Just In
- 2 hrs ago போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- 2 hrs ago ஹெல்மெட் போடாமல் பைக்கில் போன விஜய் சேதுபதி! ஓட்டு போட வந்த இடத்தில் மானமே போச்சு!
- 3 hrs ago நடிகர் தனுஷ் ஓட்டு போட வந்த காரின் விலை என்ன தெரியுமா? இவ்வளவு காஸ்ட்லியான காரா இது?
- 4 hrs ago இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
Don't Miss!
- News தாமரைக்கு ஓட்டுபோட கூறிய மூதாட்டி.. விரலை மாத்தி அழுத்திய தேர்தல் அதிகாரி? எல் முருகன் வாக்குவாதம்
- Movies ஊட்டி மலை ப்யூட்டி.. உதகைக்கு டூர் போறீங்களா?.. அப்போ உங்க பிளே லிஸ்ட்ல இதெல்லாம் மிஸ் பண்ணிடாதீங்க!
- Lifestyle 1 கப் பச்சரிசி மாவு வெச்சு.. இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ஒரு வாரத்துக்கு ஸ்நாக்ஸ் பிரச்சனையே வராது..
- Finance தங்கம் விக்கிற விலைக்கு 1000 கிலோ தங்கம் காணிக்கை.. திருப்பதி வெங்கடாஜலபதி மகிமையே மகிமை..!!
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
- Sports "பிரேக் அப் பண்ணப் போறாங்க" அழகான பெண்ணை பார்த்து வாயை பிளந்த சுப்மன் கில்.. வெளியான வீடியோ
- Technology பொளந்து கட்டுது சேல்.. ரூ.20499 பட்ஜெட்ல 108MP கேமரா.. 3D டிஸ்பிளே.. 5800mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சீனாவுடன் போட்டி...மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு... என்னவென்று தெரியுமா?
சீனா உள்ளிட்ட உலக நாடுகள் போட்டி போட்டு கொண்டு எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறி கொண்டிருக்கின்றன.
சீனா உள்ளிட்ட உலக நாடுகள் போட்டி போட்டு கொண்டு எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறி கொண்டிருக்கின்றன. இந்நிலையில் எலக்ட்ரிக் கார்களின் பேட்டரிக்கான ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு வெகுவாக குறைக்க வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுபற்றிய விரிவான செய்தியை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.
காற்று மாசுபாடு
பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களை பயன்படுத்தும் மோட்டார் வாகனங்களால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்திய தலைநகர் டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்கள் காற்று மாசுபாட்டினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
வருடத்திற்கு பத்து லட்சம் பேர் பலி
இந்தியாவுக்கே இப்படி என்றால், இந்தியாவை விட அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவின் நிலையை யோசித்து பாருங்கள். சீனாவின் முன்னணி நகரங்கள் பலவும் வெகுவாக மாசடைந்து விட்டன. சீனாவில் காற்று மாசுபாட்டினால் மட்டும் ஒரு வருடத்திற்கு பத்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருவதாக அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
எலக்ட்ரிக் வாகனம் பெஸ்ட்
இந்தியா, சீனா மட்டுமல்ல. பெட்ரோல், டீசலை எரிபொருளாக பயன்படுத்தும் வாகனங்கள் வெளியிடும் புகையினால், உலகின் பெரும்பாலான நாடுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கு எல்லாம் மாற்றாக இருப்பது எலக்ட்ரிக் வாகனங்கள்தான்.
சுற்றுச்சூழலுக்கு மாசு இல்லை
மின்சாரத்தை பயன்படுத்தி இயங்கும் எலக்ட்ரிக் வாகனங்களால் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. இதனால் உலக நாடுகள் பலவும் தற்போது வேக வேகமாக எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறி வருகின்றன.
காத்திருக்கும் பேராபத்து
குறிப்பாக இந்தியாவும், சீனாவும் உச்சக்கட்ட வேகத்தில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறியாக வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளன. இல்லாவிட்டால் எதிர்காலத்தில் பேராபத்துக்களை இரு நாடுகளும் சந்திக்க வேண்டியது வரும். இதை நன்றாக புரிந்து கொண்ட சீனா மிக வேகமாக முன்னேறி வருகிறது.
சீனாவின் கிடு...கிடு...வளர்ச்சி
ஆம், சீனாவை குறை சொல்வதற்கு ஒன்றும் இல்லை. எலக்ட்ரிக் பொருட்களுக்கு பெயர் பெற்ற சீனா, மின்னல் வேகத்தில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறி வருகிறது. கடந்த 2017ம் ஆண்டில் மட்டும் சீனாவில் 6,80,000க்கும் மேற்பட்ட எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. இதர உலக நாடுகள் அனைத்திலும் விற்பனையான எலக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கையை விட இது அதிகம்.
அமெரிக்காவினாலும் நெருங்க முடியவில்லை
உலக வல்லரசான அமெரிக்கா கூட எலக்ட்ரிக் வாகன உற்பத்தி மற்றும் விற்பனையில் சீனாவை நெருங்க முடியவில்லை. அந்த அளவுக்கு சீனா வெகு வேகமாக முன்னேறி சென்று கொண்டிருக்கிறது. அனைத்து வாகனங்களும் எலக்ட்ரிக் ஆக இருக்கும் உலகின் முதல் எகோ சிஸ்டம் சீனாவினுடையதாகதான் இருக்கும் என ஆட்டோமொபைல் வல்லுனர்கள் கருதுகின்றனர்.
இந்தியாவின் நிலை
சீனாவுக்கு நிகரான மக்கள் தொகையை கொண்ட இந்தியாவும் இதற்கு எல்லாம் ஈடுகொடுத்தாக வேண்டிய நிலையில் உள்ளது. இதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
பல்வேறு நடவடிக்கைகள்
ஜிஎஸ்டி வரி குறைப்பு?
இதனிடையே எலக்ட்ரிக் கார் பேட்டரிகளுக்கான ஜிஎஸ்டி வரி குறைக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது எலக்ட்ரிக் கார் பேட்டரிகளுக்கான ஜிஎஸ்டி வரி 28 சதவீதமாக உள்ளது. இது 12 சதவீதமாக குறைக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
மகேந்திரா, டாட்டா
தற்போது இந்தியாவில் மகேந்திரா மற்றும் டாட்டா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்கள் எலக்ட்ரிக் கார்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. மத்திய அரசின் முடிவு எலக்ட்ரிக் கார் உற்பத்தி செலவை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எலக்ட்ரிக் கார் விலை குறையலாம்
எந்தவொரு எலக்ட்ரிக் வாகனம் என்றாலும், அதில் விலை உயர்ந்த பார்ட் என்றால், அது எலக்ட்ரிக் பேட்டரிதான். எனவே ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டால், எலக்ட்ரிக் கார்களின் விலை குறையலாம்.
முடியுமா?
இந்தியாவின் பேம் என்ற அமைப்பு 2020ம் ஆண்டுக்குள் 6-7 மில்லியன் எலக்ட்ரிக் வாகனங்களை சாலைகளில் ஓட வைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது.
மலைக்க வைக்கும் ஆயில் தேவை
மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பு ஆய்வு ஒன்றை நடத்தியது. இதில், 2017-2030ம் ஆண்டு வரை இந்தியாவின் பயணிகள் வாகனங்களுக்கான ஆயில் தேவை 1.6 பில்லியன் மெட்ரிக் டன்னாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
பூஸ்ட்...!
இதுபோன்ற காரணங்களும், ஆயிலின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதும், எலக்ட்ரிக் வாகன உற்பத்திக்கான ஒரு மிகப்பெரும் ஊக்கமாக இருக்கும் என கருதப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்
-
ஒருத்தர், ரெண்டு பேர் இல்ல, ஒரு குடும்பத்தையே ஏற்றி செல்லலாம்!! ரூ.11.40 லட்சத்தில் கிடைக்கும் பொலேரோ கார்...
-
தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு
-
நாசாவே அசந்து போகும் முக்கிய கருவியை உருவாக்கிய இஸ்ரோ! இனி உலகமே நம்ம கிட்ட தான் இந்த ஐடியாவை கேட்கும்!