Just In
- 2 hrs ago இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- 2 hrs ago தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
- 2 hrs ago மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
- 7 hrs ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
Don't Miss!
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
மார்ச் 30 முதல் மூலிகை பெட்ரோல்! ராமர் பிள்ளை அதிரடி... விலை, மைலேஜை கேட்டு சொக்கி போன வாகன ஓட்டிகள்
மார்ச் 30 முதல் தமிழகம் முழுவதும் மிகவும் மலிவான விலையில் மூலிகை பெட்ரோல் கிடைக்கும் என ராமர் பிள்ளை வெளியிட்டுள்ள அறிவிப்பால், வாகன ஓட்டிகள் சொக்கி போயுள்ளனர்.
தமிழகத்தில் ராமர் பிள்ளை அவ்வப்போது பரபரப்புகளை உண்டாக்கி வருகிறார். இவரது கண்டுபிடிப்பான மூலிகை பெட்ரோல், தமிழக வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை மட்டுமல்லாது, பல்வேறு சர்ச்சைகளையும் சேர்த்தே உண்டாக்கியுள்ளது. தமிழகத்தில் ராமர் பிள்ளையின் மூலிகை பெட்ரோலை வரவேற்பவர்களும் இருக்கின்றனர். அதை விமர்சிப்பவர்களும் இருக்கின்றனர்.
இப்படிப்பட்ட சூழலில், ராமர் பிள்ளை தற்போது வெளியிட்டுள்ள அதிரடியான அறிவிப்பு ஒன்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவிற்கு பிறகு, மூலிகை பெட்ரோலின் விற்பனையை ராமர் பிள்ளை தொடங்கியுள்ளார். சென்னையில் தற்போது மூலிகை பெட்ரோல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னை கடந்த ஜனவரி 29ம் தேதி முதல் மூலிகை பெட்ரோல் விற்பனையை ராமர் பிள்ளை தொடங்கினார். தற்போதைய நிலையில் சென்னை ஊரப்பாக்கம் பகுதியில் மூலிகை பெட்ரோல் விற்பனை நடைபெற்று வருகிறது. ஆனால் ஒரு நாளுக்கு 150 லிட்டர் மட்டுமே வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஒரு லிட்டர் மூலிகை பெட்ரோலின் விலை 30 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்கு அடுத்தபடியாக தமிழ்நாடு முழுவதும் மூலிகை பெட்ரோலை விற்பனைக்கு அறிமுகம் செய்ய ராமர் பிள்ளை முடிவு செய்துள்ளார். இதன் முதற்கட்டமாக விருதுநகர், தேனி, மதுரை மற்றும் தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் மூலிகை பெட்ரோல் விற்பனைக்கு கொண்டு வரப்படவுள்ளது. வரும் பிப்ரவரி 27ம் தேதி முதல் இந்த மாவட்டங்களிலும் மூலிகை பெட்ரோலை விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக விற்பனை முகவர்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களின் முகவர்களை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி ராஜபாளையத்தில் நடைபெற்றது. இதில், ராமர் பிள்ளையும் பங்கேற்றார். இதன்பின் அவர் நிருபர்களிடம் பேசினார். அப்போது பல்வேறு தகவல்களை ராமர் பிள்ளை பகிர்ந்து கொண்டார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், ''மூலிகை பெட்ரோல் உற்பத்தியை யாரும் தடை செய்யக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மூலிகை பெட்ரோலால் வாகனங்களுக்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படாது. மூலிகை பெட்ரோல் மூலம் டூவீலர்கள் ஒரு லிட்டருக்கு 80 கிலோ மீட்டர்கள் வரை மைலேஜ் வழங்கும்.
தினசரி 15 ஆயிரம் லிட்டர் மூலிகை பெட்ரோல் தயாரிக்கும் வகையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரிய தொழிற்சாலை நிறுவப்பட்டுள்ளது. மூலிகை பெட்ரோலை தமிழகம் முழுவதும் விற்பனைக்கு கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதன்படி வரும் மார்ச் 30ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு மூலிகை பெட்ரோல் கிடைக்கும்.
நான் நேரடியாக விற்பனை செய்யும் இடங்களில் ஒரு லிட்டர் பெட்ரோலை 20 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசலை 24 ரூபாய்க்கும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது'' என்றார். ராமர் பிள்ளை அறிவித்த விலையை கேட்டு தமிழக வாகன ஓட்டிகள் உற்சாகத்தில் திளைத்து வருகின்றனர். அதே சமயம் இன்னும் சிலரோ மூலிகை பெட்ரோலை தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.
Image Source: Puthiyathalaimurai, Thanthi TV
-
ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
-
குடும்பத்தோட போறதுக்கு சூப்பர் கார்! ஆஃபரும் அள்ளி குடுக்குறாங்க! ஆனால் சேல்ஸ் சுத்தமா இல்லை ஏன் தெரியுமா
-
ரிமோட் சாவியுடன் யமஹா ஸ்கூட்டர் அறிமுகம்.. வெறும் 3 ஆயிரம் ரூபாதான் அதிகமா!.. ஆக்டிவா பொழப்புல மண்ணை போடதான்!