Just In
- 40 min ago பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- 1 hr ago 140 பேர் தான் இந்த ஸ்கூட்டரை வாங்க முடியும்! அதுக்கு மேல எவ்வளவு கோடி குடுத்தாலும் கிடைக்காது!
- 2 hrs ago இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!
- 3 hrs ago சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!
Don't Miss!
- Movies ஜப்பான் எஃபெக்ட்டா.. கார்த்தியை கண்டுக்காத கூட்டம்.. சூர்யா வந்தவுடனே சும்மா அள்ளுதே!
- News தஞ்சை பெரிய கோயில் தேரோட்டம்.. தஞ்சாவூர் மாவட்டம் முழுக்க இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Lifestyle ஆண்களே! அனைத்து பெண்களுக்கும் உங்கள பிடிக்கணுமா? அப்ப சாணக்கியர் சொல்லும் இந்த 6 குணங்களை வளர்த்துக்கோங்க!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
பல நூறு ஆண்டுகள் ஆனாலும் நங்கூரங்கள் துருப்பிடிப்பதில்லை... எப்படி?.. இதுவரை வெளிவரா ரகசியம்!!
பல நூறு ஆண்டுகள் நங்கூரங்கள் துருப்பிடிக்காமல் பலபலவென இருப்பதற்கான காரணத்தையே இப்பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம்.
கார், பைக் என சாலையில் செல்லக்கூடிய அனைத்து விதமான வாகனங்களிலும் உடனடியாக நிறுத்தும் வசதியை வழங்குவதற்காக பிரேக்கிங் எனும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. டிரம், டிஸ்க், சிபிஎஸ் மற்றும் ஏபிஎஸ் பன பல்வேறு தொழில்நுட்பங்கள் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
ஆனால், தண்ணீரில் மிதந்து செல்லும் கப்பல்களில் நங்கூரம் எனும் ஒற்றை கருவி மட்டுமே பழங்காலம் தொட்டு தற்போது வரை பயன்படுத்தப்பட்டு வருகின்றது. நிலையான நிறுத்தத்தைப் பெற எதுவுமே இல்லாத இடங்களில் அதிகமான பிடிமானத்துடன் நிறுத்தும் வசதியை நங்கூரங்கள் மட்டுமே கப்பல்களுக்கு வழங்குகின்றன.
எனவேதான், எஞ்ஜின்களைப் போல அதிக முக்கியத்துவத்துடன் மாலுமிகள் நங்கூரங்களை பராமரிக்க கடமைப்பட்டிருக்கின்றனர். உப்பு தண்ணீர் இரும்பு பொருட்களை மிக எளிதில் அரித்துவிடும். அப்படி இருந்தும் பல நூறு ஆண்டுகள் எப்படி நங்கூரங்கள் பல பலப்பாகவே பயன்பாட்டில் இருக்கின்றன என்பதே நம் அனைவரின் கேள்வியாக இருக்கின்றது.
இந்த சந்தேகத்தைத் தீர்த்து வைக்கவே இப்பதிவு. ஆம், உப்பு நீர் மற்றும் துருவுக்கு எதிராக அவை எவ்வாறு பாதுகாப்படுகின்றன என்கிற தந்திரங்கள் மற்றும் ரகசியத்தையே இப்பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம்.
இரும்பை பொருத்தவரை துரு என்பது மனிதர்களுக்கு வரக்கூடிய புற்றுநோய் போன்ற கொடிய வியாதி ஆகும். இது ஒரு முறை உலோகத்தில் ஏற்படுமானால், பின்னர் முழுமையாக உலோகத்தை அரிக்கத் தொடங்கி விடும். எனவேதான் துரு விஷயத்தில் மாலுமிகள் அதிகம் கவனம் செலுத்துகின்றனர்.
