Just In
- 12 min ago அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- 17 min ago ஆணுக்கு இணையா பந்தயத்துக்கு வரிசைக்கட்டி நின்ற பெண் பைக் ரேஸர்கள்!! போட்டி தீயாய் இருந்துச்சு... முழு வீடியோ!
- 2 hrs ago மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- 3 hrs ago ரெனால்ட் டஸ்டர் கார் பற்றி இந்த அப்டேட்காக தான் இந்தியாவே வெயிட்டிங்! இப்பவே ரெடியாக வேண்டியது தான்!
Don't Miss!
- Finance 7.50 லட்சம் கோடி ரூபாயை நிதி திரட்டும் மத்திய அரசு.. எதற்காக தெரியுமா..?
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- News "மகளிர் உரிமை தொகை வரல.." அமைச்சரை பேச விடாமல் நிறுத்திய பெண்.. மேடையில் அடுத்து நடந்த பரபர சம்பவம்
- Sports ரோகித்.. ரோகித் என கத்திய ரசிகர்கள்.. ஓங்கி ஒரு அடி விட்ட ஹர்திக் பாண்டியா - வீடியோ
- Movies என்னது தனுஷ் இயக்கத்தில் நடிக்கிறாரா ஜிவி பிரகாஷ்?.. அட இது செம விஷயமா இருக்கே
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
அரசே உருவாக்கும் குறைந்த விலை மின் வாகன சார்ஜிங் கருவி... ரொம்ப ரொம்ப கம்மி விலை... எவ்ளோ தெரியுமா?
மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் இந்திய அரசே குறைந்த விலையில் மின் வாகன சார்ஜிங் பாயிண்டை உருவாக்க திட்டமிட்டிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.
மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் சமீப காலமாகவே மிக தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. ஆனால், தற்போதைய இக்கட்டான சூழ்நிலை (கொரோனா வைரஸ் பரவலால்) இதில் தொய்வை ஏற்படுத்தியுள்ளது. ஆகையால், மின் வாகன ஊக்குவிப்பு பணிகள் சற்று வேகம் குறைந்து காணப்படுகின்றது.
இருப்பினும், இதற்கான பணிகளில் ஈடுபடுவதை அரசும், அரசு சார்ந்த துறைகளும் நிறுத்தவில்லை. இதனை உறுதிப்படுத்தும் வகையில், இந்திய அரசு, குறைந்த கட்டண ஏசி சார்ஜிங் கட்டமைப்பு வசதியை உருவாக்கும் பணியில் ஈடுபட தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்காக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, இந்திய அரசாங்கத்தின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகம் மற்றும் நிதி-ஆயோக் ஆகிய மூன்றும் இணைந்திருக்கின்றன. இந்த கூட்டணியே புதுமையான மற்றும் குறைந்த கட்டண மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் பாயிண்டுகளை நாடு முழுவதும் உருவாக்க இருக்கின்றது.
இது நகர் புறங்களில் மட்டுமின்றி ஊரக (கிராம) பகுதிகளிலும் மின்வாகனங்களுக்கான அடிப்படை வசதியையே உருவாக்குவதே இந்த கூட்டணியின் முக்கி இலக்காகும். குறைந்த கட்டண சார்ஜிங் மையங்களாக இவை இருந்தாலும் அதி-விரைவாக மின் வாகனங்களை இவை சார்ஜ் செய்யும் என கூறப்படுகின்றது.
இந்த சிறப்பு வாய்ந்த மின்சார வாகன சார்ஜிங் பாயிண்டின் முன்மாதிரிகளே தற்போது செய்யப்பட்டிருக்கின்றன. இவற்றை இந்திய தரநிலைகள் ஆய்வகத்தின் (BIS) அங்கீகாரத்திற்காக அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த மின் வாகன சார்ஜிங் பாயிண்ட் ரூ. 3,500 என்ற குறைந்த விலையைக் கொண்டதாக இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிகபட்சமாக 3கிலோவாட் வரையிலான திறன்பாட்டை வெளிப்படுத்தும். எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் எலெக்ட்ரிக் ஆட்டோ ரிக்ஷா போன்ற மின் வாகனங்களுக்கு இது நிச்சயம் உதவும். இக்குறைந்த விலை மற்றும் கட்டணம் கொண்ட மின் வாகன சார்ஜிங் மையங்களை எளிதில் கண்டறிவதற்காக ஸ்பெஷல் ஒன்று அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது.
இந்த ஆப்பினைக் கொண்டு சார்ஜிங் பாயிண்ட் எங்கு இருக்கின்றது என்பதை எளிதில் கண்டறிய முடியும். இதுமட்டுமின்றி, மின் வாகனத்தைச் சார்ஜ் செய்ததற்கான கட்டணத்தையும் செலுத்த முடியும். இது குறைந்த கட்டண சார்ஜிங் மையமாக பயன்பாட்டிற்கு வர இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.
இதேபோன்று தனியார் நிறுவனங்கள் சிலவும் இந்தியாவில் மின் வாகனங்களுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதியை உருவாக்கும் பணியில் ஈடுபட தொடங்கியிருக்கின்றன. எதிர்காலத்தில் மின் வாகனங்களின் ஆக்கிரமிப்பு அதிகமாக இருக்கும் என்பதை கணித்து இந்த நடவடிக்கையில் தனியார் நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.
மால்கள், பொது இடங்கள் மற்றும் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்கள் ஆகியவற்றில் மின் வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்களை முதலில் பயன்பாட்டிற்குக் கொண்டு வர நிறுவனங்கள் திட்டமிட்டு வருகின்றன. இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே மக்களை மின் வாகனங்களின் பக்கம் ஈர்க்கும் வகையில் நாட்டின் அனைத்து மூலைகளிலும் குறைந்த கட்டண சார்ஜிங் மையங்களை பயன்பாட்டிற்கு கொண்டுவர அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, இந்திய அரசாங்கத்தின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகம் மற்றும் நிதி-ஆயோக் ஆகியவை திட்டமிட்டிருக்கின்றன.
தற்போது நாட்டில் அதிகம் எரிபொருளால் இயங்கக் கூடிய (ஐசிஇ எஞ்ஜின்) வாகனங்களே அதிகம் விற்பனையாகின்றன. அதாவது நாட்டில் விற்பனையாகும் ஒட்டுமொத்த வாகனங்களில் 84 சதவீதம் உள்ளெரிப்பு எஞ்ஜின் கொண்ட வாகனங்கள் ஆகும். இந்த எண்ணிக்கையைக் வரும் 2025ம் ஆண்டிற்குள் குறைக்க வேண்டும் என்பதில் தற்போதைய கூட்டணி மிக உறுதியாக உள்ளது.
ஆகையால், குறைந்த விலை கொண்ட மின் வாகன சார்ஜிங் மையங்கள் மிக விரைவிலேயே பயன்பாட்டிற்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு மாதங்களில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
குடிநீரில் கழுவினால் அபராதம்! பெங்களூர் கார் ஓனர்கள் கையில் எடுத்த புதிய ட்ரிக்! இது நமக்கு தெரியாம போச்சே!
-
இது ஏப்ரல் ஃபூல் கிடையாது.. டாடா அல்ட்ராஸ் ரேஸர் கார் ஏப்ரல்ல அறிமுகமாக போகுது! இறங்கி அடிக்க தயாராகும் டாடா!
-
நடிகர் தனுஷை வைத்து படம் எடுத்தவர் இன்று விலையுயர்ந்த காரில்!! ஷோரூமுக்கு குடும்பத்துடன் போய்ட்டாரு!