Just In
- 52 min ago இது கார் இல்ல மிதக்கும் கப்பல்!! புதுசா வாங்கியிருக்கும் இந்த நடிகர் யாரென்று தெரிகிறதா?
- 1 hr ago கார்ல போகும் போது அதிக சத்தமாக பாட்டு கேட்டா இப்படி ஒரு பிரச்சனைவருமா? இது பலருக்கும் தெரியாத விஷயமா இருக்கு
- 1 hr ago இந்த காரை எத்தன பேரு தங்களுக்கு பிடிச்சவங்களுக்கு பரிசா கொடுக்க போறாங்களோ! அஸ்டன் மார்ட்டின் வேன்டேஜ் அறிமுகம்
- 2 hrs ago வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
Don't Miss!
- News காத்திருக்கும் ஆபத்து..ரோட்டுக்கே வந்த ஆர்பி உதயகுமார்! அரெஸ்ட் பண்ணிட்டாங்களாமே! என்ன பிரச்சினை?
- Finance சுட்டெரிக்கும் சூரியன்.. உங்க பர்ஸையும் சுடுகிறது..!! ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய தகவல்..!!
- Technology புதிய கட்டணம்.. அம்பானி போட்ட புது குண்டு.. ஏப்.25 முதல் JioCinema ஆப் முழுசா FREE-ஆ கிடைக்காது!
- Movies என்னது ப்ளூ சட்டை மாறன் ஒரு அரைவேக்காடா?.. பிரபலம் என்ன பொசுக்குனு இப்படி சொல்லிட்டாரு
- Lifestyle Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
அரசே உருவாக்கும் குறைந்த விலை மின் வாகன சார்ஜிங் கருவி... ரொம்ப ரொம்ப கம்மி விலை... எவ்ளோ தெரியுமா?
மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் இந்திய அரசே குறைந்த விலையில் மின் வாகன சார்ஜிங் பாயிண்டை உருவாக்க திட்டமிட்டிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.
மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் சமீப காலமாகவே மிக தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. ஆனால், தற்போதைய இக்கட்டான சூழ்நிலை (கொரோனா வைரஸ் பரவலால்) இதில் தொய்வை ஏற்படுத்தியுள்ளது. ஆகையால், மின் வாகன ஊக்குவிப்பு பணிகள் சற்று வேகம் குறைந்து காணப்படுகின்றது.
இருப்பினும், இதற்கான பணிகளில் ஈடுபடுவதை அரசும், அரசு சார்ந்த துறைகளும் நிறுத்தவில்லை. இதனை உறுதிப்படுத்தும் வகையில், இந்திய அரசு, குறைந்த கட்டண ஏசி சார்ஜிங் கட்டமைப்பு வசதியை உருவாக்கும் பணியில் ஈடுபட தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்காக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, இந்திய அரசாங்கத்தின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகம் மற்றும் நிதி-ஆயோக் ஆகிய மூன்றும் இணைந்திருக்கின்றன. இந்த கூட்டணியே புதுமையான மற்றும் குறைந்த கட்டண மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் பாயிண்டுகளை நாடு முழுவதும் உருவாக்க இருக்கின்றது.
இது நகர் புறங்களில் மட்டுமின்றி ஊரக (கிராம) பகுதிகளிலும் மின்வாகனங்களுக்கான அடிப்படை வசதியையே உருவாக்குவதே இந்த கூட்டணியின் முக்கி இலக்காகும். குறைந்த கட்டண சார்ஜிங் மையங்களாக இவை இருந்தாலும் அதி-விரைவாக மின் வாகனங்களை இவை சார்ஜ் செய்யும் என கூறப்படுகின்றது.
இந்த சிறப்பு வாய்ந்த மின்சார வாகன சார்ஜிங் பாயிண்டின் முன்மாதிரிகளே தற்போது செய்யப்பட்டிருக்கின்றன. இவற்றை இந்திய தரநிலைகள் ஆய்வகத்தின் (BIS) அங்கீகாரத்திற்காக அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த மின் வாகன சார்ஜிங் பாயிண்ட் ரூ. 3,500 என்ற குறைந்த விலையைக் கொண்டதாக இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிகபட்சமாக 3கிலோவாட் வரையிலான திறன்பாட்டை வெளிப்படுத்தும். எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் எலெக்ட்ரிக் ஆட்டோ ரிக்ஷா போன்ற மின் வாகனங்களுக்கு இது நிச்சயம் உதவும். இக்குறைந்த விலை மற்றும் கட்டணம் கொண்ட மின் வாகன சார்ஜிங் மையங்களை எளிதில் கண்டறிவதற்காக ஸ்பெஷல் ஒன்று அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது.
இந்த ஆப்பினைக் கொண்டு சார்ஜிங் பாயிண்ட் எங்கு இருக்கின்றது என்பதை எளிதில் கண்டறிய முடியும். இதுமட்டுமின்றி, மின் வாகனத்தைச் சார்ஜ் செய்ததற்கான கட்டணத்தையும் செலுத்த முடியும். இது குறைந்த கட்டண சார்ஜிங் மையமாக பயன்பாட்டிற்கு வர இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.
இதேபோன்று தனியார் நிறுவனங்கள் சிலவும் இந்தியாவில் மின் வாகனங்களுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதியை உருவாக்கும் பணியில் ஈடுபட தொடங்கியிருக்கின்றன. எதிர்காலத்தில் மின் வாகனங்களின் ஆக்கிரமிப்பு அதிகமாக இருக்கும் என்பதை கணித்து இந்த நடவடிக்கையில் தனியார் நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.
மால்கள், பொது இடங்கள் மற்றும் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்கள் ஆகியவற்றில் மின் வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்களை முதலில் பயன்பாட்டிற்குக் கொண்டு வர நிறுவனங்கள் திட்டமிட்டு வருகின்றன. இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே மக்களை மின் வாகனங்களின் பக்கம் ஈர்க்கும் வகையில் நாட்டின் அனைத்து மூலைகளிலும் குறைந்த கட்டண சார்ஜிங் மையங்களை பயன்பாட்டிற்கு கொண்டுவர அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, இந்திய அரசாங்கத்தின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகம் மற்றும் நிதி-ஆயோக் ஆகியவை திட்டமிட்டிருக்கின்றன.
தற்போது நாட்டில் அதிகம் எரிபொருளால் இயங்கக் கூடிய (ஐசிஇ எஞ்ஜின்) வாகனங்களே அதிகம் விற்பனையாகின்றன. அதாவது நாட்டில் விற்பனையாகும் ஒட்டுமொத்த வாகனங்களில் 84 சதவீதம் உள்ளெரிப்பு எஞ்ஜின் கொண்ட வாகனங்கள் ஆகும். இந்த எண்ணிக்கையைக் வரும் 2025ம் ஆண்டிற்குள் குறைக்க வேண்டும் என்பதில் தற்போதைய கூட்டணி மிக உறுதியாக உள்ளது.
ஆகையால், குறைந்த விலை கொண்ட மின் வாகன சார்ஜிங் மையங்கள் மிக விரைவிலேயே பயன்பாட்டிற்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு மாதங்களில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
சென்னை- கொல்லம் வந்தே பாரத் ரயில் திட்டம் தாமதம்! கேரள அரசு செஞ்ச தப்பு தான் காரணம்!தமிழ்நாடு இதுல சூப்பர்!
-
40அடி நீள சொகுசு படகை வாங்கினாரா நடிகர் மாதவன்! ஒட்டுமொத்த இந்தியாவையும் ஆச்சரியத்துல மூழ்க வச்சுட்டாரு!
-
2.5 லட்சத்தில் எந்த பைக்கை வாங்குவது என தெரியாமல் முழிக்கிறீங்களா? ஹீரோவில் இருந்து ஜாவா வரையில்!!