Just In
- 4 min ago ஓசூரில் தயாராகும் புதிய எலக்ட்ரிக் வாகனம்!! உருவாக்குவது யார் தெரியுமா?
- 51 min ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 2 hrs ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- 2 hrs ago எவ்வளவு பெரிய கிரிக்கெட்டர், குழந்தை போல் ராயல் என்ஃபீல்டு பைக்கில் ரைடு!! ஓட்டி பார்த்த பின் அவர் சொன்னது...
Don't Miss!
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- News திடீர் மாரடைப்பு.. பிரபல தாதா முக்தார் அன்சாரி உயிரிழப்பு.. பதற்றம் - 144 தடை உத்தரவு
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
அரபு நாடுகளின் கொட்டத்தை அடக்க வரும் புதிய தொழிற்நுட்பம்; கிலியில் எண்ணெய் கிணறு முதலாளிகள்
உலகம் முழுவதும் பெட்ரோல் டீசல்களை சப்ளே செய்யும் அரபு நாடுகளின் கொட்டத்தை அடக்க புதிய தொழிற்நுட்பம் தற்போது பயன்பாட்டிற்கு வரவுள்ளது. இன்னும் 5 ஆண்டுகளில் மக்களிடம் எலெக்ட்ரிக் மற்றும் பியூயல் செல
உலகம் முழுவதும் பெட்ரோல் டீசல்களை சப்ளே செய்யும் அரபு நாடுகளின் கொட்டத்தை அடக்க புதிய தொழிற்நுட்பம் தற்போது பயன்பாட்டிற்கு வரவுள்ளது. இன்னும் 5 ஆண்டுகளில் மக்களிடம் எலெக்ட்ரிக் மற்றும் பியூயல் செல் ரக வாகனங்கள் பயன்பாடு அதிகரிக்கும் எனவும், 20 ஆண்டுகளில் பெட்ரோல் டீசலுக்கான தேவையே மிக குறைவாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இன்று வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது அதனால் அதற்கான பெட்ரோல் மற்றும் டீசல் தேவையும் அதிகரிக்கும். இதனால் இந்தியா முழுவதும் பெரிய பெருளாதார பிரச்னைகள் ஏற்படுகிறது. இதையடுத்து மாற்று ஏரிபொருளை பயன்படுத்த மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது.
இந்நிலையில் பெட்ரோல் டீசலுக்கு மாற்றாக பேட்டரி மற்றும் ஹைட்ரஜன் பியூயல் தான் இருக்கிறது. சமீபகாலமாக எலெக்ட்ரிக் வாகனங்களை மக்கள் பயன்படுத்த துவங்கியுள்ளனர். ஹைட்ரஜ் பியூல் பஸ்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது. தற்போது நாம் இந்த இரு தொழிற்நுட்பங்களையும் பற்றி கீழே பார்ப்போம்.
இந்த இரு தொழிற்நுட்பங்களும் இன்டர்னல் கம்பஷன் இன்ஜினிற்கு பதிலாக புதிய தொழிற்நுட்பத்தை புகுத்துகிறது. இந்த இரண்டு தொழிற்நுட்பமும் எலெகட்ரிக்கல் மோட்டாரை பயன்படுத்துகின்றனர். அதற்கான சக்தியை எலெக்ட்ரோ கெமிக்கல் டிவைஸ் மூலம் பெருகின்றனர். இந்த இரண்டு தொழிற்நுட்பத்திற்கும் உள்ள வித்தியாசத்தை இங்கே பார்க்கலாம்.
எலெக்ட்ரிக் வாகன தொழிற்நுட்பம்
எலெக்ட்ரிக் வாகனம் முதன் முதலில் 1800 களிலேயே கண்டுபிடிக்கப்பட்டு விட்டது. பலர் கார்கள் அப்பொழுதே இந்த தொழிற்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டது. இருந்தாலும், இன்டர்னல் கம்பஷன் இன்ஜினை காட்டிலும் இந்த ரக கார்கள் குறைவாகவே தயாரிக்கப்பட்டது.
