Just In
- 3 hrs ago இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- 3 hrs ago 7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க
- 4 hrs ago இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- 5 hrs ago உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
தமிழகத்தில்தான் இந்த கூத்து... பாட்டிலில் பெட்ரோல் விற்க தடை... காரணம் தெரிந்தால் கோவப்படுவீங்க...
தமிழகத்தில் உள்ள பங்க்குகளில் இனிமேல் பாட்டிலில் பெட்ரோல் வழங்க கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
ஒரு இடத்திற்கு சென்று கொண்டிருக்கும்போது, வாகனத்தில் திடீரென பெட்ரோல் தீர்ந்து விட்டால், நமக்கு உதவுவது வாட்டர் பாட்டில்கள்தான். பெட்ரோல் தீர்ந்து விட்ட நிலையில், பங்க் வரை வாகனத்தை தள்ளி கொண்டு செல்வது என்பது சிரமமான காரியம். இது போன்ற இக்கட்டான நேரங்களில், வாட்டர் பாட்டில்கள்தான் நமக்கு கைகொடுக்கும்.
ஒரு பாட்டிலை எடுத்து கொண்டு பங்க்கிற்கு சென்றால், எளிதாக பெட்ரோல் வாங்கி வந்து விடலாம். ஆனால் இதற்கு தமிழக பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கம் தற்போது வேட்டு வைத்துள்ளது. ஆம், தமிழகத்தில் உள்ள பங்க்குகளில் இனிமேல் பாட்டில்களில் யாருக்கும் பெட்ரோல் விற்பனை செய்ய கூடாது என தமிழக பெட்ரோல் உரிமையாளர்கள் சங்கம் அறிவுறுத்தியுள்ளது.
எனவே இனி வாகனங்களில் செல்பவர்களுக்கு மட்டுமே பெட்ரோல் நிரப்பப்படும். அதற்கு பதிலாக பாட்டில் எடுத்து செல்பவர்களுக்கு பெட்ரோல் விற்பனை செய்யப்படாது. தமிழக பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கத்தின் இந்த முடிவிற்கு காரணம் என்ன தெரியுமா? ஐதராபாத் நகரில் அரங்கேறிய ஒரு கொலை சம்பவம்தான் இதற்கு காரணம்.
தெலங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, அரசு பெண் கால்நடை மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, எரித்து கொல்லப்பட்டார். தெலங்கானா மட்டுமல்லாது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை இந்த கொலை சம்பவம் ஏற்படுத்தியது. இது தொடர்பாக 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட பெண் டாக்டரின் சடலத்தை எரிப்பதற்கு, பாட்டிலில் பெட்ரோல் வாங்கியது தெரியவந்தது. எனவே நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் பங்க்குகளில், பாட்டிலில் பெட்ரோல் விற்பனை செய்ய தடை விதிக்க வேண்டும் என ஒரு சிலர் கோரிக்கைகளை முன்வைத்தனர்.
அதனை தமிழக பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கம் ஏற்று கொண்டது. இதன் எதிரொலியாகதான் இனி யாருக்கும் பாட்டிலில் பெட்ரோல் விற்பனை செய்ய கூடாது என அறிவுறுத்தியுள்ளது. ஆனால் பாட்டிலில் பெட்ரோல் விற்பனை செய்ய தடை என்ற உத்தரவிற்கு, சமூக வலை தளங்களில் தமிழக நெட்டிசன்கள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.
இந்த நடவடிக்கை பொதுமக்களை கடுமையாக பாதிக்கும் என்பதே நெட்டிசன்கள் பலரின் கருத்தாக உள்ளது. குறிப்பாக வயதான நபர்கள் வாகனங்களில் செல்லும்போது, திடீரென பெட்ரோல் தீர்ந்து விட்டால், பங்க் வரை அவர்களால் வாகனங்களை தள்ளி செல்ல முடியாது என பெரும்பாலானவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இது தவிர ஒரு சில பெட்ரோல் பங்க்குகளில் பொதுவாகவே யாருக்கும் பாட்டில்களில் பெட்ரோல் விற்பனை செய்ய மாட்டார்கள். வினியோகம் செய்யப்படும் அளவு தெரிந்து விடும் என்பதால், அந்த மோசடியை மறைப்பதற்காகவே, பாட்டில்களில் பெட்ரோல் வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக முன்வைக்கப்படுகிறது.
இப்படிப்பட்ட சூழலில் வெளிவந்துள்ள இந்த அறிவிப்பு கடும் எதிர்ப்பை சம்பாதித்து வருகிறது. எதற்கும் வாகன ஓட்டிகள் இனிமேல் தங்கள் வாகனங்களில் பெட்ரோல் அளவை சரிபார்த்து கொண்டு செல்வது நல்லது. இது தொடர்பான உங்களுடைய கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் தெரியப்படுத்துங்கள்.
Note: Images used are for representational purpose only.
-
புதுசா வாங்கி காசை வேஸ்ட் பண்ணாதீங்க! பைக் ஓட்டி படிக்க செகன்ட் ஹேண்டில் வாங்க பெஸ்ட் பைக்குகள் இது தான்!
-
கார் கப்பல் மாதிரி இருக்காம்! இவ்ளோ மைலேஜ் வேற தருதா! மொத்த கூட்டமும் மாருதி சுஸுகி ஷோரூம்லதான் இருக்கு!
-
ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கிற்கு டிமாண்ட் அதிகமாகிட்டே போகுது!! இந்தியாவின் தேசிய பைக் என சொல்லலாம்!