Just In
- 5 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 5 hrs ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- 8 hrs ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- 8 hrs ago இவ்வளவு சின்ன வயதில் எவ்வளவு பெரிய ஞானம்!! சிறுவனின் செயலால் சற்று நேரத்தில் பரபரப்பாகிய ஏர் இந்தியா விமானம்!
Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சாட்டையை சுழற்றும் தமிழக காவல் துறை... இனி இந்த விதியை மீறினால் காலி... எல்லா இடத்துலயும் நின்னு பிடிக்கறாங்க!
தமிழகத்தில் இன்று முதல் காவல் துறையினர் அதிரடி நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
உலகிலேயே சாலை விபத்துக்கள் அதிகமாக நடக்கும் நாடுகளில் ஒன்று இந்தியா. இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்கள்தான் அதிகளவில் விபத்துக்களில் சிக்கி வருகின்றனர். அவர்களில் பலர் ஹெல்மெட் அணியாத காரணத்தால், சாலை விபத்துக்களில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் மிக அதிகமாக இருக்கிறது.
இந்தியாவில் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விதிமுறை அமலில் உள்ளது. ஆனால் ஒரு சில நகரங்களில் மட்டுமே இந்த விதிமுறையை போக்குவரத்து காவல் துறையினர் கண்டிப்புடன் அமல்படுத்தி வருகின்றனர். மற்ற பகுதிகளில் இந்த விதிமுறையை யாரும் பெரிதாக கண்டு கொள்வதில்லை.
இந்த சூழலில் சென்னை மாநகரில் இன்று முதல் (மே 23) இரு சக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்பவரும் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விதிமுறையை போக்குவரத்து காவல் துறையினர் தீவிரமாக அமல்படுத்த தொடங்கியுள்ளனர். எனவே இனி இரு சக்கர வாகனத்தை ஓட்டுபவருடன், பின்னால் அமர்ந்து பயணிப்பவரும் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும்.
சென்னை மாநகரில் இரு சக்கர வாகன விபத்துக்களில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்பாக ஆய்வு நடத்தியதை தொடர்ந்து, இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற உத்தரவை மாநகர போக்குவரத்து காவல் துறையினர் அதிரடியாக பிறப்பித்துள்ளனர்.
நடப்பாண்டு ஜனவரி 1ம் தேதியில் இருந்து கடந்த மே 15ம் தேதி வரையில், இரு சக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் சென்ற காரணத்தால், 98 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதில், 80 பேர் இரு சக்கர வாகனத்தை ஓட்டி சென்றவர்கள் ஆவர். எஞ்சிய 18 பேர் இரு சக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து சென்றவர்கள் ஆவர். ஹெல்மெட் அணிந்திருந்தால், அவர்கள் உயிர் பிழைத்திருக்கலாம் என கருதப்படுகிறது.
இதுதவிர இதே காலகட்டத்தில் இரு சக்கர வாகன விபத்துக்களில், ஹெல்மெட் அணியாத காரணத்தால், 841 பேர் காயம் அடைந்துள்ளனர். இதில், இரு சக்கர வாகனத்தை ஓட்டியவர்களின் எண்ணிக்கை 714 ஆகும். எஞ்சிய 127 பேர் பின்னால் அமர்ந்து சென்றவர்கள் ஆவர். ஹெல்மெட் அணிந்திருந்தால், இவர்கள் காயம் அடைந்தது தவிர்க்கப்பட்டிருக்கலாம்.
இந்த தரவுகளை பார்த்த பிறகே, இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் இருவரும் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என சென்னை மாநகர போக்குவரத்து காவல் துறையினர் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தனர். இந்த விதிமுறை சென்னை மாநகரில் இன்று முதல் தீவிரமாக அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இரு சக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்பவர்களை பிடிப்பதற்காக சென்னையில் தற்போது சிறப்பு வாகன தணிக்கை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சிறப்பு வாகன தணிக்கை தொடர்ச்சியாக நடத்தப்படும் என மாநகர போக்குவரத்து காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த வாகன தணிக்கையில் பிடிபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களுக்கு, நிகழ்விடத்திலேயே அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து காவல் துறையினரின் நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்க வேண்டுமென்றால், இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் அனைவரும் ஹெல்மெட் அணிந்து கொள்வது நல்லது.
இது அபராதம் செலுத்துவதில் இருந்து மட்டுமல்லாது, மருத்துவமனையில் வீணாக பணம் செலுத்துவதில் இருந்தும் உங்களை காப்பாற்றும். அத்துடன் உங்கள் உயிரையும் இது காக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். சென்னையில் மட்டும்தானே தற்போது இந்த விதிமுறை தீவிரமாக அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது என்று அலட்சியமாக இருக்காமல், அனைத்து பகுதிகளை சேர்ந்தவர்களும் இந்த விதிமுறையை பின்பற்றுவது நன்மை பயக்கும்.
கார்களில் பயணம் செய்பவர்களுக்கு ஏராளமான பாதுகாப்பு வசதிகள் இருக்கின்றன. ஆனால் இரு சக்கர வாகனங்களின் கதை வேறு. கார்களுடன் ஒப்பிடும்போது, இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்கள் விபத்தில் படுகாயம் அடைவதற்கோ, உயிரிழப்பதற்கோ வாய்ப்புகள் அதிகம். இதுபோன்ற விபரீதங்களை தவிர்க்க வேண்டுமென்றால், கண்டிப்பாக ஹெல்மெட் அணியுங்கள். மற்றவர்களுக்கும் முன்னுதாரணமாக இருங்கள்.
Note: Images used are for representational purpose only.
-
தலைக்கு மேல ஊட்டியையே தூக்கி வச்ச மாதிரி இருக்கும்! டிராஃபிக் போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் வந்தாச்சு!
-
ஒரு கிமீக்கு வெறும் ரூ3.3 தான் செலவு! 10 பேர் தாராளமா போகலாம்! டாடா மேஜிக் பை ஃப்யூயல் வந்தாச்சு!
-
இவரு நெனச்சா 10 ரோல்ஸ் ராய்ஸ் காரை ஒரே நேரத்துல இறக்க முடியும்! ஆட்டோவை ஓட்டிட்டு வந்தது அவ்ளோ பெரிய மனுசனா!!