Just In
- 2 hrs ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 2 hrs ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 3 hrs ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 3 hrs ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
Don't Miss!
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- Movies Actor Karthi: ஜூன் மாதத்தில் துவங்கும் சர்தார் 2 படத்தின் சூட்டிங்.. கதை என்ன தெரியுமா?
- News வேகும் வெயிலிலும்.. "வெறுப்புக்கு" ஓட்டு போடாதீர்கள் பதாகையுடன்.. தெரு தெருவாக சுற்றும் முதியவர்
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
எலெக்ட்ரிக் கார்களுக்கு மானியம் வழங்கும் ஃபேம் திட்டம் மேலும் 6 மாதங்கள் நீட்டிப்பு
இந்தியாவில் வாகன பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் எரிபொருளுக்கான செலவும் அதிகமாக இருந்து வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய அரசு எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்த மக்களை ஊக்குவித்து வருகிறது.
இந்தியாவில் வாகன பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் எரிபொருளுக்கான செலவும் அதிகமாக இருந்து வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய அரசு எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்த மக்களை ஊக்குவித்து வருகிறது.
இதன் மூலம் எரிபொருள் பயன்பாடு குறைவது மட்டுமல்லாமல், வாகனங்களால் ஏற்படும் சுற்றுசூழல் மாசும் குறையும் என மத்திய அரசு நம்புகிறது.
இதன் காரணமாக மத்திய அரசே அதன் பயன்பாட்டிற்கு எலெக்ட்ரிக் கார்களை வாங்க முடிவு எடுத்தது. மக்களை அதிகளவில் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க வைக்க கனரக தொழிற்சாலைத்துறை சார்பில் தேசிய ஆட்டோமோட்டிவ் என்ற வாரியம் அமைக்கப்பட்டது.
இந்த வாரியம் சார்பில் ஃபேம் என்ற திட்டம் தயாரிக்கப்பட்டு கடந்த 2015ம் நிதியாண்டில் அமல் படுத்தப்பட்டது. இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களில் பயன்பாட்டை அதிகரிக்க இத்திட்டம் கொண்டுவரப்பட்டது.
ஃபேம் திட்டத்தின் மூலம் எலெக்ட்ரிக், ஸ்கூட்டர்கள், கார்கள், மூன்று சக்கர வாகனங்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது. எந்தெந்த வாகனங்களுக்கு எவ்வளவு மானியம் என்பதை இங்கே கிளிக் செய்து பார்த்துக்கொள்ளுங்கள்.
இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட தொகையில் 60 சதவீதம் பஸ்களுக்காகவும், 20 சதவீதம் மூன்று சக்கர வாகனங்களுக்காகவும், 10-15% சதவீதம் நான்கு சக்கர வாகனங்களுக்காவும், 10 சதவீதம் சார்ஜ் ஏற்றும் மையங்களை வைப்பதற்காகவும் செலவிடப்பட்டு வருகிறது.
2015ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த திட்டம் முதலில் இரண்டு ஆண்டுகளுக்கு திட்டமிடப்பட்டது. 2017ல் முடிவடைந்த இந்த திட்டம் மேலும் 2 முறை தலா ஆறு மாதம் நீட்டிக்கப்பட்டு 2018 மார்ச் வரை திட்டமிட்பட்டிருந்தது.
இந்நிலையில் இத்திட்டத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதை ஆட்டோமொபைல் துறையினர் வரவேற்றுள்ளனர்.
இதன் மூலம் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு அதிக தொகை ஒதுக்கப்பட்டு அதிக எண்ணிக்கையிலான கார்களை விற்பனை செய்யவும், அதிக எண்ணிக்கையிலான சார்ஜ் ஏற்றும் மையங்களை அமைக்கவும் முடியும் என எதிர்பார்க்கின்றனர்.
இத்திட்டத்தின் கீழ் ஹைபிரிட், பிளக் இன் ஹைபிரிட், சாதாரண எலெக்ட்ரிக் கார் ஆகியவை உள்ளடங்கும். மேலும் ஃபேம் 2 என்ற திட்டத்தை மத்திய அரசு வெளியிடும் என ஆட்டோமொபைல் துறையினர் எதிர்பார்த்து வருகின்றனர்.
இத்திட்டத்தின் மூலம் இதுவரை இந்தியாவில் 1,98,977 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம் தினமும் 45,490 லிட்டர் எரிபொருள் சேமிக்கப்படுகிறது. அதே நேரத்தில் வாகனங்கள் இயங்குவதால் காற்றில் கலக்கும் மாசு நாள் ஒன்றிற்கு 1,13,364 கிலோ குறைக்கப்பட்டுள்ளது.
எலெக்ட்ரிக் கார்களின் வருகையால் இந்தியாவில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாவதோடு, ஆட்டோமொபைல் துறையில் பெரும்புரட்சியே ஏற்படும் என தெரிகிறது.
தொடர்ந்து அரசு எலெக்ட்ரிக் கார்கள் விற்பனை மீது காட்டும் ஆர்வத்தை எலெக்ட்ரிக் கார் குறித்த விழிப்புணர்வையும், மக்களுக்கு எடுத்து செல்ல வேண்டிய பொறுப்பும் அரசுக்கு இருக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்: