Just In
- 48 min ago இந்தியாவில் சுஸுகி 2-வீலர்கள் உற்பத்தி 80 இலட்சத்தை கடந்தது!! தொழிற்சாலை எங்கு உள்ளது தெரியுமா?
- 2 hrs ago படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- 3 hrs ago தஞ்சாவூரில் பிறந்து பாலிவுட்டை கலக்கி கொண்டிருக்கும் டைரக்டர்!! புதுசா வாங்கியிருக்கும் காஸ்ட்லீ கார்!
- 3 hrs ago இந்த காரோட உடல் ரொம்ப நீளமா இருக்கும்! டெரிடரி பேருக்கு பதிவு செய்த ஃபோர்டு.. பெரிய சம்பவம் நடக்கபோகுது!
Don't Miss!
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
உங்க காசு கரி ஆகுது... கார் 1 மணி நேரம் ஐட்லிங்கில் இருந்தால் எவ்வளவு பெட்ரோலை குடிக்கும் தெரியுமா?
ஐட்லிங்கில் இருக்கும்போது கார் எவ்வளவு எரிபொருளை நுகரும்? என்பது தொடர்பாக சோதனை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவில் புதிதாக கார் வாங்குபவர்களும், கார் வைத்திருப்பவர்களும் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் விஷயங்களில் எரிபொருள் சிக்கனம் மிகவும் முக்கியமானது. குறிப்பாக காரை வாங்கலாமா? வேண்டாமா? என முடிவு செய்வதில், மைலேஜ் மிக முக்கியமான காரணியாக உள்ளது. ஆனால் இந்திய சாலைகளில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலால், கார்கள் குறைவான மைலேஜையே வழங்குகின்றன.
அதாவது போக்குவரத்து நெரிசல் மிக அதிகமாக இருப்பதால், நகர சாலைகளில் ஊர்ந்து செல்லும் நிலைதான் காணப்படுகிறது. போக்குவரத்து நெரிசல் மிகவும் அதிகமாக இருக்கும்போது, கார் நீண்ட நேரம் ஐட்லிங்கில் (Idling) இருக்க வேண்டிய நிலை உள்ளது. காரின் மைலேஜ் குறைவதற்கு இது ஒரு காரணமாகவும் இருக்கிறது.
அதிலும் கோடை காலங்களில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொண்டால், கார் ஐட்லிங்கில் இருக்கும்போது ஏசி-யையும் பயன்படுத்தியாக வேண்டி இருக்கும். இல்லாவிட்டால் நம்மால் காருக்குள் அமரவே முடியாது. பொதுவாக வெளியில் இருக்கும் வெப்ப நிலையை விட காருக்கும் அதிக வெப்ப நிலை நிலவும். எனவே கோடை காலங்களில் ஏசி இல்லாமல் காருக்குள் அமர்வது கடினம்.
ஆனால் ஏசி ஆன் செய்து வைக்கப்பட்டிருக்கும்போது கார் ஐட்லிங்கில் இருந்தால், எவ்வளவு எரிபொருளை நுகரும் என என்றாவது ஒரு நாள் நீங்கள் யோசித்து பார்த்துள்ளீர்களா? இந்த கேள்விக்கு விடை சொல்லும் விதமாக யூ-டியூப்பில் காணொளி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த காணொளியை, அருண் பன்வார் என்பவர் அவரது யூ-டியூப் சேனலில் வெளியிட்டுள்ளார்.
எதை செயல்படுத்த ஆசைப்படுகிறோம்? என்ற மொத்த திட்டத்தையும் நமக்கு விளக்கும் காட்சிகளுடன் இந்த காணொளி தொடங்குகிறது. இதன்படி இந்த காணொளியில் தோன்றும் நபர் ஒரு எரிபொருள் நிலையத்திற்கு சென்று காரின் எரிபொருள் டேங்க்கை நிரப்பி கொள்கிறார். அதன்பின் அவர் காரில் தனது வீட்டிற்கு செல்கிறார்.
