Just In
- 1 hr ago எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- 4 hrs ago சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- 5 hrs ago படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- 6 hrs ago தஞ்சாவூரில் பிறந்து பாலிவுட்டை கலக்கி கொண்டிருக்கும் டைரக்டர்!! புதுசா வாங்கியிருக்கும் காஸ்ட்லீ கார்!
Don't Miss!
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இந்த கொளுத்தும் வெயில்ல குட்டி பசங்களோட டிராவல் பண்ண போறீங்களா... அப்போ இத முதல்ல தெரிஞ்சுட்டு போங்க!!
சிறுவர்கள் மற்றும் குழந்தைகளுடன் டூர் செல்வதற்கு முன்பு என்னென் விஷயங்களை எல்லாம் கவனிக்க வேண்டும் என்பது பற்றிய தகவலை இப்பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். வாருங்கள் பார்க்கலாம்.
ஒவ்வொரு ஆண்டும் வரலாற்றை உடைத்தெறியும் வகையில் கோடை வெயில் புதிய செல்சியஸ் இலக்கில் சுட்டெரித்து வருகின்றது. சொல்லவே வேண்டாம் இந்த ஆண்டும் முன்கூட்டியே கத்தரி வெயில் (ஆரம்பிக்கும் முன்பே) தொடங்கியதுபோல் சுட்டெரிக்கும் வெயில் மக்களை வாட்டி வதைக்க ஆரம்பித்துவிட்டது.
இந்த மாதிரியான சூழ்நிலையில் வெளிப்புற உஷ்னத்தையும், வெளிப்புற உஷ்னத்தையும் போக்கும் வகையில் ஓர் ரிலாக்ஸ் டூர் போகலாம் என நினைத்தால் 'லாக்டவுண்' பிரச்னை தலைக்கு மேல் கத்தியைப் போல் தொங்கிக் கொண்டிருக்கின்றது. எல்லாத்தையும் பிளான் செய்த பின்னர் அரசு முழு லாக்டவுண் கொண்டு வந்துவிடுமோ என்ற பதற்றம் அனைவரின் மத்தியிலும் இருக்கதான் செய்கின்றது.
இருப்பினும் ஒரு சிலர் இந்த கோடை வெயிலைச் சமாளிக்க வேண்டும் என்பதற்காக கொரோனா வைரஸ் லாக்டவுணையும் பொருட்படுத்தாமல் சுற்றுலா சென்ற வண்ணம் இருக்கின்றனர். அவ்வாறு சுற்றுலா செல்லும்போது, குறிப்பாக தங்கள் வீட்டு சுட்டீஸ்களுடன் சுற்றுலா செல்வோர்க்கு உதவும் வகையிலான டிப்ஸ்களையே இப்பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம்.
'சுற்றுலா' இந்த வார்த்தையைக் கேட்ட உடனேயே நம்மில் பலரின் நினைவில் அழகிய மலைகள், கோட்டைகள் மற்றும் இருபுறத்திலும் வளைந்து நிற்கும் மரங்கள் நிறைந்த நீண்ட நெடுந்தூர சாலைகள் ஆகியவையே நினைவிக்கு வரும். இந்தமாதிரியான சுற்றுலாவை இன்பானாதாகவும் சுவாரஷ்யமானதாகவும் மாற்றுவது நம்முடைய கையிலேயே உள்ளது. அவையே கீழே உள்ளன. வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.
நேரம்:
அதாவது, சுற்றுலா செல்வதற்கு ஒரு மாதத்திற்கு முன்னரே திட்டமிடுவது மிக மிக சிறந்தது. குறிப்பாக, கோடைக் காலத்தில் பயணிக்கும்போது ப்ரீ பிளான் செய்து செய்வது தேவையற்ற சிக்கல்களை தவிர்க்க உதவும். உங்கள் கோடைக்கால சுற்றுலா பயண திட்டத்தில் முதல் பிளானாக இருக்க வேண்டியது புறப்படும் நேரம்.
அதிகாலை நேரங்களில் உங்களது பயணத்தைத் தொடங்குவது மிகச் சிறந்தது. குறிப்பாக, குழந்தைகள் மற்றும் சிறுவர்களுடன் சுற்றுலா செல்லும்போது உச்சி வெயில் நேரமான மதியம் 12 மணி தொடங்கி 3 மணி வரையில் பயணத்தை மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
தண்ணீர்:
தேவைக்கு அதிகமாகவே தண்ணீர் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். வெயில் காலங்களில் அதிகம் தாகம் எடுக்கும். குறிப்பாக, சிறுவர்கள் எப்போது தண்ணீர் கேட்பார்கள் என்றே தெரியாது. அந்த மாதிரியான நேரங்களில் கடைகளில் வாங்கிக் கொள்ளலாம் என நினைத்து தண்ணீரை தவிர்த்துவிடாதீர்கள். சில நெடுஞ்சாலைகளில் தண்ணீர் அவ்வளவு கிடைத்து விடாது.
அதுமட்டுமின்றி கிடைக்கும் தண்ணீர் அனைத்தும் சுத்திகரிக்கப்பட்ட நீராக இருக்கும் என்றும் நம்ப முடியாது. ஆகையால், தண்ணீரை கூடுதலாக கேன் நிரப்பிக் கொண்டு செல்வது சிறந்தது. அதிலும், சிறுவர்களுக்கென பிரத்யேகமாக காய்ச்சி வடிகட்டிய தண்ணீரை எடுத்து செல்வது தேவையற்றை உடல் உபாதைகளைத் தவிர்க்க உதவும்.
