நிலைமை கை மீறி செல்கிறது... கொரோனாவை சமாளிக்க முடியாமல் குஜராத் அரசு திடீர் முடிவு... மக்கள் கலக்கம்

கொரோனா வைரஸ் பிரச்னையை சமாளிக்க முடியாமல் குஜராத் அரசு எடுக்கவுள்ள திடீர் முடிவால், மக்கள் கலக்கமடைந்துள்ளனர்.

நிலைமை கை மீறி செல்கிறது... கொரோனாவை சமாளிக்க முடியாமல் குஜராத் அரசு திடீர் முடிவு... மக்கள் கலக்கம்

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக, இந்தியாவில் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனவே அன்றைய தினம் முதல் பஸ், ரயில், விமானம், ஆட்டோ, டாக்ஸி என அனைத்து விதமான பொது போக்குவரத்து வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. கார், டூவீலர் உள்ளிட்ட தனியார் வாகனங்களை இயக்குவதற்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

நிலைமை கை மீறி செல்கிறது... கொரோனாவை சமாளிக்க முடியாமல் குஜராத் அரசு திடீர் முடிவு... மக்கள் கலக்கம்

இந்த எச்சரிக்கையை மீறி இயக்கப்பட்ட வாகனங்களை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர். இதன் காரணமாக இந்தியாவில் வாகன போக்குவரத்து முற்றிலுமாக முடங்கி, சாலைகள் வெறிச்சோடி போயின. அத்துடன் வாகனங்களின் இயக்கும் குறைந்ததால், பெட்ரோல், டீசல் விற்பனையும் மிக கடுமையாக பாதிக்கப்பட்டது.

நிலைமை கை மீறி செல்கிறது... கொரோனாவை சமாளிக்க முடியாமல் குஜராத் அரசு திடீர் முடிவு... மக்கள் கலக்கம்

ஆனால் ஊரடங்கில் தற்போது படிப்படியாக பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன. எனவே வாகன போக்குவரத்து மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. தமிழகம் உள்பட பல மாநிலங்களில் தற்போது பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அத்துடன் ஆட்டோ, டாக்ஸிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நிலைமை கை மீறி செல்கிறது... கொரோனாவை சமாளிக்க முடியாமல் குஜராத் அரசு திடீர் முடிவு... மக்கள் கலக்கம்

மேலும் பயணங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளன. எனவே சாலைகளில் தற்போது வழக்கமான அளவில் வாகனங்களை காண முடிகிறது. இதனால் பெட்ரோல், டீசல் விற்பனை விரைவில் இயல்பு நிலைக்கு வந்து விடும் என எதிர்பார்த்து கொண்டிருக்கும் பங்க் நிர்வாகங்களுக்கு பல்வேறு மாநில அரசுகளும் அதிர்ச்சியை கொடுத்து வருகின்றன.

நிலைமை கை மீறி செல்கிறது... கொரோனாவை சமாளிக்க முடியாமல் குஜராத் அரசு திடீர் முடிவு... மக்கள் கலக்கம்

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக தொழில்கள் முடங்கியதால், அரசுக்கு வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அதிக நிதி தேவைப்படுகிறது. எனவே வருவாயை பெருக்கும் விதமாக பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை இந்தியாவின் பல்வேறு மாநில அரசுகளும் அதிரடியாக உயர்த்தி வருகின்றன.

நிலைமை கை மீறி செல்கிறது... கொரோனாவை சமாளிக்க முடியாமல் குஜராத் அரசு திடீர் முடிவு... மக்கள் கலக்கம்

இந்த வரிசையில் ஊரடங்கால் ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடுகட்டும் வகையில், எரிபொருள் மீதான வாட் வரியை உயர்த்துவது குறித்து குஜராத் மாநில அரசும் பரிசீலித்து வருகிறது. குஜராத் துணை முதல்வரான நிதின் பட்டேல் இத்தகவலை தெரிவித்துள்ளார். குஜராத் அரசு தற்போதைய நிலையில், பெட்ரோல், டீசல் விற்பனையின் மீது 21 சதவீத வரியை விதித்து வருகிறது.

