விமான போர்டிங் பாஸ்சில் இருந்து பயணிகளின் தகவல்களை திருட முடியுமா?

விமான பயணத்தின் போது வழங்கப்படும் போர்டிங் பாஸில் உள்ள க்யூ.ஆர். கோர்டை பயன்படுத்தி பயணிகளின் தகவல்களை திருட முடியாமா என்ற அச்சம் மக்கள் மத்தியில் சமீபத்தில் வெளியான இருப்புத்திரை என்ற படம் மூலமாக

By Balasubramanian

விமான பயணத்தின் போது வழங்கப்படும் போர்டிங் பாஸில் உள்ள க்யூ.ஆர். கோர்டை பயன்படுத்தி பயணிகளின் தகவல்களை திருட முடியாமா என்ற அச்சம் மக்கள் மத்தியில் சமீபத்தில் வெளியான இருப்புத்திரை என்ற படம் மூலமாக வந்துள்ளது. இந்த திருட்டு நடக்க வாய்ப்புள்ளதா என்பதை விளக்கும் செய்தி தான் இது.

இரும்புத்திரை படத்தில் வருவது போல விமான போர்டிங் பாஸ்சில் இருந்து பயணிகளின் தகவல்களை திருட முடியுமா?

சமீபத்தில் நடிகர் விஷால் நடிப்பில் வெளியான இரும்புத்திரை படத்தில் டிஜிட்டல் முறையில் ஹேக் செய்வது குறித்து பேசப்பட்டிருக்கும். அதில் ஒரு காட்சியில் விமான பயணத்தின் போது பயன்படுத்தப்படும் போர்டிங் பாஸில் உள்ள க்யூ ஆர் கோடு மூலம் தகவல்கள் திருடப்படுவதாக கூறப்பட்டிருந்தது. அது சாத்தியமா? போர்டிங் பாஸ் கோடில் அப்படி என்னென்ன தகவல்கள் இருக்கும் என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இரும்புத்திரை படத்தில் வருவது போல விமான போர்டிங் பாஸ்சில் இருந்து பயணிகளின் தகவல்களை திருட முடியுமா?

பொதுவாக போர்டில் பாஸில் உள்ள க்யூ.ஆர். கோர்டில் டீகோட் செய்யப்பட்ட தகவல்கள் மட்டுமே இருக்கும். அதை சில ஹேக்கர்கள் என் கோடு செய்து பயன்படுத்துவதாக சில தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றனர். ஆனால் அந்த தகவல்கள் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. இது உலகளவில் சில நாடுகளில் ஆய்வுகளும் நடத்தப்படுகின்றனர்.

இரும்புத்திரை படத்தில் வருவது போல விமான போர்டிங் பாஸ்சில் இருந்து பயணிகளின் தகவல்களை திருட முடியுமா?

வெறும் க்யூ. ஆர். கோர்டை வைத்திருப்பது மூலம் மட்டும் உங்களது தகவல்களை அவர்கள் திருடி விட முடியாது. உங்களது க்யூ.ஆர்.கோர்டில் உள்ள தகவல்களை எப்படி டீகோடு செய்ய வேண்டும் என்று ஹேக்கர்களுக்கு முதலில் தெரிய வேண்டும். அந்த தகவல்கள் மிக ரகசியமாக விமான நிறுவனங்கள் மூலம் காக்கப்படுகிறது.

இரும்புத்திரை படத்தில் வருவது போல விமான போர்டிங் பாஸ்சில் இருந்து பயணிகளின் தகவல்களை திருட முடியுமா?

அந்த டீகோடு செய்யப்பட்டதில் நமது டிக்கெட்டின் பி.என்.ஆர். என் மற்றும் நமது பயண விபரங்கள் குறியீடாக இருக்கும். அந்த குறியீட்டிற்கான அர்த்தங்களை புரிந்தவர்களால் மட்டும் தான் சரியாக பி.என்.ஆர். எண் மற்றும் மற்ற தகவல்களை பிரித்து எடுக்க முடியும். குறியீடு குறித்த தகவலும் விமான பயண நிறுவனங்கள் ரகசியமாக வைத்துள்ளன.

இரும்புத்திரை படத்தில் வருவது போல விமான போர்டிங் பாஸ்சில் இருந்து பயணிகளின் தகவல்களை திருட முடியுமா?

சில நேரங்களில் நமது போர்டிங் பாஸ் ஸ்கேன் செய்யப்பட்ட பின்பு ஸ்கேன் செய்த இயந்திரத்தில் நமது தகவல்கள் வரும் அது விமான பயண நிறுவனங்கள் மூலம் அங்கிகரிக்கப்பட்ட ஆப்ஸ்கள் மூலமே அந்த தகவல்கள் வரும். அதனால் அதன் பாதுகாப்பு என்பது விமான நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது.

இரும்புத்திரை படத்தில் வருவது போல விமான போர்டிங் பாஸ்சில் இருந்து பயணிகளின் தகவல்களை திருட முடியுமா?

ஆனால் ஹேக்கர் என்பவர்கள் சட்டங்களை மீறி தொழிற்நுட்பங்களின் உள்ள சில வழிகளை பயன்படுத்தி சட்ட விரோதமாக அதை பயன்படுத்தி வருகின்றன. அவர்களிடம் இருந்து பல தகவல்களை காப்பாற்ற தொழிற்நுட்ப வல்லுநர்கள் போரடிக்கொண்டு தான் இருக்கின்றனர்.