குறிப்பாக, கடல் நீரில் நீண்ட நேரம் மூழ்கியிருந்த பின்னர் மீண்டும் நங்கூரம் கப்பலுக்குள் இழுக்கப்படும்போது அதிக உப்பு நீருடன் வந்து சேரும். உப்பு நீரை அப்படியே விட்டுவிட்டால் அது மிக எளிதில் நங்கூரத்தையும், அதை தாங்கி நிற்கும் சங்கிலியையும் பதம் பார்த்துவிடும். ஆகையால், நங்கூரத்தை இழக்கும்போது அல்லது மேலே இழுத்த பின்னர் நல்ல தண்ணீரைக் கொண்டு கழுவுகின்றனர்.
கடற்பாசி அல்லது உப்பு தன்மை விடாபிடியானதாக இருக்குமானால் அவற்றை உலோக பிரஸ்களைக் கொண்டு மாலுமிகள் சுத்தம் செய்வர். இதுவே நங்கூரத்தையும், சங்கிலியையும் காப்பதற்காக மாலுமிகள் மேற்கொள்ளும் முக்கிய பணிகள் ஆகும். இதுதவிர, நங்கூரம் மற்றும் சங்கிலிகளில் அதிக சிறப்பு வசதிக் கொண்ட வண்ண பூச்சுகள் பயன்படுத்தப்படுகின்றன.
அவை, துரு மற்றும் கடல் உப்பு நீர் அரிப்பு ஆகியவற்றில் இருந்து நங்கூரங்களைக் காக்க உதவும். இந்த வர்ண பூச்சு மட்டும் குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே செய்யப்படுகின்றன. ஆனால், கழுவும் முறை மட்டும் ஒவ்வொரு முறையும் நங்கூரம் கடலுக்குள் சென்று திரும்பிய பின்னர் செய்யப்படுகின்றது.
சிறு துளியளவுகூட கடல் பாசி அல்லது உப்பு படிமத்தை நங்கூரத்தில் தங்க மாலுமிகள் அனுமதிப்பதில்லை. இதனால்தான் பல தசாப்தங்களைக் கடந்தும் நங்கூரங்களால் சிறிதளவும் சேதமின்றி பயன்பாட்டில் இருக்க முடிகின்றது. நங்கூரம் மற்றும் சங்கிலிகள் எளிதில் துரு பிடிக்கக்கூடாது என்பதற்காக அதனை கல்வனைஸ்ட் உலோகத்தால் தயாரிக்கின்றனர்.
பிரமாண்ட உருவம் கொண்ட கப்பல்களை காற்று, புயல், சூறாவளி மற்றும் மழை ஆகியவற்றில் இருந்து அதிக உறுதி தன்மையுடன் தாங்க வேண்டும் என்பதற்காக மிக அடர்த்தியாக உருவத்தில் நங்கூரமும், சங்கிலியும் தயாரிக்கப்படுகின்றன.
இவை ஒவ்வொரு முறையும் நங்கூரமிடும்போதும் மீண்டும் மேலே வரும்போதும் அதிக உராய்வு மற்றும் அழுத்தங்களைச் சந்திக்கின்றன. இருப்பினும், அதிக பராமரிப்பின் காரணமாக அவை அவ்வளவு எளிதில் சேதமடைவதில்லை. அதேசமயம், அதிகப்படியான நேரங்கள் நங்கூரங்கள் கப்பலிலேயே இருக்கின்றன.
அதிக காற்று வீசும் நேரங்களில் மட்டுமே அவை கடலுக்குள் இறக்கப்படுகின்றன. குறிப்பாக, வணிக கப்பல்கள் தொடர்ச்சியாக பயணத்துக் கொண்டே இருக்கின்ற காரணத்தினால் மிகவும் அரிதினும் அரிதாகவே வணிக கப்பல்கள் நங்கூரத்தை பயன்படுத்துகின்றன. இதன் காரணத்தினாலும் அவை பல ஆண்டுகள் பலபலப்பாகவும், புதிது போன்றும் காட்சியளிக்கின்றன.
-
டாடாவுக்கு நெருக்கடி கொடுக்க அவசரம் காட்டும் வின்ஃபாஸ்ட்.. தூத்துக்குடில உற்பத்திக்கான பணிகள் தீவிரம்!
-
சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
-
என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!