Just In
- 57 min ago சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- 3 hrs ago எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- 5 hrs ago சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- 7 hrs ago படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
Don't Miss!
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சோனியா காந்தியே எங்கள் பக்கம்தான்... மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அதிரடி... என்னங்க சொல்றீங்க!!
சோனியா காந்தியே எங்களுக்கு ஆதரவு அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். இது குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இதில், போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகைகள் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளன. இந்தியாவில் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கை இது என மத்திய அரசு கூறியுள்ளது.
எனவே மத்திய அரசின் அதிரடி நடவடிக்கைக்கு வரவேற்பு இருந்து வருகிறது. அதே சமயம் அபராதங்கள் மிக கடுமையாக உள்ளதால், எதிர்ப்பும் நிலவி வருகிறது. இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனங்களை இயக்கினால், பழைய விதிமுறைகளின்படி 1,000 ரூபாய் மட்டுமே அபராதமாக விதிக்கப்பட்டு வந்தது. இது தற்போது 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
லைசென்ஸ் இல்லாமல் வாகனங்களை இயக்குபவர்களுக்கான பழைய அபராத தொகை 500 ரூபாய் மட்டுமே. ஆனால் இனி நீங்கள் டிரைவிங் லைசென்ஸ் இல்லாமல் வாகனங்களை இயக்கினால், 5,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டியதிருக்கும். இதேபோன்று பல்வேறு போக்குவரத்து விதிமுறைகளுக்கான அபராதங்கள் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
அபராத தொகைகளுக்கு பயந்து கொண்டு வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை கடைபிடிப்பார்கள் என மத்திய அரசு கருதுகிறது. ஆனால் அபராத தொகைகள் கடுமையாக உள்ளதால், வாகன ஓட்டிகளுக்கு இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. எனவே ஒரு சில மாநில அரசுகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இதில், ஆச்சரியம் என்னவென்றால், பாஜக ஆட்சி செய்யும் ஒரு சில மாநிலங்கள் கூட மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக இருக்கின்றன. குஜராத்தை இதற்கு ஓர் உதாரணமாக சொல்லலாம். பாஜக ஆண்டு வரும் குஜராத் மாநிலத்தில், போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகைகள் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளன.
இந்த சூழலில் புதிய அபராத தொகைகள் அமலுக்கு வர காரணகர்த்தாவான மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தற்போது இதுகுறித்து பேசியுள்ளார். இவரது தீவிர முயற்சியால்தான் மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
விலை மதிப்பில்லாத உயிர்களை காப்பாற்ற வேண்டும் என்பதுதான் போக்குவரத்து விதி மீறல்களுக்கான அபராத தொகைகள் உயர்த்தப்பட்டிருப்பதன் பின்னால் இருக்கும் காரணம் என நிதின் கட்கரி தற்போது கூறியுள்ளார். அத்துடன் சோனியா காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால் கூட இந்த நடவடிக்கைக்கு ஆதரவளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ''புதிய மோட்டார் வாகன சட்டத்தின் கீழான அதிக அபராதங்கள் வருவாயை பெருக்குவதற்கானது கிடையாது. உயிர்களை காப்பாற்ற வேண்டும் என்பதுதான் இதன் நோக்கம்'' என்றார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ''ஒவ்வொரு ஆண்டும் 5 லட்சம் விபத்துக்கள் (இந்தியாவில்) நடைபெறுகின்றன. இதில், 1.50 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர்.
சுமார் 3 லட்சம் பேர் படுகாயமடைகின்றனர். பாதிக்கப்படுவர்களில் 65 சதவீதம் பேர், 18 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக உள்ளனர்'' என்றார். இதனிடையே அபராத தொகைகளை உயர்த்தியிருப்பதற்கு பாஜக ஆளும் சில மாநிலங்களே எதிர்ப்பு தெரிவித்திருப்பது குறித்து அமைச்சர் நிதின் கட்கரியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு, சோனியா காந்தி (காங்கிரஸ் தலைவர்) மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் (டெல்லி முதல்வர் மற்றும் ஆம் ஆத்மி தலைவர்) ஆகியோர் இந்த சட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளதை நீங்கள் ஏன் குறிப்பிடவில்லை? என எதிர்கேள்வி கேட்டு நிதின் கட்கரி செக் வைத்தார். அத்துடன் இந்த விவகாரம் தொடர்பாக பாஜக ஆளும் மாநிலங்களுக்கும், மத்திய அரசுக்கும் இடையே பிளவு இல்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.
அத்துடன் தன் வாழ்க்கையில் கிடைத்த தனிப்பட்ட அனுபவம் ஒன்றையும் நிதின் கட்கரி நினைவு கூர்ந்தார். மஹாராஷ்டிரா சட்டமன்றத்தில் எதிர்கட்சி தலைவராக இருந்தபோது அவரும், அவரது குடும்பத்தினரும் சாலை விபத்து ஒன்றில் காயமடைந்ததை நிதின் கட்கரி குறிப்பிட்டார். இதற்காக ஒரு ஆண்டு காலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் நிதின் கட்கரி கூறினார்.
எனவே சாலை விபத்துக்களால் பாதிக்கப்படுபவர்களின் சிரமங்களை தன்னால் புரிந்து கொள்ள முடியும் எனவும் நிதின் கட்கரி தெரிவித்தார். மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் இந்த கருத்து மற்றும் புதிய மோட்டார் வாகன சட்டம் தொடர்பான உங்கள் எண்ணங்களை கமெண்ட் பாக்ஸ் மூலம் தெரியப்படுத்துங்கள்.
-
இங்கே வெயில் பொளக்குது... துபாயில் செம மழை!! வறண்டு கிடக்கும் இண்டர்நேஷ்னல் ஏர்போர்ட்டை இப்போது பாருங்க!
-
கொடுக்கல், வாங்கலில் பிரச்னை.. காருக்கு தீ வைத்த கோவகார கும்பல்! கோடி ரூபா மதிப்புள்ள கார் பைசாவுக்கு தேரல!
-
35 கிமீ மைலேஜ் குடுக்கற மாருதி கார்லாம் இந்தியால இருக்குதா! விலை இதை விட ஆச்சரியப்படுத்துதே! அவ்ளோ கம்மி!