Just In
- 31 min ago மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- 53 min ago ரெனால்ட் டஸ்டர் கார் பற்றி இந்த அப்டேட்காக தான் இந்தியாவே வெயிட்டிங்! இப்பவே ரெடியாக வேண்டியது தான்!
- 2 hrs ago அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- 2 hrs ago மோடியின் பாதுகாப்புக்கு செல்லும் இந்த டீசல் காரை இனி பயன்படுத்த கூடாது! வெளியான புதிய உத்தரவு
Don't Miss!
- Movies சித்தார்த் - அதிதி ராவ் நிச்சயதார்த்தம்.. ராஷி கன்னா முதல் சத்யராஜ் மகள் வரை.. குவியும் வாழ்த்து!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Finance முதல்ல மகன், இப்போ அம்மா.. காங்கிரஸ் விட்டு விலகிய சாவித்ரி ஜிண்டால்..!!
- News சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு பாஜகவின் நடிகர் எஸ்.வி.சேகர் திடீர் ஆதரவு? பரபர ட்வீட்!
- Technology வெளுத்துக்கட்டுது சேல்.. ரூ.21,000 போதும்.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 67W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
விலை உயர்ந்த பைக்குகளை பறிமுதல் செய்து அதிரடி காட்டிய போலீசார்... காரணம் இதுதான்...
விலை உயர்ந்த பைக்குகளை பறிமுதல் செய்து போலீசார் அதிரடி காட்டியுள்ளனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்கள் இரு சக்கர வாகனங்களை வாங்கும்போது இரண்டு முக்கியமான விஷயங்களை மட்டுமே அதிகம் கவனிப்பார்கள். ஒன்று விலை. மற்றொன்று மைலேஜ். இந்த இரண்டு விஷயங்களை பொறுத்துதான், இரு சக்கர வாகன தேர்வு அமையும்.
ஆனால் தற்போது காலம் மாறி விட்டது. விலை மற்றும் மைலேஜ் ஆகிய விஷயங்களை காட்டிலும், ஸ்டைல், பெர்ஃபார்மென்ஸ், வேகம் ஆகிய விஷயங்களுக்குதான் வாடிக்கையாளர்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். குறிப்பாக இளைஞர்கள்.
இந்திய இளைஞர்கள் மத்தியில் டூரிங் மற்றும் ரேஸிங் உள்ளிட்ட விஷயங்களின் மீதான ஆர்வம் அதிகரித்து வருகிறது. எனவே அதிக விலை என்பதையும் பொருட்படுத்தாமல், ராயல் என்பீல்டு, கேடிஎம் உள்ளிட்ட நிறுவனங்களின் பைக்குகளை வாங்குவதில் இளைஞர்கள் அதிக முனைப்பு காட்டுகின்றனர்.
ஆனால் பொது சாலைகளில் பைக் ரேஸிங் மற்றும் ஸ்டண்டிங்கில் ஈடுபடுவது சட்ட விரோதமானது என்பது தெரிந்திருந்தும் கூட இளைஞர்கள் பலர் அதனை தொடர்ந்து செய்து கொண்டுதான் உள்ளனர். அத்தகைய இளைஞர்களை கட்டுப்படுத்த போலீசார் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக ஆந்திர பிரதேச மாநிலம் விசாகப்பட்டிணம் நகரில், சட்ட விரோதமான ரேஸிங்கிற்கு பயன்படுத்திய மோட்டார்சைக்கிள்களை போக்குவரத்து போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர். இதில், பலவும் ஹை-எண்ட் பைக்குகள் ஆகும்.
இதுகுறித்து போக்குவரத்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ''நாங்கள் பறிமுதல் செய்தவற்றில் பெரும்பாலானவை டாப்-எண்ட் பைக்குகள் ஆகும். டாப்-எண்ட் பைக் உரிமையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.
இந்த பைக்குகள் வழங்கும் வேகம் காரணமாக இளைஞர்கள் அதிகளவில் ஈர்க்கப்படுகின்றனர்'' என்றார். இதுகுறித்து விசாகப்பட்டிணத்தில் உள்ள ஒரு ராயல் என்பீல்டு ஷோரூம் ஊழியர் கூறுகையில், ''கடந்த சில ஆண்டுகளாக டாப்-எண்ட் பைக்குகள் இளைஞர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
வெறுமனே விசாரித்து செல்வதுடன் வாடிக்கையாளர்கள் நின்று விடுவதில்லை. பைக்குகளை ஆர்வத்துடன் வாங்கவும் செய்கின்றனர். குறிப்பாக இளைஞர்கள்தான் அதிகம். வேகம் காரணமாகதான் இந்த பைக்குகள் இளைஞர்கள் மத்தியில் அதிகமாக பிரபலமடைந்துள்ளன'' என்றார்.
இதுகுறித்து டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. ராயல் என்பீல்டு நிறுவனத்தின் கிளாசிக் 350, புல்லட் 350, ஹிமாலயன் மற்றும் இன்டர்செப்டார் 650 ஆகிய மோட்டார்சைக்கிள்கள் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளன.
சுதந்திரத்திற்கு பிறகு இந்திய ராணுவத்தின் அதிகாரப்பூர்வ மோட்டார்சைக்கிளாக ராயல் என்பீல்டு உருவெடுத்தது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த போலீசாரும் கூட ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள்களை பயன்படுத்தி வருகின்றனர்.
ராயல் என்பீல்டு தவிர கேடிஎம் நிறுவன பைக்குகளும் கூட இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளன. குறிப்பாக கேடிஎம் ட்யூக் 125, கேடிஎம் 390 மற்றும் ஆர்சி 200 ஆகிய பைக்குகள் இளைஞர்கள் மத்தியில் வேகமாக பிரபலம் அடைந்து வருகின்றன.
Note: Images used are for representational purpose only.
-
இந்தியாவை ஆட்சி செய்தது போதும்.. ஜப்பான் பக்கம் ஒதுங்குவோம்.. தமிழகத்துல இருந்து ஜப்பான் போகும் புல்லட் 350
-
நடிகர் தனுஷை வைத்து படம் எடுத்தவர் இன்று விலையுயர்ந்த காரில்!! ஷோரூமுக்கு குடும்பத்துடன் போய்ட்டாரு!
-
இன்சூரன்ஸ் இல்லாத வெளிநாட்டு காரில் பயணித்த நாம் தமிழர் வேட்பாளர்! வைரலாகும் புகைப்படம்!