Just In
- 38 min ago ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
- 2 hrs ago ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- 3 hrs ago இவ்ளோ அழகா பிக்-அப் டிரக்கா! குடும்பத்தோட மட்டுமல்ல வீட்டையே காலி பண்ணி கொண்டு போலாம்!
- 3 hrs ago கியா களமிறக்கும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! பெட்டி கடைல கடலை மிட்டாய் விக்கற மாதிரி விக்க போகுது!
Don't Miss!
- Movies கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!
- News "யாரும் ஒழுங்கா வேலை பார்க்கல.." அதிமுக நிர்வாகிகளிடம் கடிந்து கொண்டாரா எடப்பாடி? வெளியான பரபர தகவல்
- Technology வீட்டுக்கு 1 வாங்குவீங்க.. 8GB மெமரி.. 50W சினிமாட்டிக் சவுண்ட்.. இரண்டு 4K டிவிகளை அறிமுகம் செய்த VU..
- Finance அட்சய திருதியை-க்கு தங்க நகை வாங்கப் போறீங்களா.. இந்த தவறை மட்டும் செஞ்சிடாதீங்க!
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
வாவ்... மக்களின் நலனுக்காக சிறப்பு நடவடிக்கை எடுக்கும் ஹரியானா காவல்துறை...
மாநில மக்களின் நலனுக்காக சிறப்பு நடவடிக்கையை மேற்கொள்ள இருப்பதாக காவல்துறை தலைமை இயக்குனர் தெரிவித்துள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.
நாட்டிற்கே மிகப்பெரிய அச்சுறுத்தலாக போக்குவரத்து விதிமீறல்கள் உருவெடுத்து வருகின்றது. அதுமட்டுமின்றி, இதன் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. ஆகையால், இதனை முற்றிலுமாக ஒழித்துகட்டும் வகையில் மத்திய அரசு புதிய (திருத்தப்பட்ட) மோட்டார் வாகன சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்தியது.
இந்த சட்டம் அமலுக்கு வந்ததில் இருந்து நாடே பெரும் பரபரப்பாக காட்சியளிக்கின்றது. புதிய திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் முன்னதாக வசூலித்து வந்த அபராத்தை, முன்பெப்போதும் இல்லாத அளவில் பத்து மடங்கு உயர்த்தி வசூலிக்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இதுவே இந்த புதிய அபராத திட்டத்திற்கு ஒரு சில மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவிக்க முக்கிய காரணமாக இருக்கின்றது.
அதேசமயம், பல மாநில அரசுகள் போக்குவரத்து விதிமீறல்களே இல்லாத மாநிலமாக மாற்றும் நோக்கில், புதிய அபராத திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. குறிப்பாக பாஜக கட்சியினர் ஆளும் மாநிலங்கள் இதனை நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளன.
இதனால், ஒவ்வொரு நாளும் அந்த மாநிலத்தில் வெளிவரும் செய்திகளுக்கு மிகப்பெரிய கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.
அதிலும், குறிப்பாக அபராதம் குறித்த வெளிவரும் செய்திகளுக்கு அதீத ஆர்வம் காட்டப்படுகின்றது. ஏனென்றால், போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு உச்சபட்ச அளவில் அபராதத்திற்கான செல்லாண் வழங்கப்பட்டு வருகின்றது.
அவ்வாறு, வழங்கப்படும் அபராதம் வாகனத்தின் விலையைக் காட்டிலும் அதிகமானதாக காட்சியளிக்கின்றன. இதனால், சில நேரங்களில் வாகன ஓட்டிகள் மற்றும் போலீஸார்கள் இடையே மோதல் ஏற்படுகின்றது.
அந்தவகையில், ஹரியானா மாநிலத்தில் அரங்கேறிய உச்சபட்ச அபராதம்குறித்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.
இதனால், வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடாத வரை அவர்களை மடக்கி விசாரிக்க வேண்டாம் என அம்மாநில டிஜிபி போலீஸாருக்கு அறிவிறுத்தியிருந்தார்.
இந்நிலையில், மீண்டும் ஓர் புதிய அதிரடி அறிவிப்பை ஹரியானா மாநில டிஜிபி மனோஜ் யாதவ் வெளியிட்டுள்ளார்.
அதாவது, மாநிலத்தில் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராதம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, முன்பெப்போதும் இல்லாத அளவிலான கெடுபிடியை போக்குவரத்து போலீஸார் காட்டி வருகின்றனர்.
ஆகையால், வாகன ஓட்டிகள் இதில் வீணாக சிக்கி, தேவையற்ற சட்ட சிக்கலை சந்திப்பதைத் தவிர்ப்பதற்காக விழிப்புணர்வு மற்றும் போக்குவரத்து கற்பித்தலை மேற்கொள்ளவிருப்பதாக அவர் அறிவித்துள்ளார்.
இந்த சிறப்பான நிகழ்வை மேற்கொள்வதற்காக ஓர் தனி குழு உருவாக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த விழிப்புணர்வு நடவடிக்கை மாநிலத்தின் முக்கியமான உட்பட அனைத்து பகுதிகளும் மேற்கொள்ளப்பட உள்ளது.