Just In
- 23 min ago பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- 27 min ago எலெக்ட்ரிக் ஸ்கூட்டரா இல்ல உல்லாச கப்பலா! இந்தியாவே காத்து கிடக்கும் வண்டிக்கு புக்கிங் தொடங்கியது!
- 1 hr ago இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- 3 hrs ago காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
Don't Miss!
- News இரட்டை இலை.. புது சிக்கல்.. விடாமல் துரத்தும் ஓபிஎஸ் டீம்.. தேர்தல் ஆணையத்திற்கு புகழேந்தி அவசர மனு!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Movies Actor Suriya: புறநானூறு படம் தள்ளிப்போக இதுதான் காரணமா.. இப்படி ஆகிடுச்சே!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
பிரான்ஸிலிருந்து இந்தியா வரும் ரஃபேல் போர் விமானங்கள்... பயணம் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்
இந்தியாவின் பாதுகாப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படும் ரஃபேல் போர் விமானங்கள் அடுத்த சில நாட்களில் இந்தியா வர இருக்கின்றன. இந்த விமானத்தின் வருகை இந்திய தேசத்தின் ஒவ்வொரு குடிமகனின் மனதிலும் பெரும் ஆவலை ஏற்படுத்தி உள்ளது. பிரான்ஸ் நாட்டில் இருந்து இந்தியாவிற்கு ரஃபேல் போர் விமானம் மேற்கொள்ள இருக்கும் பயணம் குறித்த தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.
எல்லையில் சீனா அத்துமீறி வரும் நிலையில், அதனை எதிர்ப்பதற்கு தகுதியான ஆயுதங்களில் ஒன்றாக பிரான்ஸிடம் இருந்து வாங்கப்படும் ரஃபேல் போர் விமானம் மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. டஸ்ஸால்ட் ஏவியேஷன் தயாரிப்பான ரஃபேல் போர் விமானங்கள் தற்காலத்தில் அதிநவீன போர் விமாங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
மொத்தம் 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு ரூ.58,000 கோடியில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில், முதல் தொகுப்பில் 4 முதல் 6 போர் விமானங்கள் வரும் 29ந் தேதி இந்தியா வர இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஹரியானா மாநிலம் அம்பாலா விமானப் படை தளத்தில் முதல் தொகுப்பில் வரும் 6 ரஃபேல் போர் விமானங்களின் முதல் ரஃபேல் விமான படையணி அமைக்கப்பட உள்ளது.
பிரான்ஸ் நாட்டில் இருந்து ரஃபேல் போர் விமானங்களை இந்திய விமானப் படை விமானிகளே இந்தியாவிற்கு இயக்கி வர இருக்கின்றனர். ஏற்கனவே, இவர்கள் பிரான்ஸ் நாட்டில் உள்ள டஸ்ஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்தின் பயிற்சி விமானிகளின் உதவியுடன் முழுமையான பயிற்சி பெற்றுவிட்டனர்.
ரஃபேல் போன்ற தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் போர் விமானங்கள் அதிக எரிபொருளை உறிஞ்சித் தள்ளும். இதனால், ஒருமுறை எரிபொருள் முழுமையாக நிரப்பும்போது அதன் பயணிக்கும் தூரம் குறைவாக இருக்கும். ஆயுதங்கள் தரிக்காமல் செல்லும்போது ரஃபேல் போர் விமானங்கள் அதிகபட்சமாக 3,700 கிமீ தூரம் வரை பயணிக்கும் என்று டஸ்ஸால்ட் நிறுவனம் தெரிவிக்கிறது. ஆனால், ஆயுதங்கள் தரித்து வரும்போது இதன் ரேஞ்ச் வெகுவாக குறையும்.
எனவே, பிரான்ஸ் நாட்டில் இருந்து இந்தியாவுக்கு மிக நீண்ட தூர பயணத்தை மேற்கொள்ளும்போது, எரிபொருளை சுமந்து செல்லும் விசேஷ டேங்கர் விமானங்கள் மூலமாக நடுவானிலேயே எரிபொருள் நிரப்பப்படும். அதாவது, எரிபொருள் குறைந்தால் பின்தொடர்ந்து வரும் டேங்கர் விமானத்தில் இருந்து உடனடியாக எரிபொருள் நிரப்பப்படும்.
பிரான்ஸ் நாட்டில் இருந்து இந்தியா வரும் வழியில் ஐக்கிய அமீரகத்தின் அபுதாபி நகர் அருகே உள்ள அல் தாஃப்ரா விமானப் படை தளத்தில் ரஃபேல் விமானங்கள் தரை இறக்கப்பட்டு பின்னர் இந்தியா வர இருக்கின்றன. தொழில்நுட்ப பரிசோதனை, விமானிகளை மாற்றம் செய்வது மற்றும் விமானிகளின் ஓய்வு உள்ளிட்டவற்றிற்காக இந்த நடைமுறை பின்பற்றப்பட உள்ளது.
பிரான்ஸ் நாட்டில் இருந்து இந்தியா வரும் வழியில் ஐக்கிய அமீரகத்தின் அபுதாபி நகர் அருகே உள்ள அல் தாஃப்ரா விமானப் படை தளத்தில் ரஃபேல் விமானங்கள் தரை இறக்கப்பட்டு பின்னர் இந்தியா வர இருக்கின்றன. தொழில்நுட்ப பரிசோதனை, விமானிகளை மாற்றம் செய்வது மற்றும் விமானிகளின் ஓய்வு உள்ளிட்டவற்றிற்காக இந்த நடைமுறை பின்பற்றப்பட உள்ளது.
அம்பாலா விமானப் படை தளத்தில் வரும் 29ந் தேதி நடைபெற இருக்கும் நிகழ்ச்சியில் ரஃபேல் போர் விமானங்கள் இந்திய விமானப்படையில் முறைப்படி சேர்க்கப்பட உள்ளன. மேலும், சீனா அத்துமீறி வரும் லடாக் கிழக்குப் பகுதி பாதுகாப்புப் பணியில் ரஃபேல் போர் விமானங்கள் ஈடுபடுத்தப்படும்.
ரஃபேல் போர் விமானத்தின் முதல் படையணி அம்பாலா தளத்தில் நிறுவப்படுவதற்கு பல முக்கிய காரணங்கள் உள்ளன. கார்கில் போர் மற்றும் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட பாலகோட் தாக்குதல்களில் அம்பாலா விமானப் படை தளம் மிக முக்கிய பங்கு வகித்துள்ளது. மேலும், டெல்லியில் இருந்து 220 கிமீ தூரத்தில் இருப்பதும், தலைநகர் பாதுகாப்பிலும் இந்த விமானப் படை தளம் கொள்கை ரீதியில் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.
அம்பாலா விமானப் படை தளத்தில் முதல் ரஃபேல் படையணியும், மேற்கு வங்க மாநிலம், ஹசிமராவில் மற்றொரு ரஃபேல் போர் விமானங்கள் படையணியும் நிறுவப்பட உள்ளது. மொத்தம் வாங்கப்படும் 36 விமானங்களில் தலா 18 ரஃபேல் போர் விமானங்கள் இந்த இரண்டு விமானப் படைதளங்களிலும் நிறுத்தப்படும்.
இரட்டை எஞ்சின் கொண்ட ரஃபேல் போர் விமானங்களை எதிரியின் இலக்கு மற்றும் சூழ்நிலைகளை பொறுத்து 780 கிமீ தூரம் முதல் 1,650 கிமீ தூரம் வரையில் தாக்குதல் பணிகளில் ஈடுபடுத்த முடியும். காஷ்மீர் உள்ளிட்ட கடும் குளிர் பிரதேசங்களில் இதனை இயக்க முடியும். அத்துடன், மலைப்பாங்கான பகுதிகளின் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகளில் மிகவும் திறன் வாய்ந்ததாக இருக்கும். வரும் 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஆர்டர் செய்யப்பட்டுள்ள அனைத்து ரஃபேல் போர் விமானங்களும் இந்தியா வந்துவிடும்.
-
பொண்ணு ஆசைப்பட்டதற்காக 3 கோடி ரூபாய் காரை பரிசளித்த அப்பா! இதுக்கு முன்னாடி யாருமே இந்த காரை வாங்குனது இல்ல!
-
சொகுசு வாழ்க்கையில் மிதக்கும் விஜய் பட வில்லன்!! கார்களை விற்றாலே பல தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடலாம்!
-
ஒரு புறாவுக்கு இவ்வளவு பெரிய அக்கப்போரா!! இலவச பஸ் டிக்கெட் இருந்தும் பெரிய தொகையை செலவழித்த பாட்டி - பேத்தி!