Just In
- 28 min ago 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
- 2 hrs ago டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- 5 hrs ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 5 hrs ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
Don't Miss!
- Sports SRH vs RCB: இந்த தங்கத்த தூக்குங்க.. ஆர்சிபியை அலறவிட்ட தமிழக வீரர்.. நடராஜனால் மிரண்ட கம்மின்ஸ்!
- News தமிழகத்தில் உச்சம் தொடும் கோடை வெப்பம்.. திடீரென முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை.. என்ன மேட்டர்
- Lifestyle இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
சூரத், உதயகிரி... இவ்விரு போர்கப்பல்கள் பற்றிய இந்த தகவல்கள் தெரிஞ்சா எதிரி நாடுகள் வெலவெலத்து போய்டும்!
புதிதாக பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டிருக்கும் ஐஎன்எஸ் சூரத் (INS Surat) மற்றும் ஐஎன்எஸ் உதயகிரி (INS Udaygiri) போர்கப்பல்கள் பற்றிய முக்கிய தகவல்களை இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் அதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்திய கப்பல் படைக்கு வலுசேர்க்கும் வகையில் இரு புதிய போர் கப்பல்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. ஐஎன்எஸ் சூரத் (INS SURAT) மற்றும் ஐஎன்எஸ் உதயகிரி (INS UDAYGIRI) எனும் இரு புதிய போர் கப்பல்களே கடற்படையின் பலத்தை அதிகரிக்கும் வகையில் சேர்க்கப்பட்டுள்ளன. இரு போர் கப்பல்களும் இந்தியாவிற்காக உள்நாட்டிலேயே வைத்து உருவாக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தகுந்தது.
சூரத், ஏவுகணைகளை தாங்கி சென்று, அவற்றை எதிரிகள் மீது செலுத்தும் திறன் கொண்ட கப்பலாகும். அதாவது இது ஓர் டெஸ்ட்ராயர் (Destroyer) ரக போர்கப்பல் ஆகும். இந்த ரக கப்பலை நாசகாரன் அல்லது சூழ்ச்சி செய்யக் கூடியவை என்றும்கூட கூறலாம். மேலும், அதிக சக்தி வாய்ந்தவையாகும் இவை செயல்படும்.
உதயகிரி, இது ஓர் ஃப்ரிகேட் ரக போர் கப்பல் ஆகும். எதிரிகளின் ரேடார்களில் இது சிக்காத வண்ணம் பல்வேறு தொழில்நுட்பங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ரக கப்பல் நவீன கால கடற்படையில், மற்ற போர் கப்பல்கள் மற்றும் வணிக கப்பல்களை பாதுகாப்பும் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
இத்தகைய அதி-நவீன வசதிகள் கொண்ட இரு போர் கப்பல்களையே மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடற்படையின் பயன்பாட்டிற்கு நேற்று (மே 19) தொடங்கி வைத்தார். இவ்விரு கப்பல்களும் இன்னும் பல மடங்கு சிறப்புகள் வாய்ந்தவையாக உள்ளன. அவை என்ன என்பது பற்றிய முழு விபரங்களையே இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
ஐஎன்எஸ் சூரத் (INS SURAT)
புராஜெக்ட் 15பி டெஸ்ட்ராயர்ஸ் திட்டத்தின்கீழ் உருவாக்கப்படும் நான்காவது போர் கப்பல் 'சூரத்' ஆகும். மும்பைக்கு அடுத்தபடியாக நாட்டின் இரண்டாவது மிக பெரிய வர்த்தக மையமாகக் கருதப்படும் சூரத் நகரத்தின் பெயர் இக்கப்பலுக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்நகரம், வளமான கடல் மற்றும் கப்பல் கட்டுமான வரலாற்றையும் கொண்டுள்ளது.
16 மற்றும் 18ம் நூற்றாண்டுகளில் இந்நகரத்தில் கட்டப்பட்ட கப்பல்கள் அதிக ஆயுட்காலத்திற்கு பெயர்போனவையாக உள்ளன. ஒவ்வொன்றும் 100 ஆண்டுகளுக்கும் அதிகமாக பயன்பாட்டில் இருந்தன. இத்தகைய பாரம்பரியங்களைக் கொண்ட நகரத்தின் பெயரிலேயே புதிய கப்பல் உருவாக்கப்பட்டுள்ளது.
புதிய ஐஎன்எஸ் சூரத் அத்துமீறி நுழையும் எதிரி நாட்டு ஏவுகணைகளை துள்ளியமாக தாக்கி அழிக்கும் திறன் கொண்டது. கொல்கத்தா கிளாஸ் பி15 ஏ டெஸ்ட்ராயர்ஸின் மேம்படுத்தப்பட்ட தயாரிப்பாக இது காட்சியளிக்கின்றது. இக்கப்பல் பிளாக் கன்ஸ்ட்ரக்சன் முறையைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. சில கட்டுமான வேலைகள் சூரத்திலும், சில கட்டுமான வேலைகள் மும்பையில் செய்யப்பட்டிருக்கின்றன.
ஐஎன்எஸ் உதயகிரி (INS UDAYGIRI):
உதயகிரி, ஆந்திரா மலைத் தொடரைக் குறிக்கும் பெயர் இதுவாகும். இதையே இக்கப்பலுக்கு சூட்டப்பட்டுள்ளது. புராஜெக்ட் 17ஏ ஃபிரிகேட்ஸ் இன்கீழ் உருவாக்கப்படும் மூன்றாவது கப்பல் இதுவாகும். எதிரிகளை தேடி சென்று அழிக்கும் வல்லமைக் கொண்டது இக்கப்பல். குறிப்பாக, எதிரிகளின் ரேடாரில் இது சிக்கவே சிக்காதாம்.
இதுதவிர, மேம்பட்ட ஆயுதங்கள், சென்சார்கள் மற்றும் பிளாட்பாரம் மேனேஜ்மென்ட் சிஸ்டம் உள்ளிட்டவற்றுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கப்பல், 18 பிப்ரவரி 1976 தொடங்கி 24 ஆகஸ்டு 2007 வரையில் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக சேவையாற்றி வந்த 'உதயகிரி' லியாண்டர் கிளாஸ் ஏஎஸ்டபிள்யூ ஃப்ரிகேட் ரக போர்கப்பலுக்கு பெருமிதம் சேர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
உள் நாட்டு உற்பத்தி பொருட்களுக்கு முக்கியத்துவம்:
இரு கப்பல்களும் நாட்டின் பாதுகாப்பு துறைக்கு தேவையான போர் கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்கள் ஆகியவற்றைத் தயாரித்து வரும் மசகன் கப்பல் கட்டுமான நிறுவனமே தயாரித்து வழங்கி வழங்கியிருக்கின்றது. இதன் வடிவமைப்பு பணிகளை கடற்படை வடிவமைப்பு இயக்குநரகம் (Directorate of Naval Design) மேற்கொண்டிருக்கின்றது.
ஆத்மான் நிர்பார் மிஷன் திட்டத்தின்கீழே இரு கப்பல்களும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. மேலும், கப்பல் கட்டுமானத்தில் பெரும்பாலான உள்நாட்டு தயாரிப்புகளே பயன்படுத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 75 சதவீதம் உள்நாட்டு பொருட்களே இக்கப்பலில் பயன்படுத்தப்பட்டுள்ளன.