Just In
- 56 min ago அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- 1 hr ago ஆணுக்கு இணையா பந்தயத்துக்கு வரிசைக்கட்டி நின்ற பெண் பைக் ரேஸர்கள்!! போட்டி தீயாய் இருந்துச்சு... முழு வீடியோ!
- 3 hrs ago மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- 3 hrs ago ரெனால்ட் டஸ்டர் கார் பற்றி இந்த அப்டேட்காக தான் இந்தியாவே வெயிட்டிங்! இப்பவே ரெடியாக வேண்டியது தான்!
Don't Miss!
- News தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சம்பளம் எவ்வளவு.. இவ்வளவு சலுகைகளா? ஆச்சர்யமான தகவல்கள்
- Technology iPhone-க்கு நெத்தி அடி.. வயர்லெஸ் MagCharge உடன் வந்த முதல் ஆண்ட்ராய்டு போன்.. Samsung இல்லை OnePlus இல்லை..
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- Movies என்னது தனுஷ் இயக்கத்தில் நடிக்கிறாரா ஜிவி பிரகாஷ்?.. அட இது செம விஷயமா இருக்கே
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
மலைவாழ், கிராமப்புற மக்களுக்கு வரப்பிரசாதம்.. முதல் முறையாக இந்தியாவில் போர்ட்டபிள் பெட்ரோல் பங்க்
மலைவாழ் மற்றும் கிராமப்புற மக்களுக்கு வரப்பிரசாதமாக திகழும் போர்ட்டபிள் பெட்ரோல் பங்குகளை இந்தியாவில் அமைப்பதற்கான ஒப்புதலை, மத்திய எரிபொருள் துறை அமைச்சகம் வழங்கியுள்ளது.
மலைவாழ் மற்றும் கிராமப்புற மக்களுக்கு வரப்பிரசாதமாக திகழும் போர்ட்டபிள் பெட்ரோல் பங்குகளை இந்தியாவில் அமைப்பதற்கான ஒப்புதலை, மத்திய எரிபொருள் துறை அமைச்சகம் வழங்கியுள்ளது. எரிபொருள் துறையில் ஓர் புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படும் இந்த முடிவு குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவில் வாகனங்களின் எண்ணிக்கை, ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. அதற்கு ஏற்ப பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் தேவையும் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் புதிது புதிதாய் பெட்ரோல் பங்குகள் முளைத்து கொண்டே உள்ளன.
இந்தியா முழுவதும் தற்போது சுமார் 63,000 பெட்ரோல் பங்குகள் உள்ளன. எனினும் தேவை அதிகமாக இருப்பதால், பெட்ரோல் பங்குகளின் எண்ணிக்கையை, எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகின்றன.
இந்தியாவில் தற்போது வழக்கத்தில் உள்ள பெட்ரோல் பங்குகளை அமைக்க மிக அதிக அளவிலான இடம் தேவை. அதுமட்டுமின்றி அத்தகைய பெட்ரோல் பங்குகளை கட்டமைக்க, அதிக காலம் பிடிக்கிறது. இந்த 2 பிரச்னைகளுக்கும் ஒரே தீர்வாக இருப்பது போர்ட்டபிள் (Portable) பெட்ரோல் பங்குகள்தான்.
உலகம் முழுவதும் தற்போது 35 நாடுகளில், போர்ட்டபிள் பெட்ரோல் பங்குகள் செயல்பட்டு வருகின்றன. என்றாலும் இந்தியாவிற்கு இந்த தொழில்நுட்பம் மிக மிக புதிது. இந்தியாவில் தற்போது வரை போர்ட்டபிள் பெட்ரோல் பங்குகள் கிடையாது.
எனினும் தற்போது இந்தியாவிலும், போர்ட்டபிள் பெட்ரோல் பங்குகள் அமைக்கப்படுவதற்கான காலம் கனிந்திருக்கிறது. செக்குடியரசு நாட்டை சேர்ந்த பெட்ரோகார்டு நிறுவனத்துடன் இணைந்து, இந்தியாவில் போர்ட்டபிள் பெட்ரோல் பங்குகளை அமைக்க, டெல்லியை சேர்ந்த அலின்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இதற்கான அனுமதியை மத்திய எரிபொருள் துறை அமைச்சகம், கடந்த ஆகஸ்ட் 10ம் தேதியே வழங்கி விட்டது. எனவே போர்ட்டபிள் பெட்ரோல் பங்குகளுக்கு தேவையான இயந்திரங்களை உற்பத்தி செய்வதற்கான யூனிட்களை அமைக்கும் பணியில், அலின்ஸ் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.
இதுகுறித்து அலின்ஸ் நிறுவன மேலாண்மை இயக்குனர் இந்தீர்ஜித் ப்ரூத் கூறுகையில், ''போர்ட்டபிள் பெட்ரோல் பங்குகளுக்கு தேவையான இயந்திரங்களை உற்பத்தி செய்யும் யூனிட்களை அமைப்பதற்காக, பல்வேறு மாநில அரசுகள் மற்றும் பெட்ரோலிய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.
நாடு முழுவதும் 4 முதல் 7 யூனிட்கள் வரை அமைக்க திட்டமிட்டுள்ளோம். ஒவ்வொரு யூனிட்டிற்கும் 400 கோடி ரூபாய் முதலீடு செய்யவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது'' என்றார். அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளுக்காக 50,000 போர்ட்டபிள் பெட்ரோல் பங்குகளை உருவாக்க அலின்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
போர்ட்டபிள் பெட்ரோல் பங்க் யூனிட்டை அமைக்கவோ அல்லது அகற்றவோ வெறும் 2 மணி நேரம் போதும். இதற்கான செலவும் குறைவுதான். ஒவ்வொரு போர்ட்டபிள் பெட்ரோல் பங்கின் கொள்ளளவும் மாறுபடும். இதில், 9,000 லிட்டர் முதல் 35,000 லிட்டர் வரையிலான எரிபொருளை சேமித்து வைக்கலாம்.
மலைப்பிரதேசங்கள், கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு, போர்ட்டபிள் பெட்ரோல் பங்குகள் வரப்பிரசாதமாக அமையும். ஏனெனில் அங்கு தேவைப்பட்டால், வெறும் 2 மணி நேரத்தில், போர்ட்டபிள் பெட்ரோல் பங்க்கை அமைத்து விட முடியும். இதற்கு தேவைப்படும் நில அளவு, மிக மிக குறைவு.
போர்ட்டபிள் பெட்ரோல் பங்குகளில், ஆட்கள் இருக்க மாட்டார்கள் என்பதும் கவனிக்கத்தக்கது. டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தி, நாமே தேவையான எரிபொருளை நிரப்பி கொள்ளலாம். இங்கு முதற்கட்டமாக பெட்ரோல் மற்றும் டீசலும், பின்னர் எல்பிஜி உள்ளிட்ட எரிபொருட்களும் விற்பனை செய்யப்படும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்
-
குடிநீரில் கழுவினால் அபராதம்! பெங்களூர் கார் ஓனர்கள் கையில் எடுத்த புதிய ட்ரிக்! இது நமக்கு தெரியாம போச்சே!
-
இது ஏப்ரல் ஃபூல் கிடையாது.. டாடா அல்ட்ராஸ் ரேஸர் கார் ஏப்ரல்ல அறிமுகமாக போகுது! இறங்கி அடிக்க தயாராகும் டாடா!
-
இந்தியாவை ஆட்சி செய்தது போதும்.. ஜப்பான் பக்கம் ஒதுங்குவோம்.. தமிழகத்துல இருந்து ஜப்பான் போகும் புல்லட் 350