Just In
- 23 min ago "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
- 2 hrs ago துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- 2 hrs ago சும்மா ஓட்டி பாக்கலாம்னு ஜீப் விராங்களர் காருல ஏறிட்டீங்க திரும்பி இறங்க மனசே வராது! ஆஃப்-ரோடு அரக்கன்! வீடியோ
- 2 hrs ago ஃபார்ச்சூனர் கார் என்றாலே நம்ம மக்களுக்கு தனி பிரியம்!! விலை அதிகமா இருந்தாலும் ஷோரூமுக்கு படை எடுக்குறாங்க!
Don't Miss!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- News முட்டையை உடைத்து ஆப்ஃபாயில் போடாதீங்க! போலீஸ் பிடிக்கும்.. சேலத்தில் நடந்ததை பாருங்க
- Movies Director Dharani: ஜீப்பை தூக்கினாரா விஜய்.. கில்லி இயக்குநர் தரணி சொன்னது என்ன?
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
வைரலாகும் மஹிந்திரா ஸ்கார்பியோ காரின் போட்டோ! கொஞ்சம் உத்து பாருங்க... விழுந்து விழுந்து சிரிப்பீங்க
ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த புகைப்படம் ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
இந்தியாவில் கார் திருட்டு சம்பவங்கள் மிகவும் அதிக அளவில் நடக்கின்றன. குறிப்பாக பெரு நகரங்களில்தான் அதிக அளவிலான கார் திருட்டு சம்பவங்கள் அரங்கேறுகின்றன. கார்கள் திருடப்படுவதை தடுப்பதற்காக, வாகன உற்பத்தி நிறுவனங்கள் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை தொடர்ச்சியாக அறிமுகம் செய்து வருகின்றன.
ஆனால் அதையும் மீறி ஒரு சில ஹைடெக் கொள்ளையர்கள், கார்களை சுலபமாக திருடி சென்று விடுகின்றனர். எனவே கார் உரிமையாளர்களும் தங்கள் பங்கிற்கு, வாகனங்களை பாதுகாக்க பல்வேறு முயற்சிகளை செய்கின்றனர். கார் திருட்டை தடுப்பதற்கு பெரும்பாலானோர் அதிநவீன தொழில்நுட்பங்களைதான் நம்புகின்றனர்.
ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!
ஆனால் மஹிந்திரா ஸ்கார்பியோ காரின் உரிமையாளர் ஒருவர், அந்த காலத்து டெக்னாலஜியை பயன்படுத்தியுள்ளார். ஆம், அவர் தனது காரை ஒரு மரத்தில் சங்கிலி மூலம் கட்டி வைத்துள்ளார். மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திராவின் கவனத்திற்கு இந்த புகைப்படம் சென்றது. உடனடியாக அவர் அதனை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து விட்டார்.
இதுபோன்ற வித்தியாசமான புகைப்படங்கள், காணொளிகளை ஆனந்த் மஹிந்திரா டிவிட்டரில் பகிர்வது இது முதல் முறை கிடையாது. அவர் டிவிட்டரில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்க கூடியவர். வித்தியாசமான செய்திகள் பலவற்றை அவர் டிவிட்டர் மூலம் மக்களுக்கு கூறி கொண்டுள்ளார். அந்த வகையில்தான் மஹிந்திரா ஸ்கார்பியோ காரை மரத்தில் கட்டி வைத்திருக்கும் புகைப்படத்தை அவர் பகிர்ந்தார்.
''இது அதிநவீன தொழில்நுட்பம் கிடையாது. இருந்தாலும் இந்த காரை யாருடனும் பகிர்ந்து கொள்ள கூடாது என்ற உரிமையாளரின் பொஸஸிவ்னெஸ்ஸை இது காட்டுகிறது. என்னை பொறுத்தவரை, ஊரடங்கில் நான் எப்படி உணர்ந்தேன் என்பதை இந்த புகைப்படம் மிக சரியாக விவரிக்கிறது'' என இந்த புகைப்படத்துடன் ஆனந்த் மஹிந்திரா கருத்து பதிவிட்டுள்ளார்.
அத்துடன், ''இந்த வார இறுதியில் அந்த சங்கிலியை அறுக்க நான் முயற்சிக்க போகிறேன் (முக கவசம் அணிந்து கொண்டு)'' என ஆனந்த் மஹிந்திரா நகைச்சுவையாகவும் பதிவிட்டுள்ளார். டிவிட்டரில் ஆனந்த் மஹிந்திராவை பல லட்சக்கணக்கானோர் பின் தொடர்கின்றனர். அவர்களில் பலர் தற்போது இந்த புகைப்படத்தை ஆர்வமாக பகிர்ந்து வருகின்றனர்.
அதே நேரத்தில் ஆனந்த் மஹிந்திரா சங்கிலியை அறுக்க முயற்சி செய்யப்போவதாக வேடிக்கையாக கூறியதற்கு, அவரை பின் தொடர்பவர்களில் சிலர், ஸ்கார்பியோ காரை பின்னால் எடுத்தால் அது தானாகவே சங்கிலியை அறுக்கும் என நகைச்சுவையாக பதில் அளித்துள்ளனர். அதே சமயம் இன்னும் சிலர், வாகன திருட்டை தடுக்க அதிநவீன தொழில்நுட்பங்கள் அவசியம் என கூறியுள்ளனர்.
எது எப்படியோ இந்தியாவில் கார் திருட்டு சம்பவங்கள் எந்த அளவிற்கு அதிகமாக உள்ளது? என்பதை எடுத்துக்காட்டும் வகையிலும் இந்த புகைப்படம் அமைந்துள்ளது என்பதை மறுக்க முடியாது. எனவே ஆனந்த் மஹிந்திராவை பின் தொடர்பவர்களில் சிலர் கூறியபடி, வாகன திருட்டு சம்பவங்களை தடுக்க, வாகன உற்பத்தி நிறுவனங்கள் இன்னும் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை கண்டறிய வேண்டும்.