சுமார் 20 ஆண்டுகள் இந்த இரு இன்ஜினிலும் எது பெஸ்ட் என்ற போட்டி நடந்து கொண்டே இருந்தது. ஆனால் இறுதியில் இன்டர்னல் கம்பஷன் இன்ஜின் தான் வெற்றி பெற்றது எலெக்ட்ரிக் கார்கள் வெற்றி பெறவில்லை.
அதன் பின் 1970 மற்றும் 80 களில் கச்சா எண்ணெய் விலையேற்றம் மற்றும் தட்டுப்பாடு காரணமாக மீண்டும் எலெக்ட்ரிக் கார் உதயம் பெற துவங்கியது. ஆனால் அப்பொழுதும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இறுதியாக கடந்த 2008ம் ஆண்டு மீண்டும் டெஸ்லா மற்றும் நிஸான் ஆகிய நிறுவனங்களால் மீண்டு வர துவங்கியுள்ளது.
நவீன காலத்தில் பயன்படுத்தப்படும் எலெக்ட்ரிக் கார்களில் லித்தியம் இயான் பேட்டரிகள் பயன்படுத்தப்படுகிறது. செல்போன்கள், லேப்டாப்களும் இதே பேட்டரியை தான் பயன்படுத்துகின்றனர். முன்னர் லெட் ஆசிட் பேட்டரி பயன்படுத்தப்பட்டது. இது விலை குறைவாக இருந்தாலும் போதுமான அளவிற்கும் நீண்ட நேரமும் பவரை தருவதில்லை.
பியூல் செல் பேட்டரி
இந்த ரக வாகனங்களிலும் எலெக்ட்ரிக் மோட்டர் தான் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்களில் போல் பேட்டரியில் இல்லாமல் வாகனத்திற்கு உள்ளேயே காற்றில் உள்ள ஆக்ஸிஜனையும், சேமிக்கப்பட்ட ஹைட்டஜனையும் சேர்த்து பவரை தயாரிக்கிறது. அதன் மூலம் எலெக்ட்ரிக் மோட்டாரை இயக்குகிறது.
இந்த தொழிற்நுட்பத்தில் பியூயல் செல் என்ற பொருள் ஒன்று பயன்படுத்தப்படுகிறது. அதில் ஹைட்ரஜனும் ஆக்ஸிஜனும் இணைந்து ரியாக் ஆகி கரெண்டை உருவாக்குகிறது. இதை நேரடியாக எலெக்ட்ரிக் மோட்டாருக்கு செலுத்தி இது செயல்படுகிறது.
இதில் ஹைட்ரஜன் இயற்கையாகவே கிடைக்கிறது. இதுவும் ஆக்ஸிஜனும் சேர்ந்து ரியாக்ட் ஆகும் போது ஜீரோ எமிஷன் நடக்கிறது. இந்த தொழிற்நுட்பம் விண்வெளியில் பயன்படுத்தப்படுகிறது. இதை பயன்படுத்துவது மூலம் வாகனத்தை குறைந்த எடை உள்ளதாகவும் அதிக திறன் படைத்தாகவும் உருவாக்க முடியும்.
இந்த தொழிற்நுட்பத்தால் வாகனத்திற்கு அதிக திறன் மட்டும் இல்லாமல் குறைந்த செலவு தான் ஆகிறது. தற்போது மார்கெட்டில் ஹூண்டாய் டக்சன் மற்றும் டோயோட்டா மிராய் ஆகிய இரண்டு வாகனங்கள் தான் பியூயல் செல் வாகனங்களாக விற்பனை செய்யப்படுகின்றன.
அமெரிக்காவில் 10 இடங்களில் ஹைட்டரஜன் நிரப்பும் மையங்கள் செயல்படுகறது. மேலும் பல இடங்களில் ஹைட்ரஜன் நிரப்பும் பணி தொடர்ந்து நடந்துதான் வருகிறது. மேலும் அமெரிக்காவில் ஹைட்ரஜன் பஸ்கள் பொது பயன்பாட்டிற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.
எலெக்ட்ரிக் vs பியூயல் செல்
எலெக்ட்ரிக் காரை பொருத்தவரை பியூயலை எரிக்காததால் காற்றிற்கு மாசு ஏற்படுத்தாது அதே நேரத்தில் வாகனத்திற்கு தேவையான டார்க் மற்றும் ஸ்மூத்தர் ஆக்ஸிலரேஸனை வழங்கும்.
