Just In
- 55 min ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 1 hr ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 2 hrs ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 3 hrs ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
Don't Miss!
- News 3 உயிரை பறித்த சென்னை மதுபான விடுதி.. விபத்து நடந்தது எப்படி? ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறிய ஷாக் தகவல்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
இனி புதியதாக போடப்படும் சாலைகள் இப்படிதான் இருக்க வேண்டுமாம்!! தமிழக அரசு அதிரடி நடவடிக்கை...
தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு நெடுஞ்சாலை துறைக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதனை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.
சாலை பழுதடைந்திருந்தால் புதிய சாலை போடுவது வழக்கமான ஒன்று தான். பொதுவாக இவ்வாறு பழுதடைந்த சாலையினை சரி செய்யும்போது ஊழியர்கள் பழைய சாலையின் மீதுதான் தாரை ஊற்றுவார்கள்.
தாருடன் ஜல்லி போன்றவை கலந்து புதிய சாலையினை அமைப்பர். இது நமது தமிழகத்தில் வழக்கமாக நடக்கும் ஒன்றாகும். இவ்வாறு சாலை மீதே சாலை போடுவதினால் சாலையின் உயரம் அதிகரிக்கும். ஆனால் அவ்வளவாக பழுதடையாமல், சீரமைக்கப்படாமல் இருக்கும் கிளை சாலைகளின் உயரம் அப்படியே இருக்கும்.
இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களுக்கு பெரும் சிரமம் ஏற்படுவதுண்டு. இவ்வாறான சாலைகளின் வளைவுகளில் பைக்குகளில் திரும்பும்போது சிறிய தடுமாற்றத்தை பெரும்பாலான வாகன ஓட்டிகள் சந்திந்திருப்பர்.
நன்கு பைக் ஓட்ட தெரிந்தவர்கள் என்றால் எந்த பிரச்சனையும் இல்லை. அதுவே தற்போது தான் பைக்கை ஓட்ட கற்று கொண்டு வருபவர்களுக்கு அத்தகைய வளைவுகளின்போது சற்று பயம் உள்ளுக்குள் வந்துவிடும். சில நேரங்களில் இது விபத்திலும் கொண்டு சென்று முடிக்கிறது.
அதுமட்டுமில்லாமல் சாலையில் உயரம் அதிகரிப்பதால் மழை நீர் அருகில் உள்ள கட்டடங்களுக்குள் புகுந்துவிடுகிறது. மேலும், சில இடங்களில் தண்ணீர் உடன் சேர்த்து புதியதாக போடப்பட்ட சாலையும் கூடவே அடித்து செல்வதையும் பார்த்திருக்கிறோம்.
இதையெல்லாம் கருத்தில் கொண்டே, பழுதான சாலைக்கு மாற்று சாலை போடும்போது, பழைய சாலையை முழுவதுமாக சுரண்டி எடுத்துவிட்டு அதே அளவுக்கு புதியதாக சாலை போட வேண்டுமென தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு நெடுஞ்சாலைத்துறைக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
மேற்பரப்பை சுரண்டி விட்டு சாலை போடுவது வீடுகளுக்குள் மழைநீர் புகுவதை வெகுவாக குறைக்கும் என கூறியுள்ள அவர், எந்த சூழ்நிலையிலும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் சாலைகளின் மட்டத்தை அதிகரிக்கக்கூடாது எனவும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பேரூராட்சி, நகராட்சி சாலைகள் போதிய கனத்துடன் இருப்பதால் பிபிடி சோதனை தேவையில்லை எனவும், சாலை போடும்போதே தண்ணீர் தேங்காமல் இருப்பதை உறுதி செய்துக்கொள்ள வேண்டும் எனவும் கேட்டு கொண்டுள்ளார்.
பல்வேறு இடங்களில் சாலைகளின் தரம் குறைவாக இருப்பதே அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்படுவதற்கு காரணமாக உள்ளது என சுட்டிக்காட்டியுள்ள தலைமை செயலாளர், எனவே சாலை போடும்போது அதற்கான மட்டத்தை சரியான அளவில் போட வேண்டும் எனவும் நெடுஞ்சாலைத்துறைக்கு அறிவுறுத்தியுள்ளார்.
Note: Images use for representative purpose
-
காருக்குள் பறக்கும் வாகனம்.. சாலையில் ஓட்டிக்கலாம்.. தேவைப்பட்டால் வானிலும் பறந்துக்கலாம்!
-
ரோபோ சங்கர் மகள் திருமணத்திற்கு சீதனமா இந்த காரை கொடுத்தாரா? இதோட விலை என்ன தெரியுமா?
-
ரூ.5 லட்சத்தை கையில் வைத்துக்கொண்டு அல்லாடுறீங்களா? பவர்ஃபுல் பைக்ஸுக்கு நம் நாட்டில் எப்போதுமே குறை இல்லை!!