Just In
- 2 hrs ago ஸ்விஃப்ட் காரை வாங்க ஆள் இல்லனு நெனைக்கறவங்க வேடிக்கைய மட்டும் பாருங்க... சபதம் எடுத்த மாருதி சுஸுகி...
- 3 hrs ago சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- 4 hrs ago குடும்பத்தோட போறதுக்கு சூப்பர் கார்! ஆஃபரும் அள்ளி குடுக்குறாங்க! ஆனால் சேல்ஸ் சுத்தமா இல்லை ஏன் தெரியுமா
- 4 hrs ago ரிமோட் சாவியுடன் யமஹா ஸ்கூட்டர் அறிமுகம்.. வெறும் 3 ஆயிரம் ரூபாதான் அதிகமா!.. ஆக்டிவா பொழப்புல மண்ணை போடதான்!
Don't Miss!
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Lifestyle மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Movies அட அதுக்குள்ள லீக் ஆகிடுச்சே.. சியான் 62 பட டைட்டில் இதுதானா?.. ஆனால், அந்த வாடை வருதே!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
வாவ்... மக்களின் நலனுக்காக சிறப்பு நடவடிக்கை எடுக்கும் ஹரியானா காவல்துறை...
மாநில மக்களின் நலனுக்காக சிறப்பு நடவடிக்கையை மேற்கொள்ள இருப்பதாக காவல்துறை தலைமை இயக்குனர் தெரிவித்துள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.
நாட்டிற்கே மிகப்பெரிய அச்சுறுத்தலாக போக்குவரத்து விதிமீறல்கள் உருவெடுத்து வருகின்றது. அதுமட்டுமின்றி, இதன் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. ஆகையால், இதனை முற்றிலுமாக ஒழித்துகட்டும் வகையில் மத்திய அரசு புதிய (திருத்தப்பட்ட) மோட்டார் வாகன சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்தியது.
இந்த சட்டம் அமலுக்கு வந்ததில் இருந்து நாடே பெரும் பரபரப்பாக காட்சியளிக்கின்றது. புதிய திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் முன்னதாக வசூலித்து வந்த அபராத்தை, முன்பெப்போதும் இல்லாத அளவில் பத்து மடங்கு உயர்த்தி வசூலிக்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இதுவே இந்த புதிய அபராத திட்டத்திற்கு ஒரு சில மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவிக்க முக்கிய காரணமாக இருக்கின்றது.
அதேசமயம், பல மாநில அரசுகள் போக்குவரத்து விதிமீறல்களே இல்லாத மாநிலமாக மாற்றும் நோக்கில், புதிய அபராத திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. குறிப்பாக பாஜக கட்சியினர் ஆளும் மாநிலங்கள் இதனை நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளன.
இதனால், ஒவ்வொரு நாளும் அந்த மாநிலத்தில் வெளிவரும் செய்திகளுக்கு மிகப்பெரிய கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.
அதிலும், குறிப்பாக அபராதம் குறித்த வெளிவரும் செய்திகளுக்கு அதீத ஆர்வம் காட்டப்படுகின்றது. ஏனென்றால், போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு உச்சபட்ச அளவில் அபராதத்திற்கான செல்லாண் வழங்கப்பட்டு வருகின்றது.
அவ்வாறு, வழங்கப்படும் அபராதம் வாகனத்தின் விலையைக் காட்டிலும் அதிகமானதாக காட்சியளிக்கின்றன. இதனால், சில நேரங்களில் வாகன ஓட்டிகள் மற்றும் போலீஸார்கள் இடையே மோதல் ஏற்படுகின்றது.
அந்தவகையில், ஹரியானா மாநிலத்தில் அரங்கேறிய உச்சபட்ச அபராதம்குறித்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.
இதனால், வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடாத வரை அவர்களை மடக்கி விசாரிக்க வேண்டாம் என அம்மாநில டிஜிபி போலீஸாருக்கு அறிவிறுத்தியிருந்தார்.
இந்நிலையில், மீண்டும் ஓர் புதிய அதிரடி அறிவிப்பை ஹரியானா மாநில டிஜிபி மனோஜ் யாதவ் வெளியிட்டுள்ளார்.
அதாவது, மாநிலத்தில் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராதம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, முன்பெப்போதும் இல்லாத அளவிலான கெடுபிடியை போக்குவரத்து போலீஸார் காட்டி வருகின்றனர்.
ஆகையால், வாகன ஓட்டிகள் இதில் வீணாக சிக்கி, தேவையற்ற சட்ட சிக்கலை சந்திப்பதைத் தவிர்ப்பதற்காக விழிப்புணர்வு மற்றும் போக்குவரத்து கற்பித்தலை மேற்கொள்ளவிருப்பதாக அவர் அறிவித்துள்ளார்.
இந்த சிறப்பான நிகழ்வை மேற்கொள்வதற்காக ஓர் தனி குழு உருவாக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த விழிப்புணர்வு நடவடிக்கை மாநிலத்தின் முக்கியமான உட்பட அனைத்து பகுதிகளும் மேற்கொள்ளப்பட உள்ளது.
-
வாகனங்கள் விஷயத்தில் புதிய விதியை அமலுக்கு கொண்டு வர போறாங்க.. இது என்ன புது குண்டா இருக்கு! என்ன அது?..
-
இவருக்கு இது மறுபிறவி!! எவ்வளவு லட்சம் செலவாகினாலும் பரவாயில்லை, வாங்கினால் இப்படியொரு காரை வாங்கனும்!!
-
5 நிமிஷ சந்தோஷத்துக்காக... தவளை தன் வாயால் சிக்கிடுச்சு!! ஆடி காரில் செய்யும் வேலையா இது?