உணவு:
வெளிப்புற உணவகங்களில் தரமான மற்றும் சுவையான கிடைக்கும் என நம்புவது தேவையற்றது. ஆகையால், நமக்கான உணவை வீட்டிலேயே தயார் செய்து எடுத்துச் செல்ல வேண்டும். குறிப்பாக, குழந்தைகளுக்கான உணவை வீட்டிலேயே சமைத்து எடுத்து செல்வது அவசியமானதாக உள்ளது.
அதேசமயம், தேவையற்ற உபாதைகளைத் தவிர்க்க ஸ்நேக்ஸ் மற்றும் பிற நொறுக்கு (பேக்கட்டில் அடைத்து வைக்கப்பட்ட) தீனிகளை அறவே தவிர்ப்பதும் நல்லது. கவர்களில் அடைத்து வைக்கப்பட்ட உணவுகளுக்கு பதிலாக பழங்கள், வீட்டிலேயே தயார் செய்யப்பட்ட ஜூஸ் ஆகியவற்றை மிக தாராளமாக எடுத்துச் செல்லலாம்.
உடை:
வெயிலுக்கு ஏற்ற உடையை குழந்தைகளுக்கு அணிவித்தல் சிறந்தது. குறிப்பாக, காட்டன் போன்ற அதிக காற்றோட்டத்தை வழங்கக் கூடிய உடைகளை சிறுவர்களுக்கு அணிவியுங்கள். இது வெயிலால் ஏற்படும் எரிச்சல் மற்றும் புழுக்கத்தைத் தவிர்க்க உதவும்.
பயணத்தைத் தொடுங்கும் முன்பே குறிப்பாக சிறுவர்களை கழிவறைக்கு அழைத்துச் சென்றுவிட்டு வந்துவிடுங்க. இது தேவையற்ற நேரங்களில், தேவையில்லாமல் சாலையோரத்தில் காரை நிறுத்து வைத்து காத்திருக்க வேண்டிய சூழ்நிலையை தவிர்க்க உதவும். தொடர்ந்து, குழந்தைகளுக்கு அணிவிக்கப்பட்டிருக்கும் டயப்பர்களை அவ்வப்போது செக் செய்ய வேண்டும். நீண்ட நேரங்களுக்கு ஒரே டயப்பரை பயன்படுத்த வேண்டாம். இது தேவையற்ற அலர்ஜியை உருவாக்க வழி வகுக்கும்.
முன்னெச்சரிக்கை:
சளி, காய்ச்சல் போன்ற பிரச்னைகளுக்கான மாத்திரைகளை எப்போதும் கையிருப்பு வைத்திருப்பது சிறந்தது. குறிப்பாக, பயணங்களின்போது வைத்திருப்பது தட்டுப்பாட்டின்போது பயன்படுத்திக் கொள்ள உதவும். நாம் பயன்படுத்தும் அல்லது தேடும் மாத்திரைகள் சில இடங்களில் கிடைக்காது.
இந்த மாதிரியான நேரங்கள் நம்முடைய பயண நேரத்தைக் கூட்டிவிடும். இத்துடன், தேவையற்ற அலைச்சலையும் ஏற்படுத்திவிடும். ஆகையால், ஊர் சுற்ற செல்லும் முன்பே ஒவ்வாமை, தலை வலி போன்றவற்றிற்கான மாத்திரையை எடுத்துக் கொண்டு செல்லலாம்.
எந்த மாதிரியான இடத்தை தேர்வு செய்யலாம்:
குழந்தைகள் உங்களுடன் டூர் வருகிறார்கள் என்றால் அமைதியான மற்றும் இயற்கையான இடங்களை தேர்வு செய்வது மிக சிறந்தது. அங்கிருக்கும் சுத்தமான காற்று அவர்களின் உடலுக்கு நல்ல பலனை வழங்கும். ஆகையால், தியேட்டர், தீம் பார்க் மற்றும் சர்க்கஸ் போன்ற இடங்களை தவிர்ப்பது மிக சிறந்தது.
மிக முக்கியமானது:
குழைந்தைகளைக் கையில் தூக்கி செல்வோர் பால் பாட்டில், கூடுதல் டையப்பர்கள், வாட்டர் பாட்டில்கள் மற்றும் கை குட்டை அல்லது டிஷ்யூ பேப்பர்கள் போன்ற மிக அத்தியாவசியப் பொருட்கள் நம்முடைய பைகளில் இருக்கின்றனவா என செக் செய்து கொள்ள வேண்டும். இதுபோன்ற பொருட்கள் நெடுஞ்சாலை கடைகளில் கிடைப்பது மிக மிக சிரமம்.
மேலே கூறப்பட்ட அனைத்து டிப்ஸ்களையும் ஃபாலோ செய்து உங்கள் டூரை ஆரம்பிப்பீர்களானால் நீங்களும், உங்களின் குழந்தைகளும் நிச்சயம் இந்த டூரை மிக மிக ஜாலியாக அனுபவிப்பீர்கள்.
-
வெறும் ரூ150க்கு விமான டிக்கெட் விற்பனையாகுது! இது ஆஃபர் எல்லாம் இல்லை உண்மையான கட்டணமே இவ்வளவு தான்!
-
ஸ்கோடா கார்களை வாங்க ஆள் இல்ல!! கம்மியான விலையில் கார்களை விற்பனை செய்தும் பயன் இல்லை!
-
கொடுக்கல், வாங்கலில் பிரச்னை.. காருக்கு தீ வைத்த கோவகார கும்பல்! கோடி ரூபா மதிப்புள்ள கார் பைசாவுக்கு தேரல!