Just In
- 2 hrs ago அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- 3 hrs ago இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- 5 hrs ago இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- 12 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
Don't Miss!
- Movies மொத்தத்துக்கும் வேட்டு வைத்த டாப் நடிகர்.. தலை காட்டா முடியாமல் தவிக்கும் டைரக்டர்.. ரொம்ப பாவம்!
- News மணல் கொள்ளை விவகாரம்.. ED - விசாரணைக்கு 5 மாவட்ட ஆட்சியர்கள் இன்று ஆஜர்?
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு சுக்கிர சேர்க்கை: மே மாசம் இந்த 3 ராசிக்கு தொழில் பிரகாசிக்கப் போகுது..
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம், இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ரவீந்திர ஜடேஜாவின் காரை நிறுத்திய பெண் போலீஸ்... அதன்பின் என்ன நடந்தது தெரியுமா? பரபரப்பு சம்பவம்
கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் காரை பெண் காவலர் நிறுத்திய பின்னர் பரபரப்பு சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.
இந்தியாவில் கொரோனா வைரஸ் (கோவிட்-19) கோர தாண்டவம் ஆடி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வரும் நிலையிலும், ஊரடங்கு உத்தரவில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தளர்வுகளையும் வழங்கி கொண்டே வருகின்றன. எனவே சாலைகளில் வாகன போக்குவரத்து கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.
ஆனால் வாகனங்களில் பயணம் செய்யும் அனைவரும் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இரு சக்கர வாகனம் என்றாலும் சரி அல்லது கார் போன்ற நான்கு சக்கர வாகனங்கள் என்றாலும் சரி, அனைத்து வகையான வாகனங்களில் பயணம் செய்பவர்களும் தற்போது கட்டாயமாக முக கவசம் அணிந்தாக வேண்டும்.
இந்த உத்தரவை மீறுபவர்களுக்கு காவல் துறையினர் அபராதம் விதித்து வருகின்றனர். எனினும் கார்களில் தனியாக பயணிக்கும் ஒரு சிலர் முக கவசம் அணிவதில்லை. இதனால் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு, டெல்லி காவல் துறையினர் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்தனர். இதன்படி கார்களில் தனியாக பயணம் செய்பவர்களும் முக கவசம் அணிவது கட்டாயம்.
அதேபோல் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்கள் தலை கவசம் அணிந்து அதன் மேல் முக கவசம் அணிய வேண்டும். இதை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என காவல் துறை தரப்பில் அறிவிக்கப்பட்டது. இப்படிப்பட்ட சூழலில், இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா முக கவசம் தொடர்பான சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளார்.
கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா நேற்று இரவு சுமார் 9 மணியளவில் ராஜ்கோட் நகரில் உள்ள கிஷன்பாரா சௌக் பகுதியில் காரில் வந்து கொண்டிருந்தார். காரில் ரவீந்திர ஜடேஜாவின் மனைவியும் உடனிருந்தார். அப்போது அனைத்து மகளிர் காவல் நிலையத்தை சேர்ந்த தலைமை காவலர் சோனல் கோசாய் அவரது காரை நிறுத்தியுள்ளார்.
முக கவசம் அணியாத காரணத்திற்காக ரவீந்திர ஜடேஜாவின் காரை தலைமை காவலர் சோனல் கோசாய் நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதற்காக அபராதம் செலுத்துமாறு தலைமை காவலர் சோனால் கோசாய் கூறியதாகவும், அத்துடன் ரவீந்திர ஜடேஜாவின் ஓட்டுனர் உரிமத்தை காட்டும்படி அவர் கேட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் அந்த பெண் காவலர் தன்னிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டார் என ரவீந்திர ஜடேஜா காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அதே சமயம் ரவீந்திர ஜடேஜாவின் காரை தடுத்து நிறுத்தியதாக கூறப்படும் பெண் காவலர் மன அழுத்தம் காரணமாக தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளார்.
முன்னதாக அந்த பெண் காவலருக்கும், ரவீந்திர ஜடேஜாவிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து காவல் துறை துணை ஆணையர் மனோகர்சிங் ஜடேஜா கூறுகையில், ''முரட்டுத்தனமாக நடந்து கொண்டதாக ரவீந்திர ஜடேஜாவும், பெண் காவலரும் ஒருவருக்கொருவர் புகார் செய்துள்ளனர்.
ஆனால் இரு தரப்பில் இருந்தும் இதுவரை முறையாக புகார் எதுவும் வரவில்லை. எனக்கு கிடைத்த தகவல்படி ரவீந்திர ஜடேஜா முக கவசம் அணிந்திருந்தார். ஆனால் அவரது மனைவி முக கவசம் அணிந்திருந்தாரா? அல்லது இல்லையா? என்பது பற்றி நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம்'' என்றார். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Note: Images used are for representational purpose only.
-
கியா களமிறக்கும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! பெட்டி கடைல கடலை மிட்டாய் விக்கற மாதிரி விக்க போகுது!
-
இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
-
இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?