இரும்புத்திரை படத்தில் வருவது போல விமான போர்டிங் பாஸ்சில் இருந்து பயணிகளின் தகவல்களை திருட முடியுமா?

தற்போதைய சூழ்நிலைப்படி போர்டிங் பாஸ் போர்ட்டில் உள்ள க்யூ.ஆர்.கோர்டு மூலம் நம் தகவல்கள் திருடப்பட குறைந்த பட்ச வாய்ப்புகள் உள்ளன. இதை பயன்படுத்தி நம் தகவல்களை அவர்கள் திருடி பயன்படுத்தி கொள்ள முடியும்.

இரும்புத்திரை படத்தில் வருவது போல விமான போர்டிங் பாஸ்சில் இருந்து பயணிகளின் தகவல்களை திருட முடியுமா?

நமது தகவல்கள் பெரும்பாலும் விற்பனையாகின்றன. அதாவது ஒருவர் வெளிநாட்டிற்கு போய் வருகிறார் என்றால் அவர்களது தகவல் கிடைத்தால் ஒரு விமான டிக்கொட் புக் செய்யக்கூடிய நிறுவனம் நமக்கு தொடர்ந்து விளம்பரங்களை தரும். அதாவது நமது செல்போன் நம்பர், வாட்சப், இமெயில் போன்ற வற்றில் நமக்கு அடுத்தவெளிநாடு பயணம் குறித்த விளம்பரத்தை தரும்.

இரும்புத்திரை படத்தில் வருவது போல விமான போர்டிங் பாஸ்சில் இருந்து பயணிகளின் தகவல்களை திருட முடியுமா?

மேலும் சில விமான நிறுவன வெப்சைட்களையோ சர்வர்களையோ ஹேக் செய்ய தெரிந்த நபர்களாக நமது பின்என்ஆர். நம்பர் மூலம் நாம் அந்த டிக்கெட்டை எப்படி வாங்கினோம், எந்த முறையில் பணம் செலுத்தினோம், என்ற தகவலையும் திருட முடியும் என சிலர் சொல்கிறார்கள் அப்படி எந்த சம்பவமும் நடந்ததாக இதுவரை தகவல்கள் இல்லை.

இரும்புத்திரை படத்தில் வருவது போல விமான போர்டிங் பாஸ்சில் இருந்து பயணிகளின் தகவல்களை திருட முடியுமா?

இந்நிலையில் நமது தகவல்கள் திருடப்படாமல் இருக்க நமது போர்டிங் பாஸை பாதுகாப்பது முக்கியம். முதல் கட்டமான போர்டிங் பாஸை பயணம் முடிந்த பின்னும் உங்களிடமே வைத்துக்கொள்ளுங்கள். அதை நீங்கள் நீங்கள் வீசி எறிவதால் தான் மற்றவர்கள் கையில் செல்கிறது. இதனால் அதில் உள்ள தகவல்கள் திருடப்பட வாய்ப்புகள் அதிகம்.

இரும்புத்திரை படத்தில் வருவது போல விமான போர்டிங் பாஸ்சில் இருந்து பயணிகளின் தகவல்களை திருட முடியுமா?

அதே போல நிங்கள் ஏர்போர்ட்டிக்குள் செல்லும் போது போர்டில் பாஸில்உள்ள கோடி வெளியில்தெரியும் படி வைத்திருக்காதீர்கள் சிலர் அதை போட்டோ எடுத்து அதில் உள்ள க்யூ.ஆர். கோர்டை வைத்தே தகவல்களை திருடும் வாய்ப்புகளும் இருக்கிறதாம் சிலர் வீடியோ எடுத்து அதில் உங்கள் க்யூ ஆர் கோர்டு தெளிவாக பதிவான ஒரு பிரேமை கொண்டு உங்களது தகவல்களை திருடுகிறர்கள் என பேச்சு நிலவுகிறது.

இரும்புத்திரை படத்தில் வருவது போல விமான போர்டிங் பாஸ்சில் இருந்து பயணிகளின் தகவல்களை திருட முடியுமா?

மேலும் உங்கள் போர்டிங் பாஸ் உடன் போட்டோ எடுத்து அதை நீங்கள் சமூக வலைதளங்களில் பகிராதீர்கள் அப்படி செய்தால் உங்கள் தகவல்களை நீங்களே கொடுக்கிறீர்கள் என அர்த்தம். நீங்கள் பகிரும் போட்டோவில் உள்ள க்யூ ஆர் கோடு மூலமும் உங்கள் தகவல்கள் திருடப்படலாம்

இரும்புத்திரை படத்தில் வருவது போல விமான போர்டிங் பாஸ்சில் இருந்து பயணிகளின் தகவல்களை திருட முடியுமா?

மேற்கூறப்பட்ட எந்த சம்பவமும் இதுவரை நடந்ததாக அதிகாரபூர்வ தகவல்கள் இல்லை. தகவல்கள் திருடப்படுவது குறித்து சில நாடுகளில் சில வழக்குகள் விசாரணையிலும், சில நாடுகளில் வெறும் தகவல்களும் மட்டுமே உலா வருகின்றன. இருந்தாலும் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
How Hackers Use Hidden Data on Airline Boarding Passes to Hack Flights. Read in Tamil
Story first published: Tuesday, May 15, 2018, 19:03 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X