Just In
- 2 hrs ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 3 hrs ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 4 hrs ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 5 hrs ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
இது மட்டும் நடந்தா அப்புறம் இந்தியா யாராலும் மிஞ்ச முடியாது...5ஜியால் ஏற்படப்போகும் மாற்றம்
பிரதமர் மோடி இந்தியாவில் 5ஜி சேவையைத் துவங்கி வைத்தார். இதனால் ஆட்டோமொபைல் துறையில் நடக்கவுள்ள மாற்றம் குறித்த விபரங்களைக் காணலாம் வாருங்கள்
பாரத பிரதமர் மோடி இந்தியாவில் கடந்த அக்1ம் தேதி 5ஜி சேவையைத் துவங்கிவைத்தார். 5ஜி என்பது தகவல் தொடர்பு துறையின் அடுத்த தலை முறை வளர்ச்சியாகும். இதன் மூலம் தகவல்களை வேகமாகப் பரிமாறிக்கொள்ள முடியும். தற்போது பயன்பாட்டில் உள்ள 4ஜி முறை விடப் பட மடங்கு வேகத்தில் தகவல்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் பரிமாணமாகும். சரி இதற்கும் ஆட்டோமொபைலுக்கும் என்ன சம்மந்தம் என நீங்கள் கேட்கலாம்.
அதற்கு நாம் முதலில் 5ஜி என்றால் என்ன? என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். நாம் தகவல் தொடர்பில் பெரிய அளவில் வளர்ந்து விட்டோம். இன்று நாம் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குத் தகவல்களை மிக வேகமாகக் கடத்த துவங்கிவிட்டோம். இதில் நீங்கள் கற்பனை கூடச் செய்து பார்க்க முடியாத விஷயமாகத் தான் 5ஜி உருவாகியுள்ளது. தற்போது உள்ள வேகத்தைப் பல மடங்கு கூட்டுகிறது. இதனால் ஒரே நேரத்தில் அதிகமாகத் தகவல்களை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் பரிமாற முடியும்.
இந்த வேகம் ஒவ்வொரு துறையிலும் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக் காத்திருக்கிறது. அந்த வகையில் நாம் இங்கே இந்த 5ஜி தொலைத் தொடர்பு அமைப்பால் ஆட்டோமொபைல் துறையில் என்னென்ன மாற்றங்கள் வரப்போகிறது. புதிது புதிதாக நாம் என்னென்ன விஷயங்களை எதிர்பார்க்கலாம். உள்ளிட்ட தகவல்களைத் தான் நாம் இங்கே காணப்போகிறோம்.
இன்று ஆட்டோமொபைல் துறையில் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனையே விபத்து தான். கார்களில் நாம் பயணம் செய்யும் போது பாதுகாப்பு குறித்த கேள்வி பலருக்கு இருக்கும். தினமும் ஆயிரக்கணக்கான விபத்துக்கள் நடந்து கொண்டே தான் இருக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க 5ஜி தொழிற்நுட்பத்தால் முடியும் என வல்லுநர்கள் கூறுகின்றனர். இதற்காகத் தயாரிக்கப்பட்டுள்ள தொழிற்நுட்பம் தான் V2X எனப்படும் தொழிற்நுட்பம்.
பெரும்பாலான விபத்துக்கள் மனிதர்களின் கவனக்குறைவாலேயே நடக்கிறது அதனால் இந்த பிரச்சனையைத் தவிர்க்க வாகனமே மற்ற வாகனங்கள் மற்ற பொருட்களுடன் தொடர்பை ஏற்படுத்தி அதற்குத் தகுந்தார் போல செயல்படுவது தான் இந்த தொழிற்நுட்பம்.உதாரணமாக இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோத வண்டியை நிலை வந்தால் இந்த தொழிற்நுட்பம் இதை விபத்திற்கு முன்னரே உணர்ந்து இரண்டு கார்களையும் நிறுத்தி விபத்தைத் தடுத்துவிடும்.
இந்த தகவல் தொடர்பு கார்களுக்கு இடையே மட்டுமல்ல சிக்னல்கள், பாலங்கள் என விபத்து ஏற்படும் அபாயம் உள்ள இடங்களில் எல்லாம் தகவல் தொழிற்நுட்பத்தை ஏற்படுத்தி விபத்தைத் தடுக்கும் தொழிற்நுட்பம் தான் இது. இது மட்டும் நடைமுறைக்கு வந்துவிட்டால் விபத்துக்களே பெரும்பாலும் நடக்காது எனச் சொல்லி விடலாம். இந்த 5ஜி தொழிற்நுட்பத்தால் ஆட்டோமொபைல் துறைக்கு இது மட்டும் பலன் அல்ல இன்னும் ஏராளமான பலன்கள் இருக்கிறது.
5ஜி தொழிற்நுட்பம் கார் தயாரிப்பையும் இன்னும் சுலபமாக்கும், கார் தயாரிப்பில் உள்ள பல பணிகளை ஆட்டோமேட் செய்ய முடியும். இந்த தொழிற்நுட்பத்தை பயன்படுத்துவதால் கார் தயாரிப்பு செலவு குறையும், பணிகளை எளிமையாக்க முடியும், குறைவான நேரத்திலேயே பணிகளைச் செய்து முடிக்கவும் முடிவும். இதனால் கார்களுக்கான தயாரிப்பு செலவும் கணிசமாகக் குறையும்.
தற்போது கார்களில் பல ஸ்மார்ட் அம்சங்கள் வந்துவிட்டன. இந்த 5ஜி தொழிற்நுட்பத்தின் மூலம் கார்களை மேலும் ஸ்மார்ட் ஆக்க முடியும். பல உயர் தரத் தகவல்களை கார்களிலிருந்து பெற முடியும். தானியங்கி கார்களை வெகுவாக மேம்படுத்த முடியும். அதிக அளவிலான 3டி தகவல்களை பெற முடியும். இது எல்லாம் அதிக வேகம் மூலம் சாத்தியமாகிறது.
5ஜி தொழிற்நுட்பத்தால் வாகன தயாரிப்பில் மற்றுமொரு மாற்றம் விரைவில் ஏற்படும் எனக் கூறப்படுகிறது. இந்த மாற்றம் ரிமோட் மூலம் வாகனங்களைத் தயாரிக்கும் வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் எதிர்காலத்தில் காரின் அடிப்படையிலிருந்து டெலிவரி வரை ரிமோட் மூலமே செய்து முடிக்க வாய்ப்பு உள்ளது. காரின் உதிரி பாகம் முதல் பாடி வரை எல்லாமே உலகின் எந்த மூலையிலிருந்து வேணாலும் எந்த மூலையிலும் இருக்கும் கார் தயாரிப்பு ஆலையை இயங்க வைக்க முடியும்.
வரும் 2027ம் ஆண்டிற்கும் ஆட்டோமெட்டிக் டிரக்கள் தயாரிக்கப்படலாம். அப்படி தயாராகும் பட்சத்தில் அது இந்த 5ஜி தொழிற்நுட்பத்தின் உதவியால் ரிமோட் மெக்கானிக் முறையில் இயங்கும் திறன் பெற்றிருக்கும். அதாவது டிரக்கள் ரிப்பேர் ஆகி நடுவழியில் நின்றால் அதைச் சரி செய்ய மெக்கானிக் செல்ல வேண்டிய தேவையில்லை. அதை ரிமோட் மூலமே சரி செய்யும் வாய்ப்பும் இனி வரும். இதனால் இனி வாகனங்கள் ரிப்பேர் ஆவது குறைந்துவிடும். அதே நேரம் பயண நேரமும் வெகுவாக குறையும் என எதிர்பார்க்கலாம்.
எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பிலும் 5ஜி தொழிற்நுட்பம் மிகச் சிறப்பாக உதவும் எனக் கூறப்படுகிறது. இதனால் எலெக்ட்ரிக் வாகனங்களில் பேட்டரி மானிட்டரிங் லெவல் சார்ஜிங் ஸ்டேஷனை கண்டுபிடிப்பது, விரைவாகப் பயணிக்கும் சாலையைக் கண்டுபிடிப்பது எனப் பல தகவல்களை இந்த 5ஜி தொழிற்நுட்பத்தால் சாத்தியப்படும் எனக் கூறப்படுகிறது.
5ஜி தொழிற்நுட்பம் தகவல் தொடர்பு துறையை மட்டுமல்ல ஆட்டோமொபைல் துறையையும் புரட்டிப் போடும் என எதிர்பார்க்கலாம். 5ஜி தொழிநுட்பம் இதையெல்லாம் கட்டாயம் செய்யும் என்ற வல்லுநர்களின் கணிப்பிலேயே இது வழங்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் 5ஜி நடைமுறைக்கு வரும் போது மேலும் பல அம்சங்கள், வசதிகள் எல்லாம் வரலாம். இது எல்லாம் என்ன என்னவாக இருக்கும் என நாம் இப்பொழுது கற்பனை கூடச் செய்து பார்க்கமுடியாது என்பதை உண்மை.
-
ஊரே இந்த காரை வாங்க ஆசைப்படுது!இப்ப கையில பணம் இருந்தாலும் உடனே இதை வாங்க முடியாது!
-
சீன நிறுவனம் காரையே புளிப்பு மிட்டாய் கணக்கா உற்பத்தி பண்ணிட்டு இருக்கா.. நம்பவே முடியல 7 மில்லியனை தொட்ருச்சு
-
குடிநீரில் கழுவினால் அபராதம்! பெங்களூர் கார் ஓனர்கள் கையில் எடுத்த புதிய ட்ரிக்! இது நமக்கு தெரியாம போச்சே!