Just In
- 1 hr ago காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- 3 hrs ago இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- 4 hrs ago வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- 4 hrs ago பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
Don't Miss!
- Movies ’ஹாட் ஸ்பாட்’ விமர்சனம்.. மாப்பிள்ளைக்கு தாலி.. அண்ணன் தங்கை திருமணம்.. இன்னும் இருக்கு!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- News நாடு முழுக்க மாறுகிறது சம்பளம்.. வருகிறது புதிய ஊதிய திட்டம்.. பணியாளர்களுக்கு அடிக்கும் ஜாக்பாட்
- Technology ரூட்டு எடுத்த BSNL.. ரூ.699 போதும்.. 5 மாதங்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. டேட்டா!
- Sports தோனி இனி பேட்டிங் ஆடவே மாட்டார்? சிஎஸ்கே எடுத்த முடிவு.. பெரும் ஏமாற்றம்.. காரணம் இதுதான்
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
ஊழியரை தாக்கி முட்டி போட வைத்து அவமானப்படுத்திய கொடுமை.. ரிசார்ட்டில் பதுங்கிய ஹூண்டாய் டீலர்..
ஹூண்டாய் ஷோரூமில், ஊழியரை தாக்கி தரையில் முட்டி போட வைத்து அவமானப்படுத்திய கொடுமையான சம்பவம் நடைபெற்றுள்ளது.
ஹூண்டாய் ஷோரூமில், ஊழியரை தாக்கி தரையில் முட்டி போட வைத்து அவமானப்படுத்திய கொடுமையான சம்பவம் நடைபெற்றுள்ளது. சமூக வலை தளங்களில் அந்த புகைப்படம் வைரலாக பரவியதாலும், மனித உரிமை ஆர்வலர்களின் முயற்சியாலும், ஹூண்டாய் ஷோரூம் உரிமையாளர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இதுதொடர்பான விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தி நகரில் உள்ள கணேஷ்குரி பகுதியில் முகேஷ் ஹூண்டாய் ஷோரூம் செயல்பட்டு வருகிறது. ரிஷப் ஹிமாட்சிங்கா என்பவர், முகேஷ் ஹூண்டாய் கார் ஷோரூமை நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் ஷோரூமில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.
அப்போது ஊழியர்கள் அனைவரும் கேக் வெட்டி கொண்டாட்டத்தில் திளைத்து கொண்டிருந்தனர். ஆனால் ஒரு ஊழியர் மட்டும் தரையில் முட்டி போட வைக்கப்பட்டிருந்தார். அவர் வலி தாங்காமல் தனது காதுகளை பிடித்திருந்தார். பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இந்த படம் வைரலாக பரவியது.
இதர ஊழியர்களின் முன்னால், தரையில் முட்டி போட வைக்கப்பட்டு அவமானத்திற்கு உள்ளாக்கப்பட்டவரின் பெயர் கமல் தாஸ். முகேஷ் ஹுண்டாய் ஷோரூமில் பணியாற்றி வரும் ஒரு ஊழியர்தான் அவர். ஸ்டாக் ரிஜிஸ்டரை கமல் தாஸ் சரியாக பராமரிக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த முகேஷ் ஹூண்டாய் ஷோரூமின் உரிமையாளர் ரிஷப் ஹிமாட்சிங்கா, ஊழியர் கமல் தாஸின் சட்டையை பிடித்து இழுத்து சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. அத்துடன் இதர ஊழியர்களின் முன்பாக கமல் தாஸை முட்டி போட வைத்து அவமானப்படுத்தியுள்ளார்.
இதர ஊழியர்கள் கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த நேரத்தில், தன்னை தாக்கி முட்டி போட வைத்த சம்பவத்தால், கமல் தாஸ் மன உளைச்சலுக்கு ஆளானார். இதுகுறித்த புகாரின் பேரில், உரிமையாளர் ரிஷப் ஹிமாட்சிங்காவை போலீசார் தற்போது அதிரடியாக கைது செய்துள்ளனர்.
அத்துடன் ரிஷப் ஹிமாட்சிங்காவை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதன்பின் அவர் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார். ஊழியரை அவமானப்படுத்திய ரிஷப் ஹிமாட்சிங்காவின் சார்பில், அவரது இளைய சகோதரர் நிதின் ஹிமாட்சிங்கா இந்த சம்பவத்திற்காக மன்னிப்பு கேட்டு கொண்டுள்ளார்.
அத்துடன் பாதிக்கப்பட்ட ஊழியருக்கு சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு வழங்கப்படும் எனவும் நிதின் ஹிமாட்சிங்கா அறிவித்துள்ளார். இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாது எனவும் அவர் உறுதிபட கூறியுள்ளார்.
ஷோரூம் உரிமையாளர் ரிஷப் ஹிமாட்சிங்கா, ஊழியர் கமல் தாஸை தாக்கி அவமானப்படுத்திய சம்பவம் கடந்த 5ம் தேதி நடைபெற்றுள்ளது. ஆனால் போலீசார் எப்ஐஆர் பதிவு செய்தவுடன், ரிஷப் ஹிமாட்சிங்கா தலைமறைவாகி விட்டார். தற்போதுதான் அவர் போலீஸ் பிடியில் சிக்கியிருக்கிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக ஊழியர் கமல் தாஸ் மட்டும் புகார் அளிக்கவில்லை. அஸ்ஸாம் மாநில ஆட்டோமொபைல் ஊழியர்கள் சங்கம் போன்ற அமைப்புகளும் வரிசையாக புகார் அளிக்க தொடங்கின. இதன் காரணமாகதான் ஷோரூம் உரிமையாளர் ரிஷப் ஹிமாட்சிங்கா கைதாகியிருக்கிறார்.
ஊழியர்களுடன் சேர்த்து மனித உரிமை ஆர்வலர்களும் தனக்கு எதிராக போர்க்கொடி தூக்குவதை அறிந்து கொண்ட ஷோரூம் உரிமையாளர் ரிஷப் ஹிமாட்சிங்கா, அஸ்ஸாம் மாநிலம் சோனாப்பூர் என்ற பகுதியில் உள்ள ரிஷார்ட்டில் சென்று மறைந்து கொண்டார்.
ஆனால் கூடுதல் துணை கமிஷனர் அமிதாப் பசுமட்டாரி தலைமையிலான போலீசார், தீவிர விசாரணை நடத்தி, ரிஷப் ஹிமாட்சிங்காவை கைது செய்திருக்கின்றனர். போலீசார் அதிரடியாக உள்ளே நுழைந்த சமயத்தில், ரிஷப் ஹிமாட்சிங்கா கூலாக ப்ரேக்பாஸ்ட் சாப்பிட்டு கொண்டிருந்துள்ளார்.
Source:Rushlane
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்
-
ஒரு புறாவுக்கு இவ்வளவு பெரிய அக்கப்போரா!! இலவச பஸ் டிக்கெட் இருந்தும் பெரிய தொகையை செலவழித்த பாட்டி - பேத்தி!
-
6ம் மாசத்துக்கு அப்புறம் எப்பே வேணும்னாலும் இந்த காரை இந்தியாவில் எதிர்பார்க்கலாம்! சிட்ரோன் பசால்டு வெளியீடு!
-
ரோட்டோர ஒர்க் ஷாப்பில் 8 கோடி ரூபாய் ரோல்ஸ் ராய்ஸ் கார்! வாங்கறது பெருசு இல்ல! மெயின்டெயின் பண்றதுதான் பெருசு!