வீட்டிற்கு சென்றவுடன் ஏசி-யை ஆன் செய்து விட்டு, காரை ஐட்லிங்கில் விட்டு விடுகிறார். அத்துடன் டைமரும் ஆன் செய்யப்படுகிறது. சோதனை செய்யப்படும் நேரத்தில், கார் எவ்வளவு எரிபொருளை நுகரும் என்பதை கண்டறிவதுதான் இந்த காணொளியின் நோக்கம். முதலில் ஒரு மணி நேரம் காரை ஐட்லிங்கில் விடுவதற்கு முடிவு செய்யப்பட்டது.
ஆனால் அதன்பின்பு மேலும் 20 நிமிடங்கள் கூடுதலாக ஐட்லிங்கில் விடப்பட்டது. மொத்தத்தில் 1 மணி நேரம் 20 நிமிடங்களுக்கு கார் ஐட்லிங்கில் விடப்பட்டது. ஐட்லிங்கில் இருந்த இந்த நேரம் முழுமைக்கும் ஏசி ஆன் செய்யப்பட்டிருந்தது. மாருதி சுஸுகி பலேனோ பிரீமியம் ஹேட்ச்பேக் கார்தான், இந்த சோதனைக்கு பயன்படுத்தப்பட்டது.
இந்த காரில், 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 83 பிஎச்பி பவரையும், 115 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும். மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது. இந்த சோதனை முடிவடைந்தவுடன், அந்த நபர் காரை மீண்டும் அதே எரிபொருள் நிலையத்திற்கு ஓட்டி சென்றார்.
எரிபொருள் டேங்க்கை மீண்டும் முழுமையாக நிரப்பினால், கடந்த 1 மணி நேரம் 20 நிமிடங்கள் ஐட்லிங்கில் இருந்தபோது கார் எவ்வளவு எரிபொருளை நுகர்ந்தது? என்பதை கண்டுபிடித்து விட முடியும். எனவே அதே எரிபொருள் நிலையத்திற்கு சென்று, அவர் காரின் டேங்க்கை மீண்டும் நிரப்பினார். அப்போது 1.66 லிட்டர் பெட்ரோலை கார் பிடித்தது. அதாவது சுமார் 130 ரூபாய் மதிப்புள்ள பெட்ரோல்.
எனவே ஏசி ஆன் செய்யப்பட்டிருக்கும்போது கார் ஒரு மணி நேரம் ஐட்லிங்கில் இருந்தால் சுமார் 100 ரூபாய் மதிப்புள்ள எரிபொருளை நுகரும். ஆனால் இந்த எரிபொருளில் சிறு பகுதி, சோதனைக்கு முன்பும், பின்பும் எரிபொருள் நிலையத்தில் இருந்து வீட்டிற்கு வரவும், மீண்டும் வீட்டில் இருந்து எரிபொருள் நிலையத்திற்கு செல்லவும் செலவாகியிருக்கும்.
இந்த நபரின் வீட்டில் இருந்து எரிபொருள் நிலையம் சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இதன்படி பார்த்தால், காரின் எரிபொருள் டேங்க்கை முழுமையாக நிரப்பிய பின் 8 கிலோ மீட்டர்கள் வரையில் கார் ஓட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. உண்மையில் இது ஒரு நல்ல சோதனையாகும். கார் நீண்ட நேரம் ஐட்லிங்கில் இருந்தால் எவ்வளவு எரிபொருளை நுகரும் என்பதை இது நமக்கு காட்டியுள்ளது.
-
ஹோண்டா தயாரித்த மின்சார காரா இது! பெரிய பெரிய சூப்பர் கார் பிராண்டுகளே இதோட ஸ்டைலுக்கு முன்னாடி மண்டியிடனும்!
-
இந்தியாவே காத்துகிடந்த 4 சூப்பர் பைக்குகளை அறிமுகம் செய்த அப்ரிலியா! பிராண்ட் அம்பாஸிட்டரான ஹிந்தி நடிகர்!
-
டீசலை எதிர்பாக்காதீங்க.. பெட்ரோல் மட்டும்தான் கிடைக்கும்.. ரொம்ப நாளா எதிர்பார்க்கப்படும் காரில் டுவிஸ்ட்!