Just In
- 23 min ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்கை வாங்குபவர்களின் எண்ணிக்கை குறையுது!! காரணம் என்னவா இருக்கும்?
- 31 min ago மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
- 1 hr ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
- 1 hr ago 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
Don't Miss!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- News சிறையில் கணவர்.. இடைத்தேர்தலில் களமிறங்கும் ஜார்கண்ட் Ex முதல்வர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
சைக்கிளால் கூட நுழைய முடியாத பாதையில் புகுந்த ஹோண்டா பைக்.. அடுத்து நடந்தது என்ன? அதிர்ச்சி வீடியோ!
ஹோண்டா சிபிஆர் பைக் ஒன்று சைக்கிளால் கூட நுழைய முடியாத ஓர் குறுகிய பாதையில், மிகவும் அபாயகரமான முறையில் நுழைவதைப் போன்ற வீடியோக் காட்சி வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.
உலக நாடுகளில் உள்ள சாலைகளைக் காட்டிலும் இந்தியாவின் பெரும்பாலான சாலைகள் மிகவும் ஆபத்து நிறைந்தவையாக இருக்கின்றன. இதற்கு தினந்தோறும் அரங்கேறும் விபத்துகளும், உயிரிழப்புகளுமே சான்று.
அதேசமயம், இந்தியாவில் அண்மைக் காலங்களாக விபத்தின் எண்ணிக்கையும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இதற்கு வாகன ஓட்டிகளின் போக்குவரத்து விதிமீறல்களே முக்கிய காரணமாக இருக்கின்றது.
விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகள் முறையாக பாதுகாப்பு கவசம் அணியாததன் காரணமாகவே உயிரிழப்புகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் புதிய எண்ணிக்கையை புதிய உச்சத்தை அடைந்து வருகின்றது.
இந்நிலையில், ஹோண்டா சிபிஆர் 250ஆர் பைக் சைக்கிள்கூட நுழைய முடியாத பாதையில் நுழைந்து செல்வதுபோன்ற அதிர்ச்சியான வீடியோக் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோ வாட்ஸ்-ஆப், பேஸ்புக் மற்றும் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வருகின்றது.
அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள இந்த வீடியோ வேறொரு நபரால் எடுக்கப்பட்டதல்ல. எந்த பைக் அதிவேகமாக சென்றதோ, அதை இயக்கிச் சென்ற அந்த இளைஞரின் ஹெல்மட்டில் பொருத்தப்பட்டிருந்த கேமிராவில் அந்த காட்சிகள் பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த வீடியோவை அவரே மற்ற வாகன ஓட்டிகளின் விழிப்புணர்விற்காக வெளியிட்டிருக்கலாம் என கூறப்படுகின்றது.
வீடியோவில், ஹோண்டா சிபிஆர் 250ஆர் பைக் மிக அதிவேகமாக செல்வதை நம்மால் காண முடிகின்றது. அது, மணிக்கு 103 என்ற கிமீ வேகத்தில் செல்கின்றது. தொடர்ச்சியாக அதே வேகத்தில் செல்லும் அந்த இளைஞர் அனைத்து வாகனங்களையும் ஓவர் டேக் செய்தவாறு முந்திச் செல்கின்றார்.
அப்போது, சாலையின் வலது பக்கத்தில், அதாவது இரு சாலைகளையும் பிரிக்கின்ற வகையில் அமைந்துள்ள டிவைடருக்கு மிகவும் நெருக்கமாக டாடா சுமோ ஒன்று சென்றுக் கொண்டிருந்தது.
இதனைச் சற்றும் எதிர்பார்க்காத அந்த இருசக்கர வாகன ஓட்டி செய்வதறியாமல், பைக்கையும் நிறுத்தவும் முடியமால், அந்த மிக மிக குறுகிய பாதையில் நுழைகின்றார்.
இந்த வீடியோவை முதலில் பார்க்கும் அனைவரும், அந்த வாகன ஓட்டி ஏதோவொரு பெரும் பின் விளைவைச் சந்திக்க இருக்கின்றார் என எண்ணிய வேலையில், அவர் மிக சாதூர்யமாக செயல்பட்டு சிறு சிறு சிராய்ப்புகளுடன் அங்கிருந்து தப்பிக்கின்றார்.
விபத்தில் சிக்கிய பின்னராவது, பொறுமையாக செல்ல வேண்டும் என எண்ணாமல், மீண்டும் அதி வேகத்தில் பறந்தவாறே அவர் செல்கின்றார்.
இந்த வீடியோவைப் பார்க்கும் பலர் ஹோண்டா சிபிஆர் பைக்கரின் இந்த செயலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தனர்.
அந்த இளைஞர் டாடா சுமோ கார்காரரிடம் சிக்கி விட வேண்டாம் என்பதற்காக அங்கிருந்து மீண்டும் அதிவேகத்தில் பறந்திருக்கலாம் நம்மால் யூகிக்க முடிகின்றது. இருப்பினும் அதிவேகம் என்பது எப்போதும் ஆபத்து என்பதை உணர்த்தும் வகையில் இந்த வீடியோக் காட்சி அமைந்துள்ளது.
இந்த சம்பவத்தின்போது, டாடா சுமோவின் ஓட்டுநர் அல்லது ஹோண்டா பைக்கின் உரிமையாளர், ஆகிய இருவரும் சாதுர்யமாக செயல்படவில்லை என்றால் பெரும் பின் விளைவுகளை இருவரும் சந்திக்க நேர்ந்திருக்கும்.
இந்த சம்பவத்திற்கு பைக்கரின் அதிவேகமே முக்கிய காரணமாக இருக்கின்றது. இதன்காரணமாகவே, இந்த அபாயமான சூழ்நிலையை அவரால் தவிர்க்க முடியவில்லை. அதேசமயம், இருசக்கர வாகன ஓட்டி பெரும் விபத்திலிருந்து தப்பித்தது மிகப்பெரிய அதிர்ஷ்டம் என்றே கூறப்படுகின்றது.
டிவைடர் மீது ஏறிய பைக் எப்படி மீண்டும் சமநிலைக்கு திரும்பியது என்றே யாராலும் யூகிக்கவே முடியவில்லை. அனைத்தும் கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து விடுகின்றது.
இந்த வீடியோ பார்ப்போரின் இதயம் குறைந்தது ஒரு கனமாவது நின்று துடிக்க வைக்கின்ற அளவிற்கு பரபரப்பை அடக்கியதாக காட்சியளிக்கின்றது.
இதுபோன்று, மிகவும் மோசாமாக வாகனங்களை இயக்கி பல இளைஞர்கள் தங்களின் வாழ்வை தொலைத்துவிட்டு நிற்கின்றனர். இருப்பினும், வாகன ஓட்டிகள் திருந்தியபாடில்லை. மேலும், எதையும் கண்டுக் கொள்ளாமல் விதிமீறல்களில் ஈடுபட்டு பின்விளைவுகளைச் சந்தித்து வருகின்றனர்.
இதன்காரணமாகவே, பல மடங்கு உயர்த்தப்பட்ட அபராதத்துடன் புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இது இந்தியாவை முற்றிலும் வாகன போக்குவரத்து விதிமீறல்களே இல்லாத நாடாக மாற்றும் நோக்கில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு களமிறக்கப்பட்டுள்ளது.
-
வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
-
21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
-
இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?