Just In
- 1 hr ago டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- 1 hr ago மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
- 1 hr ago இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!
- 2 hrs ago பைக்க விட அதிக மைலேஜ் தரும் ஹூண்டாய் கார்.. பொய் சொல்லல.. ஸ்ட்ராங்கான ஆதாரத்தோடதான் சொல்றாங்க!
Don't Miss!
- Sports தோனியால் 2 - 3 ஓவர்கள் தான் விளையாட முடியும்.. ஏன் தெரியுமா? காரணத்தை சொன்ன பயிற்சியாளர் பிளெமிங்!
- Technology புரட்டிப்போடும் பட்ஜெட்.. ரூ.1099 போதும்.. MAP நேவிகேஷன்.. HD டிஸ்பிளே.. 230mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Lifestyle உங்களுக்கான அதிர்ஷ்ட மோதிரம் எது தெரியுமா? தங்கமா, வெள்ளியா?
- News நள்ளிரவில் என்ன குழப்பம்? மாறி மாறி வந்த கணக்கு.. இதெல்லாம் காரணமா? ஓட்டுப்பதிவு 72% அல்லது 69.4%?
- Movies Blue sattai Maaran: தற்போதைக்கு திருந்திய.. விஜய் ஆண்டனி கருத்துக்கு ப்ளூ சட்டை மாறன் பதிலடி!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Finance தங்கம் விலை பொசுக்குனு குறைஞ்சிடுச்சு! கேட்கவே இனிமையா இருக்கு.. சென்னை, கோவை, மதுரையில் என்ன விலை?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
இதை செய்யாத அதிகாரிகளின் வாகனங்களுக்கு பெட்ரோல் கிடையாது.. முறைகேட்டை தடுக்க முதல்வர் அதிரடி
அரசாங்க வாகனங்களை அதிகாரிகள் முறைகேடாக பயன்படுத்துவதை தவிர்க்கும் பொருட்டு, பல்வேறு அதிரடியான உத்தரவுகளை, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பிறப்பித்துள்ளார்.
அரசாங்க வாகனங்களை அதிகாரிகள் முறைகேடாக பயன்படுத்துவதை தவிர்க்கும் பொருட்டு, பல்வேறு அதிரடியான உத்தரவுகளை, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பிறப்பித்துள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
அரசு அதிகாரிகளின் பயன்பாட்டிற்காக அரசு சார்பில் வாகனங்கள் வழங்கப்படுவது வழக்கம். ஆனால் டெல்லி மாநில அதிகாரிகள் சிலர், அரசு வழங்கிய வாகனங்களை, முறைகேடாக பயன்படுத்தி வருவதாக தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வந்தன.
ஒரு சில துறைகளை சேர்ந்த அதிகாரிகள், ஒன்றுக்கும் மேற்பட்ட வாகனங்களை பயன்படுத்தி வருவதாகவும், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம், நேரடியாக புகார் தெரிவிக்கப்பட்டது. எனவே முறைகேடுகளை தவிர்ப்பதற்காக பல்வேறு அதிரடி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
இதன்படி ஒரு அரசு அதிகாரி, ஒரு அரசாங்க வாகனத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதுதான் முதலாவது உத்தரவு. கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளதை காரணம் காட்டி, ஒன்றுக்கும் மேற்பட்ட அரசாங்க வாகனங்களை பயன்படுத்த கூடாது.
இரண்டாவது உத்தரவு ஜிபிஎஸ். அரசு அதிகாரிகள் பயன்படுத்தி வரும் வாகனங்கள் அனைத்திலும், வரும் செப்டம்பர் 30ம் தேதிக்குள், ஜிபிஎஸ் டிவைஸ் பொருத்தப்பட வேண்டும். இல்லாவிட்டால் அக்டோபர் 1ம் தேதி முதல், அந்த வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்ப அதிகாரிகளுக்கு பணம் வழங்கப்படாது.
எனவே அதிகாரிகள் பயன்படுத்தி வரும் அனைத்து அரசு வாகனங்களிலும், செப்டம்பர் 30ம் தேதிக்கு உள்ளாக, ஜிபிஎஸ் டிவைஸ் பொருத்தி விடும்படி, அனைத்து துறைகளின் தலைவர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவுகளை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்தான் பிறப்பித்துள்ளார்.
முதலில் இந்த உத்தரவை அமல்படுத்த கூடுதல் கால அவகாசம் கேட்கப்பட்டது. ஆனால் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அதனை நிராகரித்து விட்டார். ஜிபிஎஸ் டிவைஸ் பொருத்தப்படுவதன் மூலமாக, அரசு அதிகாரிகள் வாகனங்கள் எங்கெங்கு செல்கிறது? என்பதை எளிதாக கண்காணிக்க முடியும்.
அத்துடன் ஒரு அதிகாரி ஒன்றுக்கும் மேற்பட்ட வாகனங்களை பயன்படுத்துவதை தவிர்க்கவும் இது உதவும். டெல்லி மாநில தலைமை செயலகத்தில், அக்டோபர் 1ம் தேதிக்கு முன்பாக, கண்ட்ரோல் அறை ஒன்றை திறக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
அங்கிருந்தபடி அரசு அதிகாரிகளின் வாகனங்களை கண்காணிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த அதிரடி உத்தரவுகள், அரசு அதிகாரிகளின் வயிற்றில் புளியை கரைத்துள்ளன. அதே சமயம் இந்த உத்தரவுகள் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கு போட்டியாக மஹிந்திரா நிறுவனம் சமீபத்தில் லான்ச் செய்த மராஸ்ஸோ காரின் ஆல்பம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
-
35 வயதில் 1.5 கோடி ரூபாய் காருக்கு ஓனராகி இருக்கும் பிரபல சினிமா பாடகி!! புது காரில் கணவரோடு ஒரு சின்ன டிரைவ்!
-
பெட்டிகடை வச்சிருக்கிறவன் கூட கணக்கு வச்சிருப்பான்! ஆனா இந்திய ரயில்வே நிர்வாகத்திடம் இந்த கணக்கு இல்லையாம்!
-
ரூ6 லட்சம் தான் கார் விலை, 4 ஸ்டார் ரேட்டிங்கும் இருக்குது! ஆனா சேல்ஸ் சரியாக ஆகல! என்ன கார் தெரியுமா?