நிலைமை கை மீறி செல்கிறது... கொரோனாவை சமாளிக்க முடியாமல் குஜராத் அரசு திடீர் முடிவு... மக்கள் கலக்கம்

17 சதவீத வாட், 4 சதவீத செஸ் என மொத்தம் 21 சதவீத வரி விதிக்கப்படுகிறது. இதில், வாட் வரியை உயர்த்த குஜராத் அரசு திட்டமிட்டுள்ளது. இந்தியாவிலேயே குஜராத் மாநிலத்தில்தான் வாட் வரியும், எரிபொருளின் விலையும் குறைவாக உள்ளது என நிதின் பட்டேல் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ''ஜிஎஸ்டி மூலமாக கிடைக்க வேண்டிய கணிசமான வருவாயை நாங்கள் இழந்துள்ளோம்.

நிலைமை கை மீறி செல்கிறது... கொரோனாவை சமாளிக்க முடியாமல் குஜராத் அரசு திடீர் முடிவு... மக்கள் கலக்கம்

ஊரடங்கு காரணமாக தொழில்கள் பாதிக்கப்பட்டதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. அதே சமயம் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை அறிவித்து வருவதால், எங்களுக்கு கூடுதல் செலவுகள் ஏற்பட்டுள்ளன. இந்தியாவிலேயே குஜராத் மாநிலத்தில்தான் எரிபொருள் விலை குறைவாக உள்ளது. ஏனெனில் எங்கள் வாட் வரியும் மிக குறைவு.

நிலைமை கை மீறி செல்கிறது... கொரோனாவை சமாளிக்க முடியாமல் குஜராத் அரசு திடீர் முடிவு... மக்கள் கலக்கம்

எனவே வாட் வரியை உயர்த்த வேண்டும் என நிபுணர்கள் எங்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர். மற்ற மாநிலங்களின் அளவுக்கு வாட் வரியை கொண்டு வர வேண்டும் என அவர்கள் பரிந்துரை வழங்கியுள்ளனர். கொரோனா வைரஸை எதிர்த்து போரிடுவதற்கு இது உதவும். அதே சமயம் வளர்ச்சி செலவினங்களை சமாளிப்பதற்கும் இது உதவும்'' என்றார்.

நிலைமை கை மீறி செல்கிறது... கொரோனாவை சமாளிக்க முடியாமல் குஜராத் அரசு திடீர் முடிவு... மக்கள் கலக்கம்

எனினும் இது குறித்து எந்த ஒரு இறுதி முடிவும் தற்போது வரை எடுக்கப்படவில்லை எனவும் குஜராத் மாநில துணை முதல்வர் நிதின் பட்டேல் கூறியுள்ளார். ஆனால் வரும் நாட்களில் வாட் வரி உயர்த்தப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதால், குஜராத் மாநிலத்தில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் தென்பட தொடங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

நிலைமை கை மீறி செல்கிறது... கொரோனாவை சமாளிக்க முடியாமல் குஜராத் அரசு திடீர் முடிவு... மக்கள் கலக்கம்

ஏற்கனவே பண புழக்கம் குறைந்துள்ள நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டால் என்ன செய்வது? என தெரியாமல் வாகன ஓட்டிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். அத்துடன் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டால், விற்பனை பாதிக்கும் என்பதால், பெட்ரோல் பங்க் நிர்வாகங்களும் கவலையில் ஆழ்ந்துள்ளன.

நிலைமை கை மீறி செல்கிறது... கொரோனாவை சமாளிக்க முடியாமல் குஜராத் அரசு திடீர் முடிவு... மக்கள் கலக்கம்

இந்தியாவில் கொரோனா வைரஸால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் குஜராத்தும் ஒன்று என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மஹாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களை போன்று குஜராம் மாநிலத்திலும் கொரோனா வைரஸ் தற்போது கோர தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் இந்த மாநிலங்களுக்கு நிதி நெருக்கடியை சமாளிக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Gujarat Govt Mulling Hike In Value Added Tax On Petrol And Diesel To Increase Revenue. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X