Just In
- 2 hrs ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 3 hrs ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 3 hrs ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 5 hrs ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
பழைய வாகனங்களுக்கு எதிரான வேட்டை தொடங்குகிறது... உரிமையாளர்களை பிடிக்க அதிரடி திட்டம்... சிக்கினால் காலி!
பழைய வாகனங்களுக்கு எதிரான வேட்டையை தொடங்குவதற்கு காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
என்சிஆர் எனப்படும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (NCR - National Capital Region), 10 ஆண்டுகள் ஆன டீசல் வாகனங்கள் மற்றும் 15 ஆண்டுகள் ஆன பெட்ரோல் வாகனங்களை இயக்குவதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஆனால் இந்த தடையை மீறி பலர் பழைய வாகனங்களை தேசிய தலைநகர் பிராந்தியத்தில் தொடர்ந்து இயக்கி வருகின்றனர்.
எனவே ஹரியானா மாநிலம் குர்கான் காவல் துறையினர் சிறப்பு நடவடிக்கை ஒன்றை மேற்கொள்வதற்கு தற்போது திட்டமிட்டுள்ளனர். இந்த சிறப்பு நடவடிக்கையின் கீழ், பழைய வாகனங்களை இயக்குவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து வாகன ஓட்டிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
மேலும் பழைய வாகனங்கள் சுற்றுச்சூழலுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், அவற்றை பயன்படுத்துவதை வாகன ஓட்டிகள் கைவிட தேவையான நடவடிக்கைகளையும் எடுக்கவுள்ளனர். இதில், சட்டப்பூர்வமான நடவடிக்கைகளும் அடங்கும். எனவே பழைய வாகனங்களை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.
ஹரியானா மாநிலத்தில் உள்ள 14 மாவட்டங்கள் தேசிய தலைநகர் பிராந்தியத்தின் கீழ் வருகிறன்றன. இதில், குர்கான் மற்றும் ஃபரிதாபாத் ஆகியவையும் அடங்கும். இங்கு 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வயதுடைய டீசல் வாகனங்களையும், 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வயதுடைய பெட்ரோல் வாகனங்களையும் பயன்படுத்துவதற்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேசிய தலைநகர் பிராந்தியத்தில் காற்றின் தரம் மோசமான நிலைக்கு சென்று கொண்டிருப்பதுதான் இதற்கு காரணம். அங்கு காற்று மாசுபாடு பிரச்னை அதிகமாக இருப்பதற்கு பெட்ரோல், டீசல் வாகனங்கள்தான் முக்கியமான காரணமாக பார்க்கப்படுகின்றன. அதிலும் குறிப்பாக பழைய வாகனங்கள் கக்கும் புகையால்தான், சுற்றுச்சூழல் அதிகமாக சீர்கெட்டு போகிறது.
எனவே சிறப்பு நடவடிக்கைகயை எடுப்பதற்கு தற்போது திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சிறப்பு நடவடிக்கையின் கீழ், டாக்ஸி மற்றும் ஆட்டோ ஸ்டாண்டுகளில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு காவல் துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். மேலும் மற்ற பொது இடங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளில் காவல் துறையை சேர்ந்த குழுக்கள் ஈடுபடவுள்ளன.
விழிப்புணர்வு பணிகளின்போது, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை யாராவது மீறுவது கண்டறியப்பட்டால், அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக அவர்கள் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்யப்படும் என காவல் துறை உயர் அதிகாரிகள் தற்போது எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து காவல் துறை உயர் அதிகாரிகள் கூறுகையில், ''உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறுபவர்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். விதிமுறைகளை மீறுபவர்கள் மீது சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுப்போம்'' என்றார். தேசிய தலைநகர் பிராந்தியத்தில் பழைய வாகனங்களை இயக்க வேண்டாம் என தொடர்ச்சியாக அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.
எனினும் தொடர்ந்து பழைய வாகனங்கள் இயக்கப்பட்டு கொண்டிருப்பதால், வரும் நாட்களில் நடவடிக்கை தீவிரமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் பழைய வாகனங்களின் பயன்பாட்டை குறைப்பதற்காக பழைய வாகன அழிப்பு கொள்கையை (Vehicle Scrappage Policy) ஒன்றிய அரசு அறிமுகம் செய்துள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
இதன் மூலம் இந்தியாவில் பழைய வாகனங்களால் ஏற்படும் காற்று மாசுபாடு பிரச்னை கட்டுக்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பழைய வாகன அழிப்பு கொள்கை காரணமாக, புதிய வாகனங்களின் விற்பனை உயர்வதற்கான வாய்ப்புகளும் உள்ளன. காற்று மாசுபாடு பிரச்னையை குறைப்பதற்காக, எலெக்ட்ரிக் வாகனங்கள் என்ற ஆயுதத்தையும் ஒன்றிய அரசு கையில் எடுத்துள்ளது.
ஃபேம் இந்தியா-2 திட்டத்தின் கீழ் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு சலுகைகள் மற்றும் சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது என ஒன்றிய அரசு தற்போது பம்பரமாக சுழன்று வருகிறது. அத்துடன் பெட்ரோல், டீசல் விலையும் உயர்ந்து வருவதால், பொதுமக்கள் மத்தியில் எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவதற்கான ஆர்வம் அதிகரித்த வண்ணம் உள்ளது.
Note: Images used are for representational purpose only.