத இடங்களில் பார்க்கிங் செய்யப்பட்டிருந்த 57 கார்கள் மற்றும் 43 டூவீலர்கள் என மொத்தம் 100 வாகனங்கள் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டன. அத்துடன் அந்த வாகனங்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து, அதற்கான ரசீதுகளும் வழங்கப்பட்டன.
அத்துடன் எங்கெல்லாம் வாகனங்களை பார்க்கிங் செய்யக்கூடாது என்பதை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில், நோ பார்க்கிங் போர்டு வைக்கும் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகின்றன. அந்த இடங்களில் இருந்து வாகன உரிமையாளர்கள் விலகி நிற்பதே சிறந்தது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்
-
ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
-
இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
-
இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?