எலெக்டரிக் வாகனங்களை பொருத்தவரை அதன் ரேஞ்ச் என்பது குறைவாக தான் இருக்கிறது. ஒரு முழு சார்ஜிற்கு குறைந்த தூரம் தான் செல்ல முடியும் அது தான் இந்த வாகனத்தில் இருக்கும் பெரிய மைனஸ் பாயிண்ட். நீண்ட தூர பயணங்களுக்கு எலெக்ட்ரிக் வாகனங்கள் ஒத்து வராது.
மேலும் இதற்கு பயன்படுத்தப்படும் பேட்டரிகளும் அதிகம் அதனால் பேட்டரிகளும் விலை அதிகமாக இருக்கிறது. எனினும் கடந்த 10 ஆண்டுகளில் இதன் விலை பல மடங்கு இறங்கியுள்ளது. இன்னும் 10 ஆண்டுகளில் இதன் விலை மிக மலிவாகிவிடும்.
பியூயல் செல் காரை பொருத்தவரை பேட்டரி காரின் அதே ரேஞ்சை தராது. என்றால் அது பெட்ரோல்/டீசலை போல ஹைட்ரஜனை சேமித்து வைக்க கூடிய வசதி கொண்டது. ஆனால் இந்த தொழிற்நுட்பத்தில் இருக்கும் முக்கியமான பிரச்சனை கட்டுமான வசதி இல்லாதது தான்.
மேலும் பியூயல் செல்லிற்கு கேட்டலிட்ஸ் ஆக பிளாட்டினம் பயன்படுத்தப்படுகிறது. இது மிக மிக அதிகமாக உள்ள பொருள். தற்போது பிளாட்டினதை வைத்து எப்படி நீண்ட திறன் படைக்க வைக்க முடியும் என்ற ஆராய்ச்சி நடந்து வருகிறுது.
இந்த இரண்டு ரக வாகனங்களும் போட்டி போட்டு தங்களின் தொழிற்நுட்பத்தில் பல முன்னேற்றங்களை நாளுக்கு நாள் கண்டு வருகின்றனர். இன்னும் 5 ஆண்டுகளில் தற்போது இருக்கும் நிலைமையே வேறு விதமாக இருக்கும்.
இவ்வாளவு நாள் எண்ணெய் வளத்தை வைத்து கொண்டு நம்மிடம் ஆட்டம் போட்டு கொண்டிருந்த அரேபிய நாடுளுக்கு இந்த செய்தி பெரும் அதிர்ச்சியை தான் ஏற்படுத்திஇருக்கும். சொல்லாப்போனல் இன்னும் 20 ஆண்டுகளில் இந்தியாவின் பெட்ரோல் தேவை மிக மிக குறைவானதாகிவிடும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டசெய்திகள்
- ஹெல்மெட் அணியாமல் பைக்கில் போன அமைச்சர்; வைரலான போட்டாவால் பொதுமக்கள் எரிச்சல்
- ராயல் என்ஃபீல்டு பெகாசஸ் எடிசனுக்கு நாளை முன்பதிவு துவங்குகிறது!
- விபத்தில் சிக்கிய நடிகையிடம் மோசமாக நடந்து கொண்ட பிஎம்டபிள்யூ டீலர்.. சமூக வலை தளங்களில் குமுறல்..
- 2018 ஹோண்டா ஆக்டிவா ஐ ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!!
- தமிழகத்தில் ஓடும் "டப்பா" பஸ்களுக்கு தீர்வு ; மீண்டும் வருகிறது புதிய இந்தியா
-
குடிநீரில் கழுவினால் அபராதம்! பெங்களூர் கார் ஓனர்கள் கையில் எடுத்த புதிய ட்ரிக்! இது நமக்கு தெரியாம போச்சே!
-
இது ஏப்ரல் ஃபூல் கிடையாது.. டாடா அல்ட்ராஸ் ரேஸர் கார் ஏப்ரல்ல அறிமுகமாக போகுது! இறங்கி அடிக்க தயாராகும் டாடா!
-
பைக்கின் விலை பல இலட்சம்... ஆனா ஒருத்தர் மட்டும்தான் போக முடியும்!! பிரபல பாடகர் ஆசையோடு வாங்கிய பைக்!