Just In
- 24 min ago மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- 46 min ago ரெனால்ட் டஸ்டர் கார் பற்றி இந்த அப்டேட்காக தான் இந்தியாவே வெயிட்டிங்! இப்பவே ரெடியாக வேண்டியது தான்!
- 2 hrs ago அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- 2 hrs ago மோடியின் பாதுகாப்புக்கு செல்லும் இந்த டீசல் காரை இனி பயன்படுத்த கூடாது! வெளியான புதிய உத்தரவு
Don't Miss!
- News சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு பாஜகவின் நடிகர் எஸ்.வி.சேகர் திடீர் ஆதரவு? பரபர ட்வீட்!
- Movies Actor Siddharth: ஓகே சொன்ன அதிதி.. திருமணத்தை உறுதி செய்த சித்தார்த்!
- Technology வெளுத்துக்கட்டுது சேல்.. ரூ.21,000 போதும்.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 67W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
மார்ச் 30 முதல் மூலிகை பெட்ரோல்! ராமர் பிள்ளை அதிரடி... விலை, மைலேஜை கேட்டு சொக்கி போன வாகன ஓட்டிகள்
மார்ச் 30 முதல் தமிழகம் முழுவதும் மிகவும் மலிவான விலையில் மூலிகை பெட்ரோல் கிடைக்கும் என ராமர் பிள்ளை வெளியிட்டுள்ள அறிவிப்பால், வாகன ஓட்டிகள் சொக்கி போயுள்ளனர்.
தமிழகத்தில் ராமர் பிள்ளை அவ்வப்போது பரபரப்புகளை உண்டாக்கி வருகிறார். இவரது கண்டுபிடிப்பான மூலிகை பெட்ரோல், தமிழக வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை மட்டுமல்லாது, பல்வேறு சர்ச்சைகளையும் சேர்த்தே உண்டாக்கியுள்ளது. தமிழகத்தில் ராமர் பிள்ளையின் மூலிகை பெட்ரோலை வரவேற்பவர்களும் இருக்கின்றனர். அதை விமர்சிப்பவர்களும் இருக்கின்றனர்.
இப்படிப்பட்ட சூழலில், ராமர் பிள்ளை தற்போது வெளியிட்டுள்ள அதிரடியான அறிவிப்பு ஒன்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவிற்கு பிறகு, மூலிகை பெட்ரோலின் விற்பனையை ராமர் பிள்ளை தொடங்கியுள்ளார். சென்னையில் தற்போது மூலிகை பெட்ரோல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னை கடந்த ஜனவரி 29ம் தேதி முதல் மூலிகை பெட்ரோல் விற்பனையை ராமர் பிள்ளை தொடங்கினார். தற்போதைய நிலையில் சென்னை ஊரப்பாக்கம் பகுதியில் மூலிகை பெட்ரோல் விற்பனை நடைபெற்று வருகிறது. ஆனால் ஒரு நாளுக்கு 150 லிட்டர் மட்டுமே வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஒரு லிட்டர் மூலிகை பெட்ரோலின் விலை 30 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்கு அடுத்தபடியாக தமிழ்நாடு முழுவதும் மூலிகை பெட்ரோலை விற்பனைக்கு அறிமுகம் செய்ய ராமர் பிள்ளை முடிவு செய்துள்ளார். இதன் முதற்கட்டமாக விருதுநகர், தேனி, மதுரை மற்றும் தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் மூலிகை பெட்ரோல் விற்பனைக்கு கொண்டு வரப்படவுள்ளது. வரும் பிப்ரவரி 27ம் தேதி முதல் இந்த மாவட்டங்களிலும் மூலிகை பெட்ரோலை விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக விற்பனை முகவர்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களின் முகவர்களை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி ராஜபாளையத்தில் நடைபெற்றது. இதில், ராமர் பிள்ளையும் பங்கேற்றார். இதன்பின் அவர் நிருபர்களிடம் பேசினார். அப்போது பல்வேறு தகவல்களை ராமர் பிள்ளை பகிர்ந்து கொண்டார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், ''மூலிகை பெட்ரோல் உற்பத்தியை யாரும் தடை செய்யக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மூலிகை பெட்ரோலால் வாகனங்களுக்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படாது. மூலிகை பெட்ரோல் மூலம் டூவீலர்கள் ஒரு லிட்டருக்கு 80 கிலோ மீட்டர்கள் வரை மைலேஜ் வழங்கும்.
தினசரி 15 ஆயிரம் லிட்டர் மூலிகை பெட்ரோல் தயாரிக்கும் வகையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரிய தொழிற்சாலை நிறுவப்பட்டுள்ளது. மூலிகை பெட்ரோலை தமிழகம் முழுவதும் விற்பனைக்கு கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதன்படி வரும் மார்ச் 30ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு மூலிகை பெட்ரோல் கிடைக்கும்.
நான் நேரடியாக விற்பனை செய்யும் இடங்களில் ஒரு லிட்டர் பெட்ரோலை 20 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசலை 24 ரூபாய்க்கும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது'' என்றார். ராமர் பிள்ளை அறிவித்த விலையை கேட்டு தமிழக வாகன ஓட்டிகள் உற்சாகத்தில் திளைத்து வருகின்றனர். அதே சமயம் இன்னும் சிலரோ மூலிகை பெட்ரோலை தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.
Image Source: Puthiyathalaimurai, Thanthi TV