Just In
- 18 min ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- 36 min ago எவ்வளவு பெரிய கிரிக்கெட்டர், குழந்தை போல் ராயல் என்ஃபீல்டு பைக்கில் ரைடு!! ஓட்டி பார்த்த பின் அவர் சொன்னது...
- 2 hrs ago உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- 2 hrs ago தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
Don't Miss!
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- News சென்னையில் பிரபல ‛பப்’ மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து.. மெட்ரோ பணிகள் காரணமா! பகீர் தகவல்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
பெட்ரோல் விலை உயர்வுக்கு மாநில அரசுகள் தான் காரணம்; ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர கடும் எதிர்ப்பு
இந்தியாவில் பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர மத்திய அரசு விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், ஆனால் மாநில அரசுகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதால் தற்போதைக்கு பெட்ரோல், டீசலுக்கு
இந்தியாவில் பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர மத்திய அரசு விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், ஆனால் மாநில அரசுகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதால் தற்போதைக்கு பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி வரி என்பது சாத்தியமே இல்லை என நம்ப தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் மத்திய அரசு ஒரு தேசம் ஒரு வரி என்ற கொள்கையில் ஜிஎஸ்டி வரியை கடந்தாண்டு ஜூலை மாதம் அறிமுகப்படுத்தியது. நாட்டில் உள்ள பல்வேறு வரிகளை ஒன்றினைத்து 5 ஸ்லாப்களாக பிரித்து அதன் கீழ் அனைத்து வகையான தயாரிப்புகள் மற்றும் சேவைகள் வகைப்படுத்தப்பட்டு அதற்கு வரி விதிக்கப்படுகிறது.
இந்த வகைப்படுத்தல் மற்றும் ஜிஎஸ்டி விவகாரங்களை கட்டமைக்க ஜிஎஸ்டி கவுன்சில் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த கவுன்சிலில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசின் பிரதிநிதிகளும் உள்ளடக்கம்.
இந்நிலையில் இந்தியாவில் சில பொருட்களுக்கு மட்டும் ஜி.எஸ்.டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதில் பெட்ரோல்,டீசல், நேச்சுரல் கேஸ், ஜெட் பியூயல், குரூட் ஆயில், ஆகியவையும் அடங்கும்.
தற்போது இந்தியாவில் விற்பனையாகும் பெட்ரோலுக்கு மத்திய அரசு ரூ 19.48 மற்றும் டீசலுக்கு 15.33 என வரி வசூலிக்கிறது. மாநில அரசுகள் அதற்கு மேல் வாட் வரியை வசூலிக்கிறது. ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு விதமாக வரியை வசூலிக்கின்றனர்.
குறைந்த பட்சமாக அந்தமான் நிக்கோபார் தீவுகளில் பெட்ரோல் மற்றும் 6 சதவீத வரியை வாட் வரியாக வசூலிக்கிறது, அதிகபட்சமாக பெட்ரோலுக்கு மஹாராட்டிராவில் 39.12 சதவீத வரியும், டீசலுக்கு அதிகபட்சமாக தெலுங்கானாவில் 26 சதவீத வரியும் வசூலிக்கப்படுகிறது.
தற்போது நாம் பெட்ரோலுக்காக வழங்கப்படும் விலையில் பெட்ரோலில் 45-50 சதவீதமான பணமும், டீசலில் 35-40 சதவீதமான பணமும் வரியாக மத்திய மாநில அரசுகள் வசூலிக்கிறது.
தற்போது ஜிஎஸ்டியில் அதிகபட்சமாக உள்ள 28 சதவீத வரியை பெட்ரோலுக்கு விதித்தால் கூட பெட்ரோல் தற்போது விற்கப்படும் விலையில் இருந்து மிகவும் குறையும்.
ஆனால் இதன் மூலம் இருஅரசுகளும் பெரிய அளவு நஷ்டத்தை சந்திக்க நேரிடும். ஆனால் மக்கள் மத்தியிலும் சில அரசியல் கட்சிகள் மத்தியிலும் பெட்ரோலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து நம்ப தகுந்த வட்டாரத்தில் இருந்து வந்த தகவலில் கடந்த 4ம் தேதி நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இது குறித்த விவகாரத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. அதற்கு அனைத்து மாநில தரப்பில் இருந்தும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாக தெரிகிறது.
மத்திய அரசு தற்போது பெட்ரோல் மற்றும் டீசலை மட்டுமாவது ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர முயற்சி செய்து வருகிறது. ஆனால் அதற்கு மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பெட்ரோல் டீசல் ஜிஎஸ்டி வரம்பிற்குள் வந்தால் மத்திய அரசு ஆண்டிற்கு சுமார் 20 ஆயிரம் கோடி அளவில் வருவாய் இழப்பை சந்திக்க நேரிடும் என உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பெட்ரோலிய பொருட்கள் மூலம் மத்திய அரசிற்கு கடந்த 2014-2015ம் ஆண்டில் ரூ 99,184 கோடியாக இருந்த வருவாய் 2017-2018ல் 2,29,019 கோடியாக உயர்ந்தது. அதே போல மாநில அரசுகளுக்கு 2014-15ல் மொத்தமாக ரூ 1,37,157 கோடியாக கிடைத்த வருவாய், 2017-18 ல் 1,84,091 கோடியாக உயர்ந்துள்ளது.
தற்போது நம்ப தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவலின் படி பெட்ரோலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர மத்திய அரசு ஆர்வம் காட்டி வந்தாலும் மாநில அரசுகள் அதை தொடர்ந்து எதிர்த்து வருகிறது. பொட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வருவது மூலம் ஏற்படும் நஷ்டத்தை ஈடு செய்ய மாநில அரசுகள் முயற்சி எடுக்காத வரையில் பெட்ரோல் டீசல் ஜிஎஸ்டி வரம்பிற்குள் வருவது கஷ்டம் தான்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்
-
ரூ.5 லட்சத்தை கையில் வைத்துக்கொண்டு அல்லாடுறீங்களா? பவர்ஃபுல் பைக்ஸுக்கு நம் நாட்டில் எப்போதுமே குறை இல்லை!!
-
குடிநீரில் கழுவினால் அபராதம்! பெங்களூர் கார் ஓனர்கள் கையில் எடுத்த புதிய ட்ரிக்! இது நமக்கு தெரியாம போச்சே!
-
இது ஏப்ரல் ஃபூல் கிடையாது.. டாடா அல்ட்ராஸ் ரேஸர் கார் ஏப்ரல்ல அறிமுகமாக போகுது! இறங்கி அடிக்க தயாராகும் டாடா!