Just In
- 1 hr ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- 1 hr ago எவ்வளவு பெரிய கிரிக்கெட்டர், குழந்தை போல் ராயல் என்ஃபீல்டு பைக்கில் ரைடு!! ஓட்டி பார்த்த பின் அவர் சொன்னது...
- 3 hrs ago உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- 3 hrs ago தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
Don't Miss!
- Lifestyle உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- News 664 மனு நிராகரிப்பு! தமிழக லோக்சபா தேர்தலில் 1085 வேட்புமனு ஏற்பு! எந்த தொகுதியில் அதிகம் தெரியுமா
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
வாவ்... மக்களின் நலனுக்காக சிறப்பு நடவடிக்கை எடுக்கும் ஹரியானா காவல்துறை...
மாநில மக்களின் நலனுக்காக சிறப்பு நடவடிக்கையை மேற்கொள்ள இருப்பதாக காவல்துறை தலைமை இயக்குனர் தெரிவித்துள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.
நாட்டிற்கே மிகப்பெரிய அச்சுறுத்தலாக போக்குவரத்து விதிமீறல்கள் உருவெடுத்து வருகின்றது. அதுமட்டுமின்றி, இதன் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. ஆகையால், இதனை முற்றிலுமாக ஒழித்துகட்டும் வகையில் மத்திய அரசு புதிய (திருத்தப்பட்ட) மோட்டார் வாகன சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்தியது.
இந்த சட்டம் அமலுக்கு வந்ததில் இருந்து நாடே பெரும் பரபரப்பாக காட்சியளிக்கின்றது. புதிய திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் முன்னதாக வசூலித்து வந்த அபராத்தை, முன்பெப்போதும் இல்லாத அளவில் பத்து மடங்கு உயர்த்தி வசூலிக்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இதுவே இந்த புதிய அபராத திட்டத்திற்கு ஒரு சில மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவிக்க முக்கிய காரணமாக இருக்கின்றது.
அதேசமயம், பல மாநில அரசுகள் போக்குவரத்து விதிமீறல்களே இல்லாத மாநிலமாக மாற்றும் நோக்கில், புதிய அபராத திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. குறிப்பாக பாஜக கட்சியினர் ஆளும் மாநிலங்கள் இதனை நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளன.
இதனால், ஒவ்வொரு நாளும் அந்த மாநிலத்தில் வெளிவரும் செய்திகளுக்கு மிகப்பெரிய கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.
அதிலும், குறிப்பாக அபராதம் குறித்த வெளிவரும் செய்திகளுக்கு அதீத ஆர்வம் காட்டப்படுகின்றது. ஏனென்றால், போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு உச்சபட்ச அளவில் அபராதத்திற்கான செல்லாண் வழங்கப்பட்டு வருகின்றது.
அவ்வாறு, வழங்கப்படும் அபராதம் வாகனத்தின் விலையைக் காட்டிலும் அதிகமானதாக காட்சியளிக்கின்றன. இதனால், சில நேரங்களில் வாகன ஓட்டிகள் மற்றும் போலீஸார்கள் இடையே மோதல் ஏற்படுகின்றது.
அந்தவகையில், ஹரியானா மாநிலத்தில் அரங்கேறிய உச்சபட்ச அபராதம்குறித்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.
இதனால், வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடாத வரை அவர்களை மடக்கி விசாரிக்க வேண்டாம் என அம்மாநில டிஜிபி போலீஸாருக்கு அறிவிறுத்தியிருந்தார்.
இந்நிலையில், மீண்டும் ஓர் புதிய அதிரடி அறிவிப்பை ஹரியானா மாநில டிஜிபி மனோஜ் யாதவ் வெளியிட்டுள்ளார்.
அதாவது, மாநிலத்தில் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராதம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, முன்பெப்போதும் இல்லாத அளவிலான கெடுபிடியை போக்குவரத்து போலீஸார் காட்டி வருகின்றனர்.
ஆகையால், வாகன ஓட்டிகள் இதில் வீணாக சிக்கி, தேவையற்ற சட்ட சிக்கலை சந்திப்பதைத் தவிர்ப்பதற்காக விழிப்புணர்வு மற்றும் போக்குவரத்து கற்பித்தலை மேற்கொள்ளவிருப்பதாக அவர் அறிவித்துள்ளார்.
இந்த சிறப்பான நிகழ்வை மேற்கொள்வதற்காக ஓர் தனி குழு உருவாக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த விழிப்புணர்வு நடவடிக்கை மாநிலத்தின் முக்கியமான உட்பட அனைத்து பகுதிகளும் மேற்கொள்ளப்பட உள்ளது.