Just In
- 43 min ago ஓலா ஷோரூம் இல்லாத ஊரே இல்ல போல!! இன்னும் சில வருஷத்தில் தெருவுக்கு ஒண்ணும் வந்துவிடும்!
- 1 hr ago அவங்களுக்கு உண்மையாவே கல்யாணமா! பைக் ஓட்டீட்டு போன வீடியோ வைரல்! அதிர்ச்சியில் உறைந்த நெட்டிசன்கள்!
- 2 hrs ago ஓலா டவுசரை கழட்ட திட்டம் போடும் பஜாஜ்! இவ்வளவு கம்மி விலைக்கு சேத்தக் இவி வரப்போகுதா?
- 5 hrs ago 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
Don't Miss!
- Movies Thalaivar171: டைட்டில் ரிலீசுக்கு இன்னும் இரு தினம்.. மீண்டும் கடிகாரத்தை கையிலெடுத்த சன் பிக்சர்ஸ்!
- News 24 மணி நேரம் கழித்து.. வெளியான தமிழக வாக்குப்பதிவு சதவிகிதம்.. இந்தளவுக்கு தாமதம் ஆக என்ன காரணம்
- Finance HDFC வங்கி-யின் இன்ப அதிர்ச்சி.. லாபம், வருவாய் உடன் டிவிடெண்ட் அறிவிப்பு.. முதலீட்டாளர்கள் ஹேப்பி!
- Sports இனி 14 கோடி சிஎஸ்கே வீரருக்கு டாடா பைபை.. பழைய ஆல் - ரவுண்டர் பக்கம் திரும்பிய பிளெம்மிங்
- Lifestyle நீங்க போடுற டீ அமிர்தம் மாதிரி இருக்கணுமா? அப்ப டீ போடுறப்ப இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க...!
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மத்திய அரசே காரணம்: மோடியின் பேச்சால் வெளிவந்த உண்மை..!!!
அந்நிய செலாவணியை சேமிக்க கச்சா எண்ணெய் இறக்குமதியை மத்திய அரசு குறைத்ததாக பிரதமர் மோடி கூறியுள்ளார். இந்தியாவில் கச்சா எண்ணையின் தேவை அதிகரித்துள்ள நிலையில் பிரதமர் மோடியின் இந்த பேச்சு நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.
இந்தியாவில் நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்து வருவதன் காரணமாக பெட்ரோல், டீசல் மற்றும் கச்சா எண்ணெய் தேவைகளும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் ஒரு நாளுக்கு கிட்ட தட்ட 206 மில்லியன் டன் கச்சா எண்ணெய் மக்களால் செலவாகிறது.
கச்சா எண்ணெய் தேவையில் உலகளவில் அமெரிக்கா, சீனாவை தொடர்ந்து இந்தியா 3வது இடத்தில் உள்ளது. மேலும் கச்சா எண்ணெய் பற்றாக்குறை காரணமாக வரும் 2020ஆம் ஆண்டில் கச்சா எண்ணெய் தேவையில் இந்தியா இரண்டாவது இடத்திற்கு செல்ல அதிக வாய்ப்புண்டு என தகவல் அறிக்கை சமீபத்தில் வெளியானது.
அந்நிய செலாவணியை சேமிக்க கச்சா எண்ணெய் இறக்குமதியை மத்திய அரசு குறைந்ததாக பிரதமர் மோடி கூறியுள்ளார். கச்சா எண்ணெய் தேவை இந்தியாவில் அதிகரித்துள்ள நிலையில் மோடியின் இந்த பேச்சு மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் எதிர்க்கட்சியினர் மட்டும் வல்லுநர்கள் இதனை கடுமையாக்க விமர்சித்து வருகின்றனர்.
இந்திய பிரதமர் மோடி மதுரையில் அமையுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல்நாட்டு விழாவில் பங்கேற்க நேற்று தமிழகம் வந்தடைந்தார். விழாவில் பங்கேற்று பின்னர் அங்கிருந்து தனி விமானம் மூலம் கேரள மாநிலம் கொச்சியில் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு வளாக கட்டிடத்தின் அடிக்கல்நாட்டு விழாவில் பங்கேற்றார். விழாவில் கேரள முதல்வர் பினராயி விஜயன், கேரள ஆளுநர் சதாசிவம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் அடிக்கல் நாட்டிய பின் பேசிய பிரதமர் மோடி சுற்றுசூழலுக்கு கேடு விளைவிக்காத எரிபொருட்களை தவிர்த்து சிஎன்ஜி மற்றும் மின்சக்தி போன்றவற்றை மக்கள் பயன்படுத்த மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. மேலும் மக்களின் சிஎன்ஜி மற்றும் மின்சக்தி பயன்பாட்டினை அரசு உறுதிசெய்து வருவதாக மோடி கூறினார்.400 மாவட்டங்களுக்கு விரைவில் பைப்லைன் மூலம் எரிவாயு இணைப்பு வழங்கப்படவுள்ளது. இதனை கருத்தில் கொண்டு வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை மத்திய அரசு குறைத்துள்ளது.
இதனால் நாட்டின் அந்நிய செலாவணியை சேமிக்க முடியும் என்பதால் இந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளதாக பிரதமர் மோடி கூறினார். மக்களுக்கு எல்பிஜி மற்றும் டீசல் உற்பத்தியில் கொச்சி பாரத் பெட்ரோலியத்தின் பங்கு மிக முக்கியமானது. இந்தியாவில் பெட்ரோ கெமிக்கல் மற்றும் இயற்கை எரிவாயுவினை உள்நாட்டிலேயே உற்பத்திசெய்ய மத்திய அரசு ஊக்குவித்து வருவதாக பிரதமர் மோடி கூறினார்.
கடந்த 2018ம் ஆண்டு 6,58,000 பேரல்கள் இறக்குமதி செய்துவந்த இந்தியா மத்திய அரசின் உத்தரவினால் 3,60,000 முதல் 3,70,000 பேரல்கள் வரை இறக்குமதி செய்ய முடிவு செய்தது. முன்பை விட 45 சதவிகிதம் கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைத்தது.
இந்தியாவில் பெட்ரோல் விலை நாளுக்கு நாள் வரும் நிலையில் தற்போது அந்நிய செலாவணியை சேமிக்க கச்சா எண்ணெய் இறக்குமதியை மத்திய அரசு குறைத்ததாக பிரதமர் மோடி கூறியது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம் பெட்ரோல், டீசல் விலைஉயர்வுக்கு மத்திய அரசுதான் முழு காரணமா என மக்களிடையே கேள்வி எழுந்துள்ளது.
பிரதமர் மோடியின் வருகையை எதிர்த்து கடந்த 2018ம் ஆண்டு தமிழகத்தில் #GoBackModi என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் வைரலானது போல தற்போது கேரளவில் #PoMoneModi என்ற ஹேஷ்டேக் தற்போது வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. இது நாடு முழுவது பிரதமர் மோடிக்கு எதிராக வழுக்கும் எதிர்ப்பு அலையை காண்பிக்கிறது.
-
காரை விட அவங்கதான் அழகா இருக்காங்க! விலை உயர்ந்த எலெக்ட்ரிக் வண்டியை வாங்கனது அவங்களா! சொக்கி போன ரசிகர்கள்!
-
100 சதவீதம் வாக்குப்பதிவு கேட்கும் அரசு இதையெல்லாம் கவனிக்க மாட்டாங்களா? விமானங்களின் டிக்கெட் விலை உயர்வு!
-
பெட்டிகடை வச்சிருக்கிறவன் கூட கணக்கு வச்சிருப்பான்! ஆனா இந்திய ரயில்வே நிர்வாகத்திடம் இந்த கணக்கு இல்